ஏழாவது பாராளுமன்றம் முதலாவது கூட்டத்தொடர். பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரம் ய்மூல விடைக்கான வினாக்கள் கௌரவ ரவி கருணாநாயக்க, பிரதம அமைச்சரும், பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு, கடந்த இருபது வருடங்களாக மஹபொல புலமைப்பரிசில் வழங்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் எண்ணிக்கையை வருடாந்த அடிப்படையிலும்; மேற்குறிப்பிடப்பட்ட காலப்பகுதியினுள் ஒவ்வொரு வருடமும் இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு பிரவேசித்த மொத்த மாணவர்களது எண்ணிக்கை மற்றும் மேற்குறிப்பிட்ட எண்ணிக்கை ஆகியவற்றின் ஒப்பீட்டையும்; கடந்த ஆறு வருடங்களாக புலமைப்பரிசில் பெறுபவர்களுக்கு உதவித் தொகையாகச் செலுத்தப்பட்ட தொகையை வருடாந்த அடிப்படையிலும்; கடந்த பத்து வருடங்களாக மஹபொல நிதியத்திற்கு கிடைக்கும் வருமானத்தை வருடாந்த அடிப்படையிலும் அவர் இச்சபையில் சமர்ப்பிப்பாரா? இன்றேல், ஏன்? கௌரவ புத்திக பதிரண, பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு, மாத்தறை மாவட்டத்தில் பிற்றபெத்தர பிரதேச சபை ஆளுகைப் பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை தெற்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கதுருவான தேயிலை தொழிற்சாலை ஆறு வருடங்களாக பயன்படுத்தப்படாது கைவிடப்பட்டுள்ளது என்பதையும்; தேசிய வளமொன்றாக உள்ள அத்தொழிற்சாலை பயன்படுத்தப்படாது கைவிடப்பட்டுள்ளதனால் தேசிய பொருளாதாரத்துக்கு பெரும் நட்டம் ஏற்படுகின்றது என்பதையும்; அவர் அறிவாரா? மேற்படி தேயிலைத் தொழிற்சாலையை நிர்மாணிப்பதற்காக செலவான மொத்தத் தொகை எவ்வளவு என்பதையும்; அது பயன்படுத்தப்படாது கைவிடப்பட்டுள்ளமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்; தேயிலைத் தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளை துரிதமாக ஆரம்பித்து பிரதேசத்திலுள்ள தேயிலைப் பயிர்ச் செய்கையாளர்களின் தேயிலைக் கொழுந்துகளை கொள்வனவு செய்வதற்கான முறைமையியல் ஒன்று வகுக்கப்படுமா என்பதையும்; உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமாயின், அதற்கு எடுக்கும் காலம் எவ்வளவு என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? இன்றேல், ஏன்? கெளரவ அஜித் குமார, பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு. சனாதிபதி அவர்களின் கீழ் தற்போது சேவையாற்றுகின்ற ஆலோசகர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்; இவர்களின் பெயர்கள், கல்வித் தகைமைகள் மற்றும் பொறுப்புகள் யாவையென்பதையும்; இவர்களுக்கு செலுத்தப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் யாவையென்பதையும்; கடந்த மாதத்திற்காக செலுத்தப்பட்ட அனைத்து கொடுப்பனவுகளினதும் கூட்டுத்தொகை எவ்வளவென்பதையும் அவர் குறிப்பிடுவாரா? உத்தியோகபூர்வ வாகனங்கள் வழங்கப்பட்டுள்ள ஆலோசகர்களின் பெயர்கள், வழங்கப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் விபரங்கள் யாவையென்பதையும்; இவர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படும் எனின், ஒவ்வொரு ஆலோசகருக்கும் வழங்கப்படுகின்ற எரிபொருள் கொடுப்பனவு தனித்தனியாக யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? இவர்களுக்கு தொலைபேசி வசதிகள் வழங்கப்படுமெனின், தற்போது தொலைபேசி வசதிகள் வழங்கப்பட்டுள்ள ஆலோசகர்களின் பெயர்கள் யாவையென்பதையும்; தொலைபேசிக் கொடுப்பனவுத் தொகையொன்று வழங்கப்படுமெனின் ஒவ்வொரு ஆலோசகருக்கும் வழங்கப்பட்டுள்ள கொடுப்பனவுத் தொகை தனித்தனியாக எவ்வளவென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? இன்றேல், ஏன்? கெளரவ தயாசிறி ஜயசேகர, உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு, புத்தளம் மாவட்டத்தின் பாலக்குடா சந்தியிலிருந்து தலவில புனித அன்னம்மாள் தேவாலயம் வரை செல்கின்ற வீதியை செப்பனிடுவதற்காக ஒதுக்கப்பட்டு்ள்ள பணத் தொகை எவ்வளவென்பதையும்; இக்கருத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்காக மதிப்பீடு செய்யப்பட்டு்ள்ள வீதியின் நீளம் மற்றும் அகலம் எவ்வளவென்பதையும் அவர் குறிப்பிடுவாரா? மேற்படி வீதியை செப்பனிடுவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுக் கொடுக்கும் போது முறையான கேள்விப் பத்திர நடைமுறை பின்பற்றப்பட்டு்ள்ளதா என்பதையும்; மேற்படி வீதியை செப்பனிட்ட நிறுவனத்தின் பெயர், அதன் உரிமையாளரின் பெயர், முகவரி மற்றும் பணிப்பாளர் சபையின் தகவல்கள் யாவையென்பதையும்; வீதியின் நிர்மாணப் பணிகளுக்காக மேற்படி கம்பனிக்குச் செலுத்த வேண்டிய சகல கொடுப்பனவுகளும் தற்போது செலுத்தி முடிக்கப்பட்டு்ள்ளதா என்பதையும்; இன்றேல், மேற்கொண்டும் செலுத்த வேண்டியுள்ள பணத் தொகை எவ்வளவென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? செப்பனிடப்பட்டதன் பின்னர் இந்த வீதியில் பனை அல்லது வேறு வகைத் தாவரங்கள் முளைத்துள்ளனவா; உரிய தரநியமத்தின்படி அமைக்கப்பட்டதன் பின்னர் வீதியின் மீது தாவரங்கள் முளைக்கக்கூடிய சாத்தியத்தன்மை உள்ளதா மேற்படி வீதியில் தாவர வகைகள் முளைப்பதற்கான காரணங்கள் யாவை அவர் குறிப்பிடுவாரா? இன்றேல், ஏன்? கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு, உயர்தரத்தில் சித்தியடைந்த, தனிப்பட்ட மற்றும் பாடசாலை விண்ணப்பதரரிகளின் எண்ணிக்கை; பாடசாலை விண்ணப்பதரரிகளாக தோற்றிய சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல மாணவர்களின் எண்ணிக்கை; தனிப்பட்ட விண்ணப்பதரரிகளாக தோற்றிய சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல மாணவர்களின் எண்ணிக்கை; மாணவர்களின் எண்ணிக்கை பாடத்துறைக்கிணங்க; மாணவர்களின் எண்ணிக்கை மாவட்ட அடிப்படையில் ஆண்டுவரரியாக வெவ்வேறாக எவ்வளவென்பதை அவர் குறிப்பிடுவாரா? அரசாங்கப் பாடசாலைகளில் இருந்த உயர்தர ஆசிரியர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பாடத்துறைக்கிணங்க; தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண பாடசாலைகளுக்கிணங்க; மொழி மூலத்திற்கிணங்க; மாவட்டத்திற்கமைய ஆண்டுவரரியாக வெவ்வேறாக எவ்வளவென்பதை அவர் குறிப்பிடுவாரா? இன்றேல், ஏன்? கெளரவ சஜித் பிரேமதாஸ, நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொதுவசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு, மத்திய வகுப்பினருக்கு சலுகை விலையில் பெற்றுக்கொடுப்பதற்காக மாடி வீடுகளை நிர்மாணித்தல் ஆரம்பிக்கப்பட்ட வருடம் யாதென்பதையும்; இற்றைவரை நிர்மாணப் பணிகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ள மேற்படி மாடி வீடுகளின் எண்ணிகை யாதென்பதையும்; மேற்படி மாடி வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? இன்றேல், ஏன்? கெளரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, பெற்றோலியக் கைத்தொழில்கள் அமைச்சரைக் கேட்பதற்கு, இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கடனிற்கு நிதியீட்டுவதற்காக வெளிநாட்டு மூலத்திடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட உள்ளதா என்பதையும்; இது சம்பந்தமாக முதலீட்டு வங்கியுடனும் மேலே சொல்லப்பட்ட பேச்சு வார்த்தையில் சம்பந்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்ட அதன் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு முகவர்களுடனும் நடைபெறும் பேச்சுவார்த்தையின் நோக்கெல்லையின் விபரங்களையும் அவர் கூறுவாரா? குறிப்பிடப்பட்டுள்ள முகவர்கள், பிரமிட் திட்டங்களின் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் எனவும்; இலங்கையில் அல்லது வேறு இடங்களில் வங்கிகளிடம் அல்லது வியாபார நிறுவனங்களிடம் ஒப்பந்தங்களை அல்லது கடன் கடப்பாடுகளை மீறியதாகவும்; மத்திய வங்கியின் உயர் அதிகரரிகளிடம் நெருங்கிய தனிப்பட்ட உறவையும் வர்த்தக வலைப்பின்னலையும் கொண்டவர்கள் எனவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது சொல்லப்பட்டவர்களை என்பதையும் அவர் குறிப்பிடுவாரா? உங்களுடைய வாடிக்கையாளரை அறிந்து வைத்திருங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பணம், பணம் தூய்தாக்கல் அல்லது பயங்கரவாத நிதியீட்டல் என்பவற்றால் கறைபடாதது என்பதை உறுதிப்படுத்துவதற்கும்; இடரைக் குறைப்பதற்கும் தகுந்த செயன்முறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதையும் அவர் கூறுவாரா? இன்றேல், ஏன்? கெளரவ ரவி கருணாநாயக்க, மின்வலு, எரிசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு, நாட்டினுள் பல்வேறுபட்ட பிரதேசங்களில் அடிக்கடி ஏற்பட்ட மின்சாரத் துண்டிப்பு மின்சார சபை அறியாமலே இடம்பெற்றதா; இன்றேல்,அதற்கான காரணங்கள் யாவை என்று அவர் குறிப்பிடுவாரா? களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் மின்சார சபைக்கு உரித்தான மின் பிறப்பாக்கி இயந்திரங்களுக்கு வழங்கப்பட்ட ஒரு லீற்றர் டீசலுக்காக ஜுன் மாதத்தினுள் செலுத்தப்பட்ட விலை யாது; களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி இயந்திரங்களுக்கு வழங்கப்பட்ட ஒரு லீற்றர் டீசலுக்காக செலுத்தப்பட்ட விலை யாது; களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் எரிபொருள் தாங்கித் தொகுதியின் கொள்ளளவு யாது; மேற்படி கொள்ளளவானது அத்தாங்கிகளில் காணப்பட்டதா என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி இயந்திரங்களை இயக்குவதற்காக ஒரு நாளைக்குத் தேவைப்படும் டீசல் லீற்றர்களின் எண்ணிக்கை யாது ; ஜுலை மாதம் ஏழாம் திகதி, களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி இயந்திரங்கள் அனைத்தும் செயலிழப்பதற்கு, எரிபொருள் காணப்படாமை காரணமாக அமைந்ததா என்பதை அவர் குறிப்பிடுவாரா? இன்றேல், ஏன்? கெளரவ புத்திக பத்திரண, நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு, அம்பாறை மாவட்டத்தில் கல்ஒய திட்டத்தின் ஆரம்பிப்புடன் அமைக்கப்பட்ட அம்பாறை நீர்ப்பாசன திணைக்களத்துக்குச் சொந்தமான “வெளிக்கள விடுதி” அழிவடைகின்றதென்பதை அவர் அறிவாரா? மேற்படி வெளிக்கள விடுதியை துரிதமாக புனரமைத்து அத்திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுடைய தங்குமிட வசதிகளை பூர்த்திச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா; அதற்கான பணம் ஒதுக்கப்பட்டுள்ளதா; ஆமெனில் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாதென்பதையும் அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா? இன்றேல், ஏன்? கெளரவ தயாசிறி ஜயசேகர, கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு, லக் சதொச நிறுவனத்துக்கு அரிசி வழங்கிய வழங்குநர் அல்லது வழங்குநர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் வர்த்தகப் பெயர்கள் யாவை; மேற்படி வழங்குநர்களை தெரிவு செய்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கேள்விப்பத்திர நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதா; ஆமெனில், குறித்த கேள்விப் பத்திரத்துக்காக விலை மனுக்களைச் சமர்ப்பித்த ஏனைய விண்ணப்பதரரிகளின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை; மேற்படி கேள்விப் பத்திரத்துக்கமைய வழங்குநர்களினால் அரிசி வழங்க வேண்டிய கால எல்லை யாது என்பதை அவர் குறிப்பிடுவாரா? இன்றேல், ஏன்? கெளரவ சஜித் பிரேமதாஸ, நிர்மாண,பொறியியல் சேவைகள்,வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு, மஹிந்த சிந்தனை இலங்கையை வெற்றிபெறச் செய்வோம் கொள்கைகளில் ஜனசெவன நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமத்திலும் வருடமொன்றில் தலா இருவத்தி ஐந்து வீடுகளை நிர்மாணிப்பதாக வாக்குறுதியளிக்கப்பட்டு்ள்ளதென்பதை அவர் அறிவாரா? மேற்படி வாக்குறுதியின் பிரகாரம் தற்போது நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு பயனாளிகள் குடியமர்த்தப்பட்டு்ள்ள வீடுகளின் எண்ணிக்கை எத்தனை; மேற்படி வீடுகள் அமைந்துள்ள கிராமங்களின் பெயர்கள் யாதென்பதையும்; வீடொன்றை நிர்மாணிப்பதற்காக செலவிடப்பட்ட தொகை யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? இன்றேல், ஏன்? கெளரவ புத்திக பத்திரண, விளையாட்டுத் துறை அமைச்சரைக் கேட்பதற்கு, உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடர் சம்பந்தமாக இலங்கை கிரிக்கட் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள செலவீனங்கள் பற்றிய அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிப்பாரா? இலங்கை பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டித் தொடரின் ஒளிபரப்பு உரிமை வழங்கப்பட்ட கம்பனியின் பெயர் யாதென்பதையும்; மேற்படி நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று உத்தியோகத்தராக செயற்படுகின்ற நபர் யாரென்பதையும் அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா? உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடருக்காக இலங்கைக்குக் கிடைத்த பெரும் பணத்தொகையிலிருந்து அம்பாந்தொட்டை விளையாட்டு மைதானத்தை அமைப்பதற்கும் ஏனைய மைதானங்களுக்காகவும் செலவிடப்பட்டத் தொகை தனித் தனியாக எவ்வளவென்பதை அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா? இன்றேல், ஏன்? கெளரவ ரவி கருணாநாயக்க, வெளிநாட்டுவேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை அமைச்சரைக் கேட்பதற்கு,— அரசாங்கத்தினால் வேலைவாய்ப்புகளுக்காக இத்தாலி, மலேசியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கையை வருட வரரியாகவும்; இத்தாலி, மலேசியா ஆகிய நாடுகளுக்கு நபர்களை அனுப்புவதன் மூலப்பிரமாணங்களையும்; அந்நாடுகளில் வேலை ஒன்றை வழங்குவதற்கு ஒவ்வொரு நபரிடமும் இருந்து அறவிடப்பட்டுள்ள தொகையையும்; அரசாங்கத்தினால் மேற்படி நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நபர் ஒருவரினது வேலை ஒப்பந்தத்திற்கான கால அளவையும்; அந்நாடுகளில் தொழில்புரியும் நபர் ஒருவரின் சராசரி வேதனத்தையும் அவர் கூறுவாரா? இன்றேல், ஏன்? கெளரவ தயாசிறி ஜயசேகர, கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு, வரரியபொல நகரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வடமேற்கு பொருளாதார மத்திய நிலையத்துக்கு அடிக்கல் நடப்பட்ட திகதி யாது; இதன் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்ட திகதி யாது; இதற்காக மதிப்பீடு செய்யப்பட்ட பணத்தொகை யாது; இதன் நிர்மாணப்பணிகள் பூர்த்தியாகின்றபோது செலவழிக்கப்பட்டுள்ள பணத்தொகை யாது என்பதை அவர் குறிப்பிடுவாரா? மேற்படி பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாது; தற்போது மேற்படி நிலையத்தில் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லையெனில், அதற்கான காரணங்கள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? வரரியபொலவில் பொருளாதார மத்திய நிலையமொன்றினை அமைப்பதற்கு ஏதுவாயமைந்த காரணங்கள் யாவை; மேற்படி மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ள காணியின் உரிமையாளர் யார்; இதற்காக மாதாந்தம் அல்லது வருடாந்தம் குத்தகை அல்லது வாடகை செலுத்தப்படுகின்றதா என்பதை அவர் குறிப்பிடுவாரா? இன்றேல், ஏன்? கெளரவ சஜித் பிரேமதாஸ, நிர்மாண,பொறியியல் சேவைகள்,வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு, மஹிந்த சிந்தனை இலங்கையை வெற்றிபெறச் செய்வோம் கொள்கைகளில் ஜனசெவன நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், முதல் ஐந்து ஆண்டுகளில் வட்டியை மட்டும் செலுத்துவதற்கான வசதியைக் கொண்ட வீடமைப்புக் கடன் திட்டமொன்றை உருவாக்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்டு்ள்ளதென்பதை அவர் அறிவாரா? மேற்படி வாக்குறுதியின் பிரகாரம் உரிய வீடமைப்புக் கடன் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட வருடம் யாதென்பதையும்; இதுவரை மேற்படி வீடமைப்புக் கடன் வழங்கப்பட்டு்ள்ள குடும்பங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்; வீடமைப்புக் கடன் வழங்கப்படும்போது பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்ட அடிப்படை யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? இன்றேல், ஏன்? அனுதாபப் பிரேரணை காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஏ.எம்.டி. ராஜன் பொது அலுவல்கள் ஆரம்பத்தின் போது பிரேரணை முன்னறிவித்தல் பாராளுமன்றச் சபை முதல்வர், பாராளுமன்ற அமர்வு, நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினாலும் பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையினாலும் தடைபெறாமல் இன்றைய தினம் சபை அமர்வு நேரம் பி.ப. 1 மணி முதல் பி.ப. 6 மணிவரை இருக்குமாக. நிலையியற் கட்டளை தொழிற்படுமாக. பிரேரணை முன்னறிவித்தல்களும் தினப்பணிகளும் கெளரவ ரவி கருணாநாயக்க, பாராளுமன்றத்தில் தேசிய கீதம் இசைத்தல், நாட்டில் தேசிய மனப்பாங்கை ஏற்படுத்துமுகமாக பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாக முன்னரும் ஒத்திவைக்க முன்னரும் பாராளுமன்றத்தில் தேசிய கீதம் இசைக்க வேண்டு மென்றும் இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, பலமான இலங்கை அடையாளத்தை ஏற்படுத்துதல், அரச ஆவணங்களில் ஒருவரது சாதியையும் சமயத்தையும் வெளிப்படுத்த வேண்டுமென்ற தேவைப்பாடு பலமான தேசிய அடையாளத்தை ஏற்படுத்துவற்கு தடையாகவும் இடர்ப்பா டகவுமுள்ளதால் இத்தேவைப்பாட்டிலிருந்து விலக்களிக்கப்பட வேண்டுமென்று இப் பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, வர்த்தக நோக்கங்களுக்காக சமயத் தலைவர்களின் உருவங்களை பயன்படுத்துவதை தடைசெய்தல், சகல சமயங்களும் சமமாக மதிக்கப்படல் வேண்டுமென்பதுடன் புத்தபெருமான், யேசுநாதர், சிவபெருமான், முஹம்மட் நபி (ஸல்) அவர்கள் ஆகியேரரின் உருவங்களை வர்த்தக விளம்பரங்களிலோ வேறுவிதமான சமயசார்பற்ற படிவங்களிலோ பயன்படுத்தலை தடைசெய்தலும் வேண்டுமென்று இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, நீதிமன்றங்களை அவமதித்தல் நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சட்டங்களை ஆக்குதல், சகலருக்கும் சமமான நியாயத்தை உறுதிப்படுத்துவதற்காக சனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு பலமான சுதந்திர ஊடகவியலை ஏற்படுத்துவதற்கும் நீதிமன்றங்களை அவமதித்தல் நடைமுறை களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சட்டங்களை ஆக்க வேண்டுமென்று இப்பாராளு மன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, பொதுமக்களின் நலனுக்கான சட்டநடவடிக்கை களுக்காக சட்டங்களை அறிமுகப்படுத்தல், வறிய மக்களின் அடிப்படை உரிமைகள் மீறுதல், அரசாங்க கொள்கைகளில் உள்ளடக்கம் மற்றும் நடாத்துதல், மாநகர சபைகள் அதிகரரிகளினால் பொதுக் கடமைகள் நிறைவேற்றுதல், சமய உரிமைகள் அல்லது அடிப்படை உரிமைகள் மீறுதல் மற்றும் பொதுமக்களை கடனாளிகளாக்குகின்ற அல்லது அவர்களுக்கு மேலதிக பொறுப்புகள் ஏற்படுத்துகின்ற ஊழல்கள் ஆகியவை தொடர்பில் பொதுமக்களின் நலனுக்கான சட்டநடவடிக்கைகளுக்காக சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டுமென்று இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, அரசியல் கட்சிகளினால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு நிதி கணக்காய்வு அறிக்கைகள் சமர்ப்பித்தல், எல்லா அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளினாலும் பெறப்பட்ட வருமானமும் செலவிடப்பட்ட செலவினமும் பற்றிய கணக்காய்வு செய்யப்படுதல் வேண்டுமெனவும் வருடம் தோறும் தேர்தல் ஆணைக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படுதலும் வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, அரச அலுவலர்களுக்கு தண்டனை வழங்குதல், அரச உயர் அலுவலர்கள் தமது சுதந்திர நிலைமையை அரசியல் மயமாக்கி மற்றும் அவர்கள் முறைகேடாக நடந்தால் அதனால் அவர்கள் குற்றவாளிகளாக கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுப் பத்திரங்களை கையளித்து தண்டனை விதிக்கப்பட வேண்டுமென்று இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, ஓய்வு பெறும் வயதெல்லையை நீடித்தல், அரச அலுவலர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை அருவத்தி ஐந்து வருடம்வரை நீடிக்கப்பட வேண்டுமென்றும் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டால் விசேட திறமையுள்ள அரச அலுவலர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை எழுவது வருடம்வரை நீடிக்கப்பட வேண்டுமென்றும் இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, கல்வியைப் பாதுகாப்பதற்காக தரப் பாதுகாப்பு பேரவையொன்றை நிறுவுதல், பொறுப்பற்ற முறையில் பல்கலைக்கழக பெயர்களை பாவித்து இலங்கையினுள் பல கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்படுவதனால் கல்வியை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாப்பதற்காக “தரப் பாதுகாப்பு பேரவையொன்றை” சட்டத்தின் மூலம் உடனடியாக நிறுவ வேண்டுமென்று இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, "விசேட வழக்குத் தொடுநர்" எனப்படும் பதவியொன்றை உருவாக்குதல், அரச சேவை அரசியல் தலையீடுகளிலிருந்து விலக்குவதற்காக சுதந்திர ஆணைக்குழுக்கள், அரசாங்க கணக்குக் குழு, அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு ஆகியவற்றினால் நிறுவனங்களில் செயற்றிறமை பாதிக்கின்ற மோசடிகள், ஊழல்கள், செயற்திறமையில்லாமை ஆகியவற்றை கண்டுபிடித்த உடனே பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்காக அவற்றுக்கெதிராக வழக்குத் தொடுக்கப்படுவதற்கு ‘‘விசேட வழக்குத் தொடுநர்” எனப்படும் பதவியொன்று உருவாக்கப்பட வேண்டுமென்று இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, பணவீக்கத்திற்குப் பொருத்தமான வகையில் கொடுப்பனவு ஒன்று ஊழியர்களுக்கு செலுத்துதல், அரச நிறுவனங்களினால் நிர்வகிக்கப்படும் ஊழியர் சேமலாப நிதிய மற்றும் ஊழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதிய பணங்களை செலுத்துவதில் ஒவ்வொரு வருடத்திற்கான பணவீக்க அளவுக்கு மேலதிகமாக கொடுப்பனவு ஒன்று ஊழியர்களுக்கு செலுத்துவதை உறுதிப்படுத்த வேண்டுமென்று இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, சிரேஷ்ட பிரசைகளுக்கு இலவச பயண வசதிகள் ஏற்பாடு செய்தல், சகல சிரேஷ்ட பிரசைகளுக்கும் பொதுப்போக்குவரத்துச் சேவைகளில் இலவச பயண வசதிகளை ஏற்பாடு செய்துதர வேண்டுமென்று இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, தகராறுகள் தீர்க்கும் நிலையமொன்றை உருவாக்குதல், பல இன, மத மக்கள் வாழும் இலங்கையில் சமாதானத்திற்கு பங்கம் ஏற்படும் சவால்களை எதிர்நோக்குகின்றமையினால் அவைகளை இலங்கையிலும், பிராந்தியத்திலும் மற்றும் முழு உலகத்திலும் தீர்ப்பதற்காக பெளத்த, கிரிஸ்தவ, இந்து மற்றும் இஸ்லாம் ஆகிய மதங்களின் ஒழுக்க நெறிகளைக் கொண்ட, தகராறுகள் தீர்க்கும் நிலையமொன்றை உருவாக்க வேண்டுமென்று இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, ஓய்வு ஆகிய பணிக்கொடையை தாமதமின்றி பெற்றுக்கொடுத்தல், இதுவரை ஓய்வூதியப் பணிக்கொடையைப் பெற்றிராத ஓய்வு பெற்றவர்களுக்கு அப்பணிக்கொடையை தாமதமின்றி பெற்றுக்கொடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, தேசிய கொள்கையாக்க சபை ஒன்றினை நியமித்தல், முறைசார் தேசிய கொள்கை மற்றும் திட்டவாக்கம் தொடர்பில் அரசியல்வாதிகள், மற்றும் விடயம்சார் அதிகரரிகளைக் கொண்டதும் அரசாங்கம் மாறும்போது மாறாததுமான விசேட அதிகாரங்களைக் கொண்ட தேசிய கொள்கையாக்க சபையொன்று நியமிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் தொடர்பில் சட்ட அதிகாரங்களைக் கொண்டதோர் அலகை ஏற்படுத்தல், வெளிநாடுகளில் வேலைசெய்வோர்கள் முகம் கொடுக்க வேண்டி ஏற்படுகின்ற தாக்குதல்கள், ஆட்கடத்தல், கற்பழிப்பு, பெண்களை இழிதொழிலில் ஈடுபடுத்தல், ஆட்கொலைகள் மற்றும் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு தொடர்பில் செல்லும்போது இடம்பெறுகின்ற மோசடிகள், வெளிநாடுகளில் அகதிகளாக்கப்பட்டுள் ளவர்களை திரும்ப அழைத்துக்கொள்ளல் மற்றும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் செயற்படக்கூடிய சட்ட அதிகாரங்களைக் கொண்டதோர் அலகு ஏற்படுத்தப்பட வேண்டு மென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, புதிய கண்டுபிடிப்பாளர்களை உலகிற்கு அறிமுகப்படுத்து முகமாக தேசிய திட்டமொன்றினை உருவாக்குதல், புதிய கண்டுபிடிப்பாளர்களையும் பலதரப்பட்ட திறமைகளைக்கொண்ட பிரசைகளையும் உலகத்திற்கு அறிமுகப்படுத்து வதற்காகவும் அவர்களது திறமைகள் உருவாக்கங்களை மேம்படுத்துவதற்காகவும் தேசிய திட்டமொன்றினை வகுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. 18. கெளரவ ரவி கருணாநாயக்க, உள்ளூர் மூலவளங்களை பயன்படுத்தும் கைத்தொழிலாளர்களுக்கு வரிச்சலுகைகள் வழங்கல், உலகச் சந்தைக்காக உள் நாட்டு மூலவளங்களைப் பயன்படுத்தி உற்பத்திகளை மேற்கொள்ளும் உள்நாட்டு கைத்தொழிலாளர்களுக்கு இரண்டு வருடகால வரிச்சலுகை வழங்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, தோட்ட சமுதாயத்திற்கு பிரசாவுரிமை வழங்குதல், இலங்கைப் பிரசாவுரிமையற்ற சகல தோட்டப்புற மக்களிற்கும் அவர்களது விருப்பத்தின் பேரில் பிரசாவுரிமை வழங்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, தீவிலேயுள்ள ஆரம்பப் பாடசாலை மாணவர்களிற்கு ஒரு கோப்பைப் பால் வழங்குதல். தீவிலேயுள்ள சகல ஆரம்பப் பாடசாலை மாணவர்களிற்கும் காலையில் இலவசமாக ஒரு கோப்பை பால் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியங்களை ஒரு வாரகாலத்தினுள் விண்ணப்பதரரிகளுக்கு பெற்றுக் கொடுத்தல், ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியங்களை மீளப்பெற விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு வார காலத்தினுள் அவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு உரிய திட்டமொன்றினை வகுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, பாடசாலை மாணவர்களுக்கு இலவசப் பயணச் சீட்டு வழங்குதல், பாடசாலை மாணவர்கள் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை பேரூந்துகளில் பிரயாணம் செய்வதற்காக இலவச பயணச்சீட்டுக்களை வழங்குகின்ற முறையொன்றினை அறிமுகப்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, விளையாட்டுப் பாடசாலைகளை அமைத்தலும் தேசிய விளையாட்டுக் கொள்கையினை வகுத்தலும், நீண்ட கால இலக்குடைய தேசிய விளையாட்டுக் கொள்கையினை வகுப்பதற்கான நடிவடிக்கைகளை எடுப்பதற்கான முதல் கட்டமாக சகல மாவட்டங்களையும் உள்ளடக்கூடிய வகையில் விளையாட்டரங்கு, விளையாட்டு மைதானம், விளையாட்டு உபகரணங்கள், விளையாட்டு போதனாசிரியர் களைக் கொண்ட உயர் மட்ட விளையாட்டுப் பாடசாலைகளை அமைக்க வேண்டுமென்று இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, தேசிய மொழிகளிற்கான கல்விப் பீடமொன்றினை நிர்மாணித்தல், ஆசிரியர்களிற்கு சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளை கற்பிப்பதற்காக தேசிய மொழிகளிற்கான கல்விப்பீடமொன்றினை நிர்மாணிக்க வேண்டு மென்று இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, அரசாங்க தகவல்களை சுதந்திரமாக பெற்றுக் கொள்வதற்காக சட்டங்களை இயற்றுதல், அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையை பேணுவதற்கும் பொதுமக்கள் அனைத்து அரசாங்க தகவல்களையும் சுதந்திரமாக பெற்றுக் கொள்வதற்கான உரிமைக்காகவும் பாராளுமன்றத்தில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, இலங்கையர்களுக்கு மிகவும் சிறந்த சுகாதார வாய்ப்புக்களை வழங்குதல், மக்களில் அதிகமானோர் இருதய சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய தேவை உடையவர்களாய் இருப்பதால் இலங்கையர்களுக்கு மிகவும் சிறந்த சுகாதார வாய்ப்புக்களை வழங்க வேண்டியிருப்பதாலும் அதற்காக தனியார் துறை ஊழியர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியம் அல்லது ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தினூடாக இலவசமாக வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என்றும் அரசாங்க ஊழியர்கள் அல்லது தொழிலற்றோருக்கு அதற்கான முழு செலவையும் அரசாங்கத்தினால் சனாதிபதி நிதியத்தினூடாக வழங்குதல் வேண்டுமென்றும் இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, உலக சுற்றாடலை பாதுகாத்தல், இலங்கை உலக சுற்றாடலை பாதுகாக்கும் பொருட்டு கூடிய கவனம் செலுத்த வேண்டுமென்பதோடு புவி வெப்பமாதலை தவிர்ப்பதற்காக குறிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, பாராளுமன்ற நடவடிக்கைகளை ஒளிபரப்புதல், தொலைக்காட்சி அல்லது இணையம் மூலமாக பாராளுமன்ற நடவடிக்கைகள் நேரடியாக அல்லது தணிக்கை செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, வெளிநாடுகளில் வசிக்கின்ற இலங்கையர்களுக்கு வாக்களிப்பதற்கான அனுமதியை வழங்குதல், வெளிநாடுகளில் வசிக்கின்ற இலங்கையர் களுக்கு எதிர்கால தேர்தல்களில் வாக்களிப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, இலத்திரனியல் வாக்களிப்பு முறைமையினை அறிமுகப்படுத்துதல், தற்போதுள்ள பழைமையான வாக்களிப்பு முறைமைக்குப் பதிலாக இலத்திரனியல் வாக்களிப்பு முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ அஜித் குமார, காலி கோட்டை மற்றும் அதனை அண்டியுள்ள வரலாற்று ரீதியான மற்றும் தொல்பொருள் மரபுரிமைகளைப் பாதுகாத்தல், மேம்படுத்தல் மற்றும் உரிய பயனைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்தல், சுற்றுலா கைத்தொழில் துறையின் மிக முக்கியமான மையமாகவும், வரலாற்று மற்றும் தொல்பொருள் ரீதியில் பெறுமதியைக்கொண்டதும், உலக மரபுரிமையாகக் கருதப்படுகின்றதுமான காலி கோட்டை மதில், காலி கோட்டையின் உள்பகுதியிலும் காலி கோட்டையை அண்டியும் அமைந்துள்ள வரலாற்று மற்றும் தொல்பொருள் ரீதியான மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் அவற்றுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களினதும் மக்களினதும் பங்கேற்புடன் முறையான திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி இந்த வரலாற்று ரீதியான மரபுரிமைகளின் உரிய பயனை நமது நாடு பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, தேருநர் இடாப்பை அடிக்கடி இற்றைப்படுத்துதல், தேருநர் இடாப்பு வருடத்தில் மாதமொன்றுக்கு முப்பது நாட்களுக்கு மட்டும் இற்றைப்படுத்தும் பட்டியலொன்றாக அல்லாமல் அது அடிக்கடி இற்றைப்படுத்தும் திறந்த பட்டியலொன்றாக இருத்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் ஈடுபட்டுள்ளோருக்கு ஓய்வூதிய முறையொன்றை அறிமுகப்படுத்துதல், வெளிநாடுகளுக்குச் சென்று மிகவும் சிரமத்திற்கு மத்தியில் உழைக்கும் செல்வத்தை, இலங்கையின் செல்வத்தை அதிகரிப்பதற்காக அனுப்புகின்ற, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளவர்களை மதிக்கும் வகையில் ஓய்வூதிய முறையொன்றை பெற்றுக்கொடுத்தல் வேண்டுமேன இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, சேவையில் இருந்த ஆயுதப் படையினருக்காக ஓய்வூதிய முறையொன்றை அறிமுகப்படுத்தல், பாராளுமன்ற உறுப்பினர்கள்ஐந்து வருட சேவைக்காலத்தை பூர்த்திசெய்த பின்னர் ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு தகைமைபெறுகின்றதனால் ஆயுதப் படைகளில் வருடங்கள் பூர்த்தி செய்யாத போதிலும் திகதிக்குப் முன்னர் சேவையில் இருந்த ஆயுதப் படையினருக்கும் ஓய்வூதியம் பெற்றுக்கொடுக்கப்படல் வேண்டும் என இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, வலது குறைந்ததும் நடமாடமுடியாததுமான நபர்களுக்கு விசேட வடிவங்களை அறிமுகப்படுத்துதல், சட்டத்தில் குறிப்பிடப்படுகின்றவாறு வலது குறைந்தேரரின் வசதிகளை உறுதிப்படுத்தவும் அவர்களிடமுள்ள வினைத்திறனை அதிகரிப்பதற்காகவும் அவர்கள் தேவையற்ற விதத்தில் பிறர்மீது தங்கிருப்பதைக் குறைப்பதற்காகவும் அரசாங்கத்தின் அனைத்து புதிய கட்டிடங்கங்களிலும் விசேட வடிவமொன்றை அமைக்க வேண்டும் என இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்தல், பதிவுசெய்திருந்தும் வாக்களிப்பதற்கான வாய்ப்புக்கிடைக்காத வாக்காளர் அநேக எண்ணிக்கையானோர் இருப்பதனாலும் வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் தேருநர் இடாப்பில் பெயர் குறிப்பிடப்பட்டதன் பின்னர் வாக்களிக்காத நபர்களிடமிருந்து தண்டப் பணமொன்றை அறவிவிடுதல் வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, ஊழலற்ற உலகொன்றை உறுதிப்படுத்தல், ஊழலை முற்றாக ஒழிப்பதற்காக இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து உலகிலுள்ள பாராளுமன்ற அமைப்புக்களில் சேர வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, ஏமாற்றப்பட்ட பண வைப்பாளர்களுக்கு தமது நிதிகளை மீளச் செலுத்துவதினால் போலி நிதி நிறுவனங்களில் தமது பணத்தை வைப்பிலிட்டு அதனால் ஏமாற்றமடைந்த அநேகமானோர் இருப்பதனாலும் கடந்த தேர்தல் பிரசாரங்களில் இந்த அரசாங்கம் பண வைப்பாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அவற்றின் மிகுதிப் பணத்தை மீளச் செலுத்த வாக்குறுதி அளித்திருப்பதனாலும் மத்திய வங்கி இந்நிறுவனங்களின் பொறுப்பாளராக இருப்பதனால் மிகவும் வினைத்திறனுடன் செயற்படவேண்டுமென்பதோடு பண வைப்பாளர்களுக்கு அவர்களது மிகுதிப் பணத்தை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, சமாதான நீதவான் பதவிகளை வழங்குவதற்கான முறையான வழிமுறையொன்றைத் தயரரித்தல், சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றதும் சமுகத்திற்கு அளப்பரிய சேவையாற்றுவதுமான சமாதான நீதவான் பதவிகள், ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதிகளுக்குப் புறம்பாக வழங்கப்படுவதன் காரணமாக அப்பதவியின் கெளரவமும் அங்கீகாரமும் படிப்படியாக குறைவடைவதனால் குறித்த நியமனங்களுக்கென முறையான வழிமுறையொன்றைத் தயரரிக்க வேண்டுமென இப்பாராளுன்றம் கருதுகின்றது. கெளரவ புத்திக பதிரண, சுனாமி அனர்த்தத்தினால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணல், சுனாமி அனர்த்தம் காரணமாக ஏதேனும் பிரச்சினைக்கு முகம் கொடுத்து இது வரை அப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காமல் இருப்பின், பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் மாவட்ட செயலாளர் பிரிவு அடிப்படையில் ஆராய்ந்து, அவர்கள் முகம்கொடுத்துள்ள அல்லது தற்போது முகம்கொடுக்கும் பிரச்சினைகளை குறைப்பதற்கான வினைத்திறன்மிக்க வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. 41. கெளரவ புத்திக பதிரண, வீட்டிலிருந்து தொழில் புரிவோருக்கான தேசிய கொள்கையொன்றை வகுத்தல், இலங்கையில் பலதரப்பட்ட தொழில் வாய்ப்புத் துறைகளில் பல தரப்பட்ட உற்பத்திப் பணிகளில் ஈடுபடும் சுமார் பத்து இலட்சம் பேர்களான வீட்டிலிருந்து தொழில் புரிவோர்களுக்காக அரசியல் அதிகாரம் வாய்ந்தோர்கள், அதனுடன் தொடர்புபட்ட சகல துறைகளினதும் தேர்ச்சிபெற்றவர்கள் புத்தி ஜீவிகள் உட்பட அரச, மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியைப் பெற்று முறையான தேசிய கொள்கையொன்றை வகுத்து அதனை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. 42. கெளரவ புத்திக பதிரண, நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளமுடியாதுள்ள வயற்காணிகளை பயனுள்ள நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துதல், வயற் காணிகளை நிரப்புவதற்கான சட்டம் மீறப்படாத வகையில், ஒழுங்குமுறையான ஆய்வு ஒன்றின் மூலம் இனங்காணப்பட்டதன் பின்னர் எவ்வகையிலும் நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ள முடியாத வயற் காணிகளில் பயனுள்ள விவசாய உற்பத்திகளை மட்டும் பயிரிடுவதற்கும், நிர்மாணப் பணிகளுக்காக எவ்வித வாய்ப்புகளும் கிடைக்காத வகையிலுமான நிகழ்ச்சித் திட்டங்களை வகுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, அரச சேவையைச் சேர்ந்த ஓய்வூதியம் பெறுபவர்களின் சம்பள முரண்பாட்டினை நீக்குதல், சம்பள மீள்திருத்த சுற்றறிக்கையின் பிரகாரம் திகதியிலிருந்து அமுலாகின்றவாறு அரச ஊழியர்களுக்கு சம்பள மாற்றம் வழங்கப்பட்டமையால் திகதிக்கு முன்னர் ஓய்வுபெற்ற மற்றும் அதன் பின்னர் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கிடையில் பரரிய சம்பள முரண்பாடு நிலவுவதால் அதனை நீக்குவதற்கான ஒரு தேசிய வேலைத்திட்டம் தயரரிக்கப்படுதல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, மாவட்ட மட்டத்தில் தகவல் மத்திய நிலையங்களை நிறுவுதல், புவியியல் அமைவு, வரலாற்றுப் பின்னணி, பயிரிடப்படும் பயிரினங்கள், வீதி முறைமை அரச அலுவலகங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், புகையிரத நிலையங்கள் மற்றும் பேரூந்து தரிப்பிடங்கள் ஆகிய அனைத்து தகவல்களும் கணனிமயப்படுத்தப்பட்ட மற்றும் ஆவணப்படுத்தப்பட்ட தகவல் மத்திய நிலையங்களை நிறுவுவதற்கும், அதன் முதலாவது கட்டத்தின் போது மகாகாண மட்டத்திலும் இரண்டாவது கட்டத்தின் போது மாவட்ட மட்டத்திலும் மூன்றாவது கட்டத்தின் போது பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேச மட்டத்திலும் இந்நிலையங்களை நிறுவவேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, இலங்கையில் அறநெறி பாடசாலைகளின் கல்வி மற்றும் நிர்வாகத்தை ஒழுங்கு முறைப்படுத்தல், இலங்கையில் சகல மதங்களினதும் அறநெறி பாடசாலைகளின் கல்வி மற்றும் நிர்வாகத்தை மேலும் ஒழுங்கு முறைப்படுத்துவதற்கும் பெளத்த அறநெறி பாசாலைகளில் காணப்படும் அறநெறி இறுதிப் பரீட்சை மற்றும் அறநெறி தர்மாசார்ய பரீட்சை மற்றும் சகல மதங்களினதும் அறநெறி பாடசாலைகளில் நடாத்தப்படும் இவற்றுக்கு இணையான பரீட்சைகளின் சான்றிதழ்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்குதலும், அறநெறிப் பாடசாலைக்கு தொடர்ச்சியான மனித வளங்களுடன் பெளதீக வளங்களையும் வழங்குவதன் மூலம் அறநெறிப் பாடசாலைகளுக்கு சமுகமளிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு துரித வேலைத்திட்டமொன்றை வகுத்தலும் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, நாய்கள், பூனைகள் போன்ற செல்லப் பிராணிகளை வளர்த்தல் தொடர்பான சட்டங்களை வகுத்தல், வீடுகளில் அல்லது விற்பனை செய்வதற்காக வளர்க்கப்படும் நாய்கள், பூனைகள் போன்ற செல்லப்பிராணிகளை உள்ளூராட்சி நிறுவனங்களில் பதிவு செய்யத் தேவையான சட்டங்கள் வகுக்கப்பட வேண்டுமென்பதோடு, குறித்த பிராணிகளின் குட்டிகளை, சட்டரீதியான அனுமதி பெற்ற நிலையங்களில் மாத்திரம் விற்பனை செய்தல் வேண்டுமெனவும் அவ்வாறல்லாத இடங்களில் வளர்க்கப்படும் பெண்ணினப் பிராணிகளை கட்டாயமாக மலடாக்கலுக்கு உட்படுத்துவதற்கும், தேவையான சட்டங்கள் வகுக்கப்படவேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, தொழில் சந்தைக்குத் தேவையான ஊழியர்களை பயிற்றுவித்தல், எதிர்காலத்தில் இலங்கையில் உருவாகும் புதிய தொழில் வாய்ப்புகளுக்குத் தேவையான ஊழியர்களைப் பயிற்றுவிக்கும் வழியொன்றைத் தொடங்கி வைக்கும் பணியை மிகவும் வினைத்திறனான வகையில், நாட்டினுள் காணப்படும் அனைத்து மூன்றாம் நிலைக்கல்வி நிறுவனங்களினூடாக ஆரம்பித்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, பொதுநிர்வாக கட்டமைப்பை மறுசீரமைத்தல், தற்சமயம் பொதுநிர்வாக அமைச்சினால் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் எல்லைகளை மீள நிர்ணயிப்பதற்கனான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதோடு அவ்வாறு எல்லை நிர்ணயம் செய்யப்படும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளினூடாக புதிய பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேச எல்லைகளையும் புதிய மாவட்ட எல்லைகளையும் நிர்ணயிக்க வேண்டுமெனவும், இவ்வாறு நிர்ணயிக்கப்படும் பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசங்கள் உள்ளூராட்சி மன்ற ஆளுகைப் பிரதேசங்களாக மாற்றியமைக்க வேண்டுமெனவும், அத்தகைய ஆளுகைப் பிரதேசத்தினுள் கோட்டக் கல்வி அதிகாரப் பிரதேசம், பொலிஸ் அதிகாரப் பிரதேசம், கமநல சேவைகள் அதிகாரப் பிரதேசம், பிரதேச சுகாதார சேவை உத்தியோகத்தர் அதிகாரப் பிரசேதம் உள்ளிட்ட சகல அரச நிறுவனங்களினதும் அதிகாரப் பிரதேச எல்லைகள் உள்ளடங்கும் வகையில் ஒட்டுமொத்தமான பொதுத்துறைக் கட்டமைப்பும் திருத்தப்பட வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, நில்வளா கங்கை திட்டத்தின் எதிர்கால அபிவிருத்திப் பணிகளை மீள ஆரம்பித்தல், மாத்தறை மாவட்டத்தின் நில்வளா கங்கை திட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் இடைநடுவில் முடங்கியிருப்பதால் அப்பள்ளத்தாக்கின் ஊட்டப் பிரதேசத்தில் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளும் மக்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், நில்வளா கங்கை திட்டத்தின் எதிர்கால அபிவிருத்திப் பணிகளை விரைவில் மீள ஆரம்பிக்க வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் மக்களின் பிரதிநிதிகளின் பதவிக் காலத்துக்குப் பின்னரும், சமாதான நீதவான் பதவியினை வழங்குதல், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படுகின்ற, சமாதான நீதவான் பதவியானது, அவர்களது பதவிக் காலத்துக்கு மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளதாலும், இப்பதவிக்காலத்தின் பின்னரும், அவர்களிடம் மேற்படி சேவையினைப் பெறுவதற்காக வரும் அநேகமானோர் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர் என்பதாலும், இம் மக்கள் பிரதிநிதிகளுக்கு தமது பதவிக் காலத்தின் பின்னரும், சமாதான நீதவான் பதவியினை வழங்குவதற்கான தகுந்ததொரு வேலைத் திட்டத்தினை வகுத்தல் வேண்டும் என இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரினதும் கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகள் குறித்து மீளாய்வு செய்தல், நாட்டில் தற்போது இயங்கி வருகின்ற மாகாண சபைகள் மற்றும் எதிர்காலத்தில் ஒழுங்கு முறையாக செயற்படவுள்ள வடமாகாண சபையின், கெளரவ அமைச்சர்கள், தவிசாளர்கள், உபதவிசாளர்கள், ஆளும் கட்சியின் முதற்கோலாசான், சபைத் தலைவர்கள், எதிர்க் கட்சித் தலைவர்கள், எதிர்க் கட்சியின் முதற்கோலாசான் மற்றும் கெளரவ உறுப்பினர்கள் ஆகியேரரின் கொடுப்பனவுகள், சிறப்புரிமைகள் மற்றும் வசதிகள் ஒழுங்கான முறையில் காணப்படாமையினால், இது தொடர்பாக ஆழமாக ஆராய்ந்து அதற்கான ஒழங்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, உள்ளுராட்சி நிறுவனங்களின் அனைத்து மக்கள் பிரதிநிதிகளினதும் கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகளை மீளாய்வு செய்தல், நாட்டில் நடைமுறையிலுள்ள மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அனைத்து மாநகர சபை, நகர சபை, மற்றும் பிரதேச சபைகளினதும் நகரபிதாக்கள், நகர சபைத் தலைவர்கள், மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள், பிரதி நகரபிதாக்கள், பிரதி நகர சபைத் தலைவர்கள், உப தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் கெளரவ உறுப்பினர்கள் ஆகியேரரின் கொடுப்பனவுகள், சிறப்புரிமைகள் மற்றும் வசதிகள் ஒழுங்குமுறையாக இல்லாத காரணத்த்தால் இது தொட்பாக ஆழமாக ஆராய்ந்து இதற்கான ஒழுங்குமுறையுடன் கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, வடக்கு கிழக்கில் காணாமற் போன தமிழ் மக்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்குதல், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் யுத்தம் நடைபெற்ற கடந்த மூன்று தசாப்த காலமாக பல்வேறு காரணங்களால் காணாமற் போயுள்ளவர்கள் தற்போது உயிர் வாழ்கின்றார்களா, இல்லையா என்பதையிட்டு துரிதமாக விசாரணை செய்து, இவர்கள் உயிருடன் இல்லாதிருப்பின் இவர்களுக்கான மரணச் சான்றிதழ்களை வழங்குதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, தேசிய இளைஞர் கொள்கையொன்றை வகுத்தல், அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தெரிகுழுவொன்றை நியமித்து, இலங்கைக்கு உகந்த தேசிய இளைஞர் கொள்கையொன்றை வகுத்தல் ஆரம்பிக்கப்பட்ட வேண்டுமெனவும் அந்நோக்கத்திற்காக அதனுடன் தொடர்புடைய அனைத்துத் துறைகளும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேர்ச்சி பெற்றவர்கள் அறிஞர்கள் மற்றும் புத்திஜீவிகளினதும் அதேபோன்று அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினதும் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, அரசாங்க பாடசாலைகளையும், பல்கலைக் கழகங்களையும் விடுமுறை நாட்களில் கற்கை அலகுகளுக்காகப் பெற்றுக்கொடுத்தல், அரசாங்க பாடசாலைகளின் விடுமுறை நாட்களிலும் பிற்பகல் நேரத்திலும், பல்கலைக்கழகங்களின் விடுமுறை நாட்களிலும், அந்த நிலையங்களை அடிப்படையாகக் கொண்டு, வர்த்தக சமுதாயத்தினரையும், அரச சார்பற்ற அமைப்புகளையும், வர்த்தகச் சபைகளையும், சமுதாய அடிப்படையிலான அமைப்புகளையும் இணைத்துக்கொள்கின்றதான விரிவானதொரு வேலைத்திட்டமாக, முதியோர் மற்றும் முறைசாரா கற்கை அலகுகள் சலுகைக் கட்டண அடிப்படையில் ஆரம்பிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, வெற்றிடமாகின்ற கிராம உத்தியோகத்தர் பதவிகளில் பதிற் கடமை புரியும் நியமனங்களுக்காக வினைத்திறன்மிக்க வேலைத்திட்டமொன்றைத் தயரரித்தல், கிராம உத்தியோகத்தர் பதவியில் வெற்றிடம் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் அண்மையிலுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தர் மிகச் சிறியதொரு கொடுப்பனவின் அடிப்படையில் பதிற்கடமைக்காக நியமிக்கப்படுவதாலும், மேற்படி பதிற் கடமை நியமனத்தின் மூலம் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இரண்டினதும் வினைத்திறன் வீழ்ச்சயடைவதாலும், இந்த நிலைமையை தவிர்த்துக் கொள்ளும் பொருட்டு சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கிராம உத்தியோகத்தர் சேர்மம் ஒன்றை அமைக்க வேண்டுமென்பதோடு, வெற்றிடம் ஏற்படுகின்ற பிரிவுகளுக்கு மேற்படி சேர்மத்திலிருந்து கிராம உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கும், மேற்படி சேர்மத்திலுள்ள கிராம உத்தியோகத்தர்களை, பிரதேச செயலாளரினால் ஒப்படைக்கப்படுகின்ற வேறு பயனுள்ள துறைகளில் அல்லது கடமைகளில் ஈடுபடுத்துவதற்குமான வேலைத்திட்டமொன்று தயரரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, தற்போது செயற்படும் சிவில் பாதுகாப்புக் குழுக்குகளுக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை வழங்குதல், சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் அமைந்துள்ள மத வழிபாட்டுத் தலங்களின் தலைமை தேரர், மதகுரு, பாடசாலை அதிபர், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், கமத்தொழில் ஆராய்ச்சி உதவியாளர், சனசபைச் செயலாளர்கள், பிரதேசத்தின் பொலிஸ் நிலையத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு உத்தியோகத்தர், மற்றும் உரிய கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள தொண்டர் அமைப்புக்கள், அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் உரிய பிரிவில் வசிக்கும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய சிவில் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்படுவதை மிகவும் எளிதாக்கும் பொருட்டு தற்போதைய சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரமொன்றை வழங்கக்கூடியவாறான பாராளுமன்றச் சட்டமொன்று நிறைவேற்றப்படுதல் வேண்டுமெனவும் அதனூடாக கிராம உத்தியோகத்தர் பிரிவில் நடைபெறுகின்ற குற்றச் செயல்கள், துர்நடத்தைகள் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட பிரிவுகளுடன் சிறந்த தொடர்பைக் கட்டியெழுப்புவதற்கு இயலுமானவாறு குறித்த சட்டங்கள் ஆக்கப்படுதல் வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, நாட்டில் தற்பொது அமுலில் உள்ள காலங்கடந்த சட்டங்களை இற்றைப்படுத்துதல், தற்போதும் இலங்கையில் ஏகாதிபத்திய வழிகளின் காலத்தில் அறிமுகஞ் செய்யப்பட்ட சட்டங்கள் அமுலாகிவருவதால் காலங்கடந்த தண்டனைகள், தண்டப்பணம் என்பவற்றை இற்றைப்படுத்துவதற்கான தேசிய வேலைத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுத்தப்படல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பத்திரண, தேர்தல்ள் அனைத்தையும் ஒரே நாளில் நடத்துதல், இலங்கையில் ஒவ்வோர் ஆண்டிலும் ஏதேனும் ஒரு தேர்தல் நடத்தப்பட்டுள்ளதோடு அவ்விதமாக தேர்தல்களை நடத்துதலானது மக்களின் அபிப்பிராயத்தைக் கண்டறிவதற்கான பெறுமதி மிக்க அளவுகோலாக அமைந்த போதிலும், இதன் மூலமாக நாட்டின் பொருளாதாரம், நிருவாகம் போன்ற அனைத்துத் துறைகளிலும் தீவிரமான தாக்கம் ஏற்படுத்தப்படுவதால் உள்ளூராட்சித் தேர்தல்கள், பொதுத்தேர்தல்கள் மற்றும் சனாதிபதித் தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்கேதுவாக மேற்படி நிறுவனங்களின் பதவிக் காலத்தை திருத்தியமைக்கவும் பொருத்தமான தேர்தல் வழிமுறையொன்றை உருவாக்கவும் தகுந்தவாறு அரசியலமைப்புத் திருத்தமொன்றை மேற்கொள்ள வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பத்திரண, பாராளுமன்ற சனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளுதல், நாட்டினுள் சனநாயகத்தை மேலும் வலுவூட்டும் நோக்கத்துடன் பாராளுமன்றத்திற்கும் மாகாண சபைகளுக்கிடையிலும், மாகாண சபைகளுக்கும் உள்ளுராட்சி நிறுவனங்களுக்கிடையிலும் சிறந்த இணைப்பினை பேணிவருதல் அத்தியாவசியமாயுள்ளதோடு, இதற்கு உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் மாகாண சபைகளில் பிரதிநிதித்துவம் வகிப்பதை உறுதிசெய்வதற்கும் மாகாண சபை தலைவர்கள் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகிப்பதை உறுதி செய்வதற்குமான செயல்முறையொன்றை தயரரிப்பதற்குத் தேவையான அரசியலமைப்புத் திருத்தமொன்று மேற்கொள்ளப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல், தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் வாழ்ந்து வரும் பிரதேசங்களில் சிங்கள மொழிப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களையும் சிங்கள மொழி பேசுகின்ற மக்கள் வாழும் பிரதேசங்களில் தமிழ் மொழிப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களையும், அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் நடைமுறைப்படுத்தல் வேண்டுமென்பதுடன், அரச மற்றும் தனியார் இலத்திரனியல் ஊடகங்கள் மட்டுமன்றி அச்சு ஊடக நிறுவனங்களின் ஒத்துழைப்பினையும் பெற்றுக்கொண்டு இப்பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை ஆரம்பிப்பதற்கான ஒரு தேசிய நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, வாழ்க்கைத் துணையின் தகாத செயல்களினால் நிர்க்கதிக்குள்ளாகும் தரப்பினருக்கு நிவாரணமளித்தல், திருமணமான கணவன் மனைவி தம்பதிகள் ஒரே வீட்டில் வாழ்கின்ற சந்தர்ப்பங்களில் கணவன் அல்லது மனைவி மதுபாவனை சூதாட்டம் அல்லது வேறு துர்நடத்தைகளில் ஈடுபட்டு, காணி, வீடு அல்லது வீட்டுப் பாவனைப் பொருட்களை தனது தற்றுணிபின் பிரகாரம் விற்பதன் காரணமாக அல்லது வேறு நபர்களுக்கு ஒப்படைப்பதன் காரணமாக மற்றைய தரப்பினருடன் பிள்ளைகளும் கடும் நிர்க்கதி நிலைக்குள்ளாகின்ற சந்தர்ப்பங்களில் அந்நிலைமையை தடுப்பதற்குத் தேவையான சட்டங்கள் ஆக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பத்திரண, ஒழுக்க நெறிகள் பற்றிய குழுவை தாபித்தல், இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களின் நம்பகத்தன்மையையும் அவர்களிடத்தில் உயரிய ஒழுக்க நெறிகளையும் பேணவேண்டிய தேவைப்பாட்டைப் பற்றி ஆராய்வதற்காக ஒழுக்க நெறிகள் பற்றிய குழு ஒன்று தாபிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பத்திரண, புதிய இலத்திரனியல் அடையாள அட்டையை வழங்குதல், நிர்வாகத்தை எளிதாக்குதல், குற்றங்களை கட்டுப்படுத்துதல் மற்றும் ஏனைய மோசடியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் குறைப்பதற்காக, குறித்த நபரின் இரத்தப் பிரிவு, வங்கிகக் கணக்குகள், கடன் அட்டை, கல்வித் தகைமை, சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் வெளிநாட்டுப் பிரயாண கடவுச்சீட்டு இலக்கம் ஆகிய முக்கியமானதும் தேவையானதுமான தகவல்களை உள்ளடக்கிய புதிய இலத்திரனியல் இலக்கத்துடனான, தேசிய அடையாள அட்டையொன்று வழங்கப்படுதல் வேண்டும் எனவும், பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் அனைவரது தகவல்களையும், கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மட்டத்தில் கணனிமயப்படுத்தலை துரிதப்படுத்தல் வேண்டும் எனவும் இத் தகவல்கள் அவ்வப்போது இற்றைப்படுத்தப்படல் வேண்டும் எனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பத்திரண, ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இருபது வருட சேவைக் காலத்தின் பின்னர், ஓய்வு பெறுவதற்கு வாய்ப்பளித்தல், பொலிஸ் திணைக்களத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான இருபது வருட சேவைக் காலத்தின் பின்னர், சுயவிருப்பில் ஓய்வு பெறுவதற்கான இயலுமானது, ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பிலும் ஏற்புடையதாதல் வேண்டுமென்றும் அதற்கான செயல்முறை ஒன்று உருவாக்கப்படல் வேண்டுமென்றும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பத்திரண, ஒழுங்குவிதிகளை நீக்குவதற்கான குழுவை தாபித்தல், ஒழுங்குவிதிகள் உருவாக்கப்படுவதும் நீக்கப்படுவதும் அன்றாடம் இடம்பெறும் நடைமுறையாதலால், காலம் கடந்த ஒழுங்குவிதிகளை நீக்குவது பற்றி ஆராய்வதன் பொருட்டு ஒழுங்கு விதிகளை நீக்குவதற்கான குழு ஒன்று தாபிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, சிவில் பாதுகாப்புப் படையைச் சார்ந்த உத்தியோகத்தர்களை, சேவையில் நிரந்தரமாக்கல், சிவில் பாதுகாப்புப் படையைச் சார்ந்த உத்தியோகத்தர்களுக்கும் அரசாங்கத்தின் ஏனைய பாதுகாப்புப் பிரிவுகளில் மற்றும் திணைக்களங்களில் சேவையில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு உள்ளதைப் போன்று சம்பளம், கொடுப்பனவு, நிரந்தர சேவை மற்றும் ஓய்வூதியத்துடனான உத்தியோக அந்தஸ்து வழங்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பத்திரண, உறுதியளித்தல் பற்றிய குழுவை தாபித்தல், பாராளுமன்றத்தில் கேட்கப்படும் வினாக்களுக்கு விடைகளாக அரசாங்கம் வழங்கும உறுதி மொழிகளும் அரசாங்கத்தின் கடப்பாடுகளும் மீறப்படுகின்ற பல சந்தர்ப்பங்களைக் காணக்கூடியதாயுள்ளதால் அரசாங்கம் தனது பொறுப்புக்களை நிறைவேற்றுவதையும் அவை தொடர்பில் பொறுப்புக் கூறுவதையும் உறுதி செய்யும் பொருட்டு உறுதியளித்தல் பற்றிய குழுக்களை தாபிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர், பனை மர விளைச்சலுக்கு ஊக்கமளித்தல், "கற்பகதரு" எனஅழைக்கப்படும் பொதுமக்களுக்கு மிக்க பயனைப் பெற்றுத்தரும் பனை மர விளைச்சலுக்கு ஊக்கமளித்து பனைப் பொருள் அபிவிருத்திக்காய் அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென இச்சபை தீர்மானிக்கின்றது. கெளரவ புத்திக பத்திரண, புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்தல், இலங்கை புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளில் உள்ள அனுமதியற்ற கட்டுமானங்களையும் அனுமதியற்ற குடியிருப்பாளர்களையும் துரிதமாக அப்புறப்படுத்தி சட்டரீதியான கட்டுமானங்கள் தொடர்பான உடன்படிக்கைகளை மீளாய்வுக்குட்படுத்துவதன் மூலம் திணைக்களத்திற்கு கிடைக்கும் வருமானங்களை அதிகரிக்கச் செய்ய வேண்டுமென்பதுடன், திணைக்களத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தாத காணிகளை நீண்ட கால குத்தகை அடிப்படையில் தனியார் துறைக்கு வழங்கி, அந்நிதியை புகையிரத வலைப்பின்னலின் நவீனமயமாக்கலுக்கு பயன்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ புத்திக பத்திரண, பிச்சைக்காரர்களின் வாழ்வைப் பாதுகாப்பதற்கான முறையியலொன்றைத் தயரரித்தல், தற்போது பிச்சைக்காரர்களின் வாழ்வுக்கு பரரியளவில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் அவர்களது வாழ்வைப் பேணிக்காக்கும் பொருட்டு, அவர்களுக்கு பயிரிடுவதற்கான காணிகளை வழங்கி அதிலிருந்து கிடைக்கின்ற வருமானத்தில் அவர்களது வாழ்வின் பாதுகாப்பினையும் போசனையையும் உறுதிப்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ புத்திக பத்திரண, கட்டாக்காலியாக திரிகின்ற நாய்களின் மூலம் மனித உயிர்களுக்கு ஏற்படுகின்ற சேதத்தை தடுப்பதற்காக முறையியலொன்றைத் தயரரித்தல், கட்டாக்காலியாக திரிகின்ற நாய்களின் மூலம் மனித உயிர்களுக்கு ஏற்படுகின்ற சேதத்தை தடுக்கும் நோக்கத்தோடு, அரசாங்கம் நிலப் பரப்பொன்றை ஒதுக்கி கட்டாக்காலியாக திரிகின்ற நாய்களை அவ்விடத்திற்குக் கொண்டுசென்று அவற்றைப் பராமரிப்பதற்குப் பொருத்தமான வேலைத்திட்டமொன்று தயரரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ புத்திக பத்திரண, சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் கடுமையான தண்டனைகளை விதித்தல், நாடு முழுவதிலும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் நாளுக்கு நாள் சடுதியாக அதிகரித்துவரும் நிலைமை ஏற்பட்டுள்ளதால், அது தொடர்பாக தற்போதுள்ள சட்ட விதிகள் போதியதாக இல்லாதிருப்பின், புதிய சட்ட விதிகளை புதிதாக நிறைவேற்றி மிகவும் துரிதமாக இது தொடர்பான வழக்குகளை தீர்ப்பதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப் பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ புத்திக பத்திரண, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக கரையோர நுழைவுப் பாதைகளை அமைத்தல், நாட்டின் கரையோர வலயத்தில் துரிதமாக இடம்பெறுகின்ற நிர்மாணங்கள் காரணமாக உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் கடற்கரைக்கு பிரவேசிப்பதில் அசெளகரியம் ஏற்படுதலானது, சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கும் கடற்றொழிலை மேற்கொள்வதற்கும் தடைகளை ஏற்படுத்துவதனால், இந்நிலமையை தடுப்பதற்கும் இத்துறைகளை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டும் கடற்கரை நுழைவுப் பாதை முறைமையொன்று அமைக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ புத்திக பத்திரண, கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்குதல், அதிபர் சேவை, ஆசிரியர் சேவை, கல்வி நிருவாக சேவை ஆகிய சேவைகளில் பரரிய சம்பள முரண்பாடுகள் நிலவுவதால் இந்நிலைமையை போக்கி இவர்களின் சுய கெளரவத்திற்கு உகந்ததொரு சம்பளத்தைக் கிடைக்கச் செய்யும் வகையில், சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்குரிய முறையியலொன்று தயரரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ புத்திக பத்திரண, பெளத்த பிக்குக் கல்வியை மேம்படுத்துதல், பெளத்த பிக்குமார்களின் மத அறிவை மேம்படுத்தும் நோக்கத்தோடு அவர்களின் பேச்சாற்றல், செவிமடுக்கும் ஆற்றல், கனணி, உளவியல் மற்றும் ஆலோசனை பற்றிய அறிவு என்பவற்றை மேம்படுத்துவதற்காக, தற்போதுள்ள பிக்குக் கல்வி நிறுவனங்களுக்குப் புறம்பாக இப்பணிக்ளுக்கே ஒதுக்கப்பட்டதான பிக்குக் கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்கான முறையியலொன்று தயரரிக்கப்படுதல் வேண்டுமென இப்பராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ புத்திக பத்திரண, இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள நொத்தரரிசு சேவையை இற்றைப்படுத்துதல், இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள நொத்தரரிசு சேவை காலங்கடந்த சட்டங்களைக் கொண்டுள்ளதால் அது தொடர்பாக மீள பரிசீலனை செய்து தற்காலத்திற்குப் பொருத்தமானவாறு சட்டங்கள் ஆக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ புத்திக பத்திரண, உலர் வலய சேனைப் பயிர்செய்கையாளர்களின் பொருளாதாரத்தை வலுவூட்டுதல், உலர் வலயங்களில் சேனைப் பயிர்செய்கையாளர் களால் பயிரிடப்படுகின்ற நெல், குரக்கன், பயறு, எள்ளு ஆகிய பயிர்களின் விளைச்சலை அதிகரிப்பதற்கும் உற்பத்திப் பொருட்களை பதனிடுவதற்கும் ஏதுவான வகையில் புதிய தொழிட்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் தரச்சிறப்புவாய்ந்த வகையில் உற்பத்திகளை பதனிடுவதற்கும், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் நடவடிக்கையை வலுவூட்டுவதற்கும் வரையறுக்கப்பட்ட கூட்டுறவு கம்பனிகள் தாபிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, ஆசிரியர் ஆலோசனை சேவையை உருவாக்குதல், இலங்கையில் கல்வித் தரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கத்தோடு இற்றைக்கு சுமார் இருபது (20) வருடங்களுக்கு முன்னர் தொட்டு ஆரம்பமாகி நடைமுறையிலிருக்கும் ஆசிரியர் ஆலேசானை சேவையை தனியானதொரு சேவை அலகாக தாபிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ருவண் ரணதுங்க, உப பிரிவாக்கல் தடை செய்யப்பட்டுள்ள அரசாங்க அளிப்பு பத்திர காணிகளின் உப பிரிவாக்கல் அதிகாரத்தை பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைத்தல், ஜய பூமி, சுவர்ண பூமி,ரத்ன பூமி ஆகிய அரசாங்கக் காணி அளிப்புப் பத்திரங்களைக் கொண்டுள்ளவர்களின் காணிகளில் உப பிரிவாக்கல் தடை செய்யப்பட்டுள்ளதெனினும், ஆரம்பக் காணி பெற்றவர்களின் இரண்டாம் பரம்பரையின் உரிமையை உறுதி செய்வதற்கும் அவர்களின் வீடு, தோட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கும் உப பிரிவாக்கலுக்கான தேவை தோன்றும் போது மாகாண ஆணையாளர், காணி ஆணையாளர் மற்றும் ஜனாதிபதி செயலகத்துடனான தற்போது நடைமுறையில் உள்ள நீண்ட செயன்முறையை குறுகியதாக்கி உப பிரிவாக்க அதிகாரத்தை பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைப்பதற்கு தேவையான சட்டங்கள் ஆக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ புத்திக பத்திரண, கோதுமை மாவிற்குப் பதிலாக அரிசி மாவை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்துவதற்காக புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்துதல், கோதுமை மாவிற்காக வெளிநாடுகளுக்கு வெளிப் பாய்ச்சப்படும் பெருமளவு செலாவணியை நிறுத்தும் நோக்கத்துடன், மாற்றீடாக பயன்படுத்தக்கூடிய அரிசி மாவினால் தயரரிக்கப்படும் உணவை பிரபல்யப்படுத்துவதற்கும், நார்த்தன்மை கொண்ட தானிய வகையான அரிசியை மிகவும் மென்மையானதாக கோதுமை மாவைப் போன்று அரைப்பதற்கும், கோதுமை மா அரைப்பதற்கு பயன்படுத்தப்படுவதைப் போன்ற இயந்திர உபகரணங்களையும் புதிய தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் கருதுகின்றது. கெளரவ புத்திக பத்திரண, யுத்தத்தால் அங்கவீனமுற்றவர்களுக்கு நிவாரணம் வழங்குதல், ஏறக்குறைய 30 வருடகாலமாக நடைபெற்ற யுத்தம் காரணமாக அன்றாடம் நாட்கூலிக்கு வேலை செய்து வாழ்ந்த மக்கள் மற்றும் நிரந்தர தொழில் புரிந்த மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானோர் உடலுறுப்புக்களை இழந்து அங்கவீனர்களாக வாழ்க்கைச் சுமையினால் பெரும் பாதிப்புக்குள்ளாகி நிர்க்கதியான நிலையில் வாழ்வதால், அவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் கருதுகின்றது. கெளரவ புத்திக பத்திரண, உயர் பிரமுகர்களின் பாதுகாவலர்கள் அனைவருக்கும் பிரயாணச் செலவுக் கொடுப்பனவொன்றை வழங்குதல், ஜனாதிபதி பாதுகாப்புச் சேவை மற்றும் பிரதம அமைச்சர் பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களைப் போன்று ஏனைய உயர் பிரமுகர் பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கும் சமமான பிரயாணச் செலவுக் கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென இப்பாராளுமன்றம் கருதுகின்றது. கெளரவ ருவன் ரணதுங்க, அரசாங்க வங்கிகளின் வட்டி செலுத்துதலுக்கும் வட்டி அறவிடலுக்கும் இடையே காணப்படுகின்ற வித்தியாசத்தைக் குறைத்தல், அரசாங்க வங்கிகளில் சாதாரண வைப்புகளுக்கு செலுத்தப்படுகின்ற வட்டி விகிதம் முதல் வரையிலும் நிலையான வைப்புகளுக்கு செலுத்தப்படுகின்ற வட்டி விகிதம் சுமார் ஆகவும், வங்கிகளால் வீடமைப்பு, வர்த்தகம் மற்றும் விவசாயக் கடன்களுக்கு அறவிடப்படுகின்ற வட்டி விகிதம் சுமார் முதல் வரையிலும் உள்ளதால், மக்களுக்கும் சிறிய அளவிலான வர்த்தகர்களுக்கும் கைகொடுப்பதற்கும் அவர்களை ஊக்குவிப்பதற்குமாக, இவ்வாறு அறவிடப்படுகின்ற வட்டிக்கும் செலுத்தப்படுகின்ற வட்டிக்கும் இடையிலான வித்தியாசத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ ருவன் ரணதுங்க, பட்டதரரி கிராம உத்தியோகத்தர்களை கெளரவிப்பதற்கான ஒரு கொடுப்பனவைச் செலுத்துதல், அரசாங்க சேவையை கிராமிய மட்டத்தில் மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்காக சேவையாற்றுகின்ற கிராம உத்தியோகத்தர்கள் க.பொ.த. (உ/த) பரீட்சையின் பின்னர் போட்டிப் பரீட்சையின் புள்ளிகளின் அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ள போதிலும், தற்போது சேவையாற்றி வருகின்ற கிராம அலுவலர்களில் பட்டத் தகைமைகளைப் பெற்றுள்ளனராதலாலும், இதற்கென எவ்வித விசேட கவனமும் இதுவரை செலுத்தப்படாதுள்ளதனாலும், பட்டத் தகைமையை கெளரவிக்கு முகமாக பட்டதரரி கிராம அலுவலர்களுக்கு சம்பள அதிகரிப்பு அல்லது கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ ருவன் ரணதுங்க, கல்விசார் நூல்கள் தவிர்ந்த தினசரி பத்திரிகைகளிலும் வாராந்த சஞ்சிகைகளிலும் புத்தர் பெருமானின் உருவப் படங்கள் பிரசுரிக்கப்படுவதை தடைசெய்தல், தினசரி பத்திரிகைகள் மற்றும் வார சஞசிகைகளில் புத்தர் பெருமானின் உருவப் படங்களும் சிலைகளின் படங்களும் எதுவித கட்டுப்பாடுமின்றி எல்லையற்ற வகையில் அச்சிடப்படுவதோடு அந்த அட்டைகள் பல்வேறுபட்ட பொருட்ளின் உறைகளாகவும் வேறு பொருத்தமற்ற அலுவல்களுக்காகவும் பயன்படுத்தப்படுவது புத்தர் பெருமானுக்குச் செய்கின்ற அவமரியாதையாகுமென்பதால் புத்தர் ஜெயந்தி கொண்டாட்டத்தையும் கருத்திற்கொண்டு இதன் பின்னர் கல்விசார் நூல்கள் தவிர்ந்த தினசரி பத்திரிகைகளிலும் வாராந்த சஞ்சிகைகளிலும் புத்தர் பெருமானின் உருவப் படங்கள் பிரசுரிக்கப்படுவதை தடைசெய்வதற்குத் தேவையான சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர், மும்மொழி பேசப்படும் இலங்கைக்காக “சகோதர பாடசாலை நிகழ்ச்சித்திட்டம்” ஒன்றைத் தாபித்தல், மும்மொழி பேசப்படும் இலங்கைக்கான பத்தாண்டு தேசிய மூலோபாயச் சட்டகம் ஒன்றை வகுத்தலானது, தேசிய ஒருங்கிணைப்புக்கும் சமூக ஒற்றுமைக்குமான ஒரு திருப்புமுனை நடவடிக்கையாக அமையுமெனவும் எனவே சிங்கள மொழிபேசும் மக்கள் பெரும்பான்மையாக உள்ள பிரதேசங்களில் குறுகிய கால வளமளித்தல் நிழ்ச்சித்திட்டங்களின் வாயிலாக தமிழ் மொழிமூலப் பாடசாலைகளுடன் “சகோதர பாடசாலை நிகழ்ச்சித்திட்டம்” ஒன்றில் மாணவர்களையும் ஆசிரியர்களையும் பறிமாறிக்கொள்வதற்காக ஒவ்வொரு பாடசாலைகளிடையே தொடர்பை ஏற்படுத்துவதற்கு கல்வி அமைச்சும் தேசிய மொழிகள், சமூக ஒருங்கிணைப்பு அமைச்சும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, காலி சர்வதேச விளையாட்டரங்கிற்கு மீள் பெயரிடுதல், இலவசக் கல்வியின் தந்தை காலஞ்சென்ற கெளரவ (கலாநிதி) சீ. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர அவர்களுக்கு மரியாதை செலுத்தும் முகமாக காலி சர்வதேச விளையாட்டரங்கிற்கு அவரின் பெயரை சூட்டவேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ அஜித் குமார, முன் பிள்ளைப் பருவக் கல்வி தொடர்பில் தேசிய திட்டமொன்றை உருவாக்குதல், எமது நாட்டில், பிள்ளைகளின் கல்வியில் முக்கிய இடம் வகிக்கும் முன் பிள்ளைப் பருவக் கல்வியை (முன்பள்ளிக் கல்வி) வழங்குவது தொடர்பில் தேசிய திட்டமொன்றை தயரரிக்கவேண்டியுள்ளதுடன், முன் பள்ளி நிர்வாகிகளுக்கு முறையான பயிற்சியும், ஆட்சேர்ப்பு முறைமையுடன் சம்பள முறையொன்றும் தயரரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ அஜித் குமார, காலி மாவட்டத்தின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பற்றிய ஆய்வு நூலொன்றைத் தயரரித்தல், காலி மாவட்டத்தின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த, தொல்பொருளியல் மற்றும் கலாசார ரீதியில் பெறுமதி வாய்ந்த இடங்கள் பற்றிய பரந்த ஆய்வினை மேற்கொண்டு, அது தொடர்பில் அறிவியல் பெறுமதிமிக்க ஆய்வு நூலொன்று தயரரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, தேர்தல் நடைமுறைகள் மற்றும் தேர்தல்களை நடாத்துதல் பற்றிய பாராளுமன்றத் தெரி குழுவொன்றை நியமித்தல், தேர்தல் நடைமுறைகள் மற்றும் தேர்தல்களை நடாத்துதல் பற்றிய பாராளுமன்றத் தெரிகுழுவொன்று நிரந்தர அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கிறது. கெளரவ ரவி கருணாநாயக்க, ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் ஆகிய நிதியங்களிலிருந்து பணம் உடனடியாக செலுத்துதல், ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் ஆகியனவற்றுக்கு பங்களிப்புச் செய்கின்ற சகல அங்கத்தவர்களுக்கு செலுத்த வேண்டிய தொகைகள் செயல்படுநிலைத் தொழிலிருந்து ஓய்வு பெற்று ஒரு மாத காலத்தின் பின்னர் அவர்களுக்கான நிலுவைகள் செலுத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கிறது. கெளரவ ரவி கருணாநாயக்க, அரச ஊடகங்களில் பக்கச் சார்பற்ற தன்மையை உறுதிப்படுத்தல், அரச ஊடகங்கள் இலங்கைப் பிரசைகளின் விசேட உரிமையாக இருப்பதாலும், அரச ஊடகங்கள் தொடர்ச்சியாக அரசியல்மயப்பட்டு இருப்பதாலும், இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள சகல அரசியல் கட்சிகளுக்கும் அரச ஊடகங்களில் சமமாக நடதப்பட்டு சம வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கிறது. கெளரவ ரவி கருணாநாயக்க, அரச சேவையில் மொழித் தேர்ச்சியின் தேவைப்பாடுகள், சகல அரச சேவை ஊழியர்களும், தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் கருமங்களை ஆற்றக் கூடியவர்களாகவும் கடிதப் பரிமாற்றல் மூலம் பணியாற்றுவதற்கும் பேசுவதற்கும் இயலுமையுடையவர்களாக இருப்பதை அரசாங்கம் கட்டாயமாக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கிறது. கெளரவ ரவி கருணாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டினை வழங்குதல், இப்பாராளுமன்றத்தின் உறுப்பினர்களும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 1%ற்கு சமமாகின்ற பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டிற்கு வருடாந்த அடிப்படையில் உரித்துடையவர்களாகவேண்டுமென்றும் மேலும் இந்த ஒதுக்கீடானது மூலதனச் செலவின்மீது பயன்படுத்தப்படல் வேண்டுமென்றும் எஞ்சியுள்ளவை தனது வாக்காளர்களின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் விரும்புகின்றதும் அரசாங்கத்தின் வழிகாட்டலை அடிப்படையாகக் கொண்டதுமான எவ்வடிப்படையிலும் செலவழிக்கப்படலாமென்றும் இப் பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ புத்திக பத்திரன, பல்கலைக்கழகங்களால் நடாத்தப்படுகின்ற கற்கை நெறிகளை தொழில்மையக் கற்கைநெறிகளாக ஆக்குதல், நாட்டின் அனைத்து அரசாங்க பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களால் நடாத்தப்படுகின்ற கலைக் கல்விகளுக்கான பட்டப்படிப்பு கற்கைநெறிகளை தொழில்மையக் கற்கைநெறிகளாக மாற்றி அதன் மூலமாக உருவாகின்ற பட்டதரரிகளுக்கு புதிய தொழில்வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன், அனைத்துப் பல்கலைக்கழகங்களுடன் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களை இணைப்பதற்கான முறைசார்ந்த வேலைத் திட்டமொன்று தயரரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பத்திரண, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்கின்ற வான்களுக்கான தரநியமங்களை விதித்தல், நாடு பூராவும் நடாத்தப்படுகின்ற பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துச் சேவைகள் உரிய தரத்தில் இல்லாமையினாலும், சில பாடசாலை வான்களின் ஊழியர்களது நடத்தை சிறந்ததாக இல்லாமையினாலும், உரிய தரநியமங்களுடன் கூடிய வான் சேவையொன்றை நடாத்துவதற்காகவும், மேற்படி சேவையைப் பெறுகின்ற பாடசாலை மாணவ மாணவிகளது பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் வான் சேவைகளுக்கான தரநியமங்களை அறிமுகப்படுத்துதல் வேண்டுமெனவும், வான் ஊழியர்களிடையே சிறந்த பழக்க வழக்கங்களைப் பேணிவருவதற்காக ஒழுக்க நெறிக் கோவையொன்றை அறிமுகப்படுத்துதல் வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. 98. கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர், தெங்குக் கமத்தொழில், தெங்கு சார் வளங்கள் ஆகியவற்றின் அபிவிருத்தியையும் மேம்பாட்டையும் ஒழுங்கமைத்தல், வர்த்தக ரீதியான உற்பத்திகளில் தென்னை முக்கிய இடத்தை வகிப்பதால், வளங்களையும், சுற்றாடலையும் நிலைத்து நிற்கச் செய்கின்ற அதேவேளை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு குறிப்பிடக்கூடியளவு பங்களிப்புச் செய்யக்கூடிய விதத்தில் வளர்ச்சியடையும் அபிவிருத்தியை ஒழுங்கமைத்து தென்னைக் கைத்தொழில் மற்றும் தென்னை சார் வளங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு அர்த்த புஷ்டியுள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர், கித்துள் கைத்தொழிலை மேம்படுத்து முகமாக கித்துள் பயிர்ச்செய்கையை அதிகரித்தல், கிராமிய பிரதேசங்களில் கித்துள் பரரியளவு பங்களிப்பை வழங்குவதால், கிராமியக் கைத்தொழிலுக்கும் கிராமிய மக்களுக்கும் ஊக்கமளித்து தாவர உணவிற்காக வளர்க்கப்படும் கித்துள் மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்னும் எமது குறிக்கோள் திட்டத்திற்கு அமைவாக புதிய கித்துள் பயிர்ச்செய்கைகளை அதிகரிப்பதற்கான தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர், மரமுந்திரிகைப் பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல், மரமுந்திரிகைப் பயிர்ச்செய்கை மற்றும் அதனோடு தொடர்புடைய உற்பத்திகளின் பதனிடல், சந்தைப்படுத்தல் மற்றும் பயிர்ச்செய்கை ஆகியவற்றுக்கான உதவிகளை நல்கி அதன்மூலம் தரமான பெறுமதி சேர்க்கப்பட்ட மரமுந்திரிகையை உற்பத்திகளின் முன்னணி ஏற்றுமதி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக இலங்கையை திகழச் செய்வதற்கு உதவக்கூடிய விதத்தில் மரமுந்திரிகைச் செய்கையை அபிவிருத்தி செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர், பாரம்பரிய கைத்தொழில்களை அபிவிருத்தி செய்தல், அம்பாறை மாவட்டத்தில் அருகி வரும் பாரம்பரிய கைத்தொழில்களான கைத்தறித் தொழில், மட்பாண்டம் தயரரித்தல், பனை ஓலை மற்றும் பன்கொண்டு பெட்டி, தண்டு மற்றும் பாய் போன்றவற்றை இழைத்தல், தும்புத் தொழில், பிரம்புத் தொழில் ஆகியவற்றை அபிவிருத்தி செய்து அப்பகுதி மக்களுக்கு தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தி அவர்களின் வருவாயைப் பெருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ திலங்க சுமதிபால, ஆயுத விற்பனைக்கான முறைசார்ந்த கட்டுப்பாட்டு முறையொன்றைத் தாபித்தல், சர்வதேச ரீதியில் எவ்வித கட்டுப்பாடுமின்றி ஆயுத விற்பனை நடைமுறையிலுள்ளதன் விளைவாக இலங்கை போன்ற நாடுகளுக்கு ஆயுதங்கள் வந்து குவிதல் மற்றும் அவ்வாறான நாடுகளில் இடம்பெறும் முறைசாராத ஆயுதச் சுற்றோட்டமானது சமூகத்தின் சுதந்திரத்திற்கு பரரிய தடையாகவும் சனநாயக ரீதியில் அதிகாரத்திற்கு வந்த அரசாங்கத்திற்கு அச்சுறுத்தலாகவும் தாக்கம் ஏற்படுத்துவதாகும், அத்துடன் நாட்டில் போதைப்பொருள் மற்றும் விபச்சாரத் தொழில் போன்ற சட்டவிரோதச் செயல்கள் விரிவடைவதற்கு காரணமாகவும் அமைந்துள்ளது. மேற்படி நிலைமைகளைத் தடுத்து ஒழுக்கம் பேணுகின்ற, சட்டத்தை மதிக்கின்ற, விழுமியங்கள் நிறைந்த சமுதாயமொன்றைக் கட்டியெழுப்புதல் மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கின் எதிர்பார்ப்பாக உள்ளதாலும், ஆயுத விற்பனை உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதனூடாக சமூக போராட்டங்களைக் குறைத்து சமூக நலனோம்புகையை உறுதி செய்தல் இன்றைய உலகின் எதிர்பார்ப்பாகவுள்ளதாலும், மேற்குறிப்பிட்ட துர்நடத்தைகளை ஒழிப்பதற்காக சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் சமவாயங்களுக்கு ஏற்புடையதாக தேசிய சட்ட முறைமையொன்று தாபிக்கப்படுதல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர், பேரிச்சம் பழச் செய்கையை அறிமுகப் படுத்துவற்குரிய வாய்ப்புகள் பற்றி விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுதல், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடியில் பரீட்சார்த்தமாகப் பயிர் செய்யப்பட்ட பீனிக்ஸ் டெக்லிபெரா என்ற பேரிச்சம் பழச் செய்கை வெற்றியளித்துள்ளதால், எமது சொந்த மண்ணில் வளர்ந்த நற்சுவைமிக்க இப் பழத்தை சுவைப்பதற்கான வாய்ப்புகள் எமது நாட்டு மக்களுக்கும் கிடைக்கக்கூடியவாறு இப் பேரிச்சம் பழச் செய்கையை எமது நாட்டிலும் அறிமுகப்படுத்துவதற்குரிய வாய்ப்புகள் பற்றி விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இச்சபை கருதுகிறது. கெளரவ ரவி கருணாநாயக்க, வானோலி ஒலிபரப்பை ஒழுங்குபடுத்தல், வானொலி ஒலிபரப்பை ஒழுங்குபடுத்தும் ஒரு சுயாதீன அதிகார சபையை கூட்டிணைப்பதற்கான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென இப் பாராளுமன்றம் தீர்மானிக்கிறது. கெளரவ ரவி கருணாநாயக்க, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பை ஒழுங்குபடுத்தல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பை ஒழுங்குபடுத்தும் ஒரு சுயாதீன அதிகார சபையை கூட்டிணைப்பதற்கான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கிறது. கெளரவ ரவி கருணாநாயக்க, மாநகர சபைகளில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவை அறிமுகம் செய்தல், சகல மாநகர சபைகளிலும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவைத் தாபிப்பதற்கான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென இப் பாராளுமன்றம் தீர்மானிக்கிறது. கெளரவ ரவி கருணாநாயக்க, உரிமைகள் பிரகடனச் சட்டமூலத்தைச் சட்டமாக்குதல், தென்னாபிரிக்காவில் மனித கண்ணியம், சமத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றின் ஜனநாயக விழுமியங்களை உறுதிப்படுத்தி, ஜனநாயகத்தின் ஆதாரமாகத் திகழ்கின்ற உரிமைகள் பிரகடனச் சட்டத்தை அடியொற்றி, சட்டமூலத்தில் விதித்துரைக்கப்பட்ட வரையறைகளுக்கு அமைவாக அரசினால் மதித்து, பாதுகாத்து, மேம்படுத்தி நிறைவேற்றப்பட்ட வேண்டிய நாட்டின் எல்லா மக்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்தும் சட்டமூலம் இலங்கையில் சட்டமாக்கப்பட வேண்டும் இந்தப் பாராளுமன்றம் தீர்மானிக்கிறது. கெளரவ ரவி கருணாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட படிகள் கொடுப்பனவு, அரச சேவைகள் ஆணைக்குழு மற்றும் சம்பளங்கள் பதவியணி ஆணைக்குழு ஆகியவற்றினால் அங்கீகரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படாதவிடத்து அமைச்சர், பிரதி அமைச்சர் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் எவருக்கும் எந்த வகையான விசேட படிகளும் வழங்கப்படக் கூடாது என இப் பாராளுமன்றம் தீர்மானிக்கிறது. பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சரும், துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் பிரிவின் உட்பிரிவின் கீழ் துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரால் விதிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக. (அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.) பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சரும், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் தீர்மானம், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுச் சட்டத்தின் பிரிவின் பிரகாரம் அக் குழுவின் தவிசாளரினதும் அதன் அங்கத்தவர்களினதும் எரிபொருள் கொடுப்பனவுகள் நடைமுறைக்கு வருமாறு பின்வருமாறானதாக அமைதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது . இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் தவிசாளருக்கு மாதாந்தம் பெற்றோல் அல்லது டீசல் 2 லீற்றரையும் அதன் அங்கத்தவர்களுக்கு மாதாந்தம் பெற்றோல் அல்லது டீசல் 1 லீற்றரையும் வழங்க அல்லது அதற்குச் சமமான சந்தை விலைகளுக்கேற்ப கொடுப்பனவொன்றைச் செலுத்த வேண்டுமென்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் தவிசாளருக்கும் அதன் அங்கத்தவர்களுக்கும் செலுத்தப்பட வேண்டிய எரிபொருள் கொடுப்பனவுகள் தொடர்பில் இதற்கு முன்னர் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளினால் தீர்மானிக்கப்பட்ட எரிபொருள் கொடுப்பனவுகளுக்குப் பதிலாக இந்தப் பிரேரணையினால் தீர்மானிக்கப்படும் எரிபொருள் கொடுப்பனவுகள் பதிலீடு செய்யப்படல் வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் மேலும் தீர்மானிக்கின்றது. அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம். உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம். காணி, காணி அபிவிருத்தி அமைச்சர், உரித்துப் பதிவுச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள், உரித்துப் பதிவுச் சட்டத்தின் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் பிரிவின் கீழ் காணி, காணி அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டதும் சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக. அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சரும், மதுவரிக் கட்டளைச்சட்டத்தின் கீழ் கட்டளை, மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் அமைச்சரினால் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் அனுமதி பெற்ற ஹோட்டல்களுக்குள் மதுபானம் பரிமாறுவது தொடர்பில் விதிக்கப்பட்டு, அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதும் சமர்ப்பிக்கப்பட்ட துமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக. மதுவரி அறிவித்தல். அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. கமநல சேவைகள், வனசீவராசிகள் அமைச்சர், தாவர விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச்சட்டத்தின் கீழ் கட்டளை, தாவர விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் பிரிவின் உட்பிரிவின் கீழ் கமநல சேவைகள், வனசீவராசிகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதும் சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக. ஸ்ரீ லங்கா மகளிர் சம்மேளனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் பரிசீலனை. அரச ஊழியர் அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் பரிசீலனை. தற்காப்புக் கலைகளுக்கான நிறுவகம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் பரிசீலனை. எழுத்துமூல விடைக்கான வினாக்கள் கெளரவ தயாசிறி ஜயசேகர, கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்ரைக் கேட்பதற்கு, லக் சதொச நிறுவனத்துக்கு பருப்பு வழங்கிய வழங்குநர் அல்லது வழங்குநர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் வர்த்தகப் பெயர்கள் யாவை; மேற்படி வழங்குநர்களை தெரிவு செய்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கேள்விப்பத்திர நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதா; ஆமெனில், குறித்த கேள்விப் பத்திரத்துக்காக விலைமனுக்களைச் சமர்ப்பித்த ஏனைய விண்ணப்பதரரிகளின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை; மேற்படி கேள்விப் பத்திரத்துக்கமைய வழங்குநர்களினால் பருப்பு வழங்கப்பட வேண்டிய கால எல்லை யாது என்பதை அவர் குறிப்பிடுவாரா? இன்றேல், ஏன்? கெளரவ தயாசிறி ஜயசேகர, கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்ரைக் கேட்பதற்கு, லக் சதொச நிறுவனத்திற்கு சீனி வழங்கிய வழங்குனர் அல்லது வழங்குனர்களின் பெயர்கள், முகவரிகள், வர்த்தகப் பெயர்கள் யாவை; மேற்படி வழங்குனர்களை தெரிவு செய்கின்றபோது ஏற்றுக்கொள்ளப்பட்ட கேள்விப் பத்திர நடைமுறை பின்பற்றப்பட்டு்ள்ளதா; ஆமெனின், மேற்படி கேள்விப் பத்திரத்திற்காக விலை மனுக்களை சமர்ப்பித்த ஏனைய விண்ணப்பதரரிகளின் பெயர்கள், முகவரிகள் யாவை; மேற்படி கேள்விப் பத்திரத்திற்கு அமைவாக வழங்குனர்களால் சீனி வழங்கப்பட வேண்டிய கால வரையறை யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? இன்றேல், ஏன்? கெளரவ தயாசிறி ஜயசேகர, கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்ரைக் கேட்பதற்கு, லக் சதொச நிறுவனத்திற்கு முட்டை வழங்கிய வழங்குனர் அல்லது வழங்குநர்களின் பெயர்கள், முகவரிகள், வர்த்தகப் பெயர்கள் யாவை; மேற்படி வழங்குநர்களை தெரிவு செய்கின்றபோது ஏற்றுக்கொள்ளப்பட்ட கேள்விப் பத்திர நடைமுறை பின்பற்றப்பட்டு்ள்ளதா; ஆமெனின், மேற்படி கேள்விப் பத்திரத்திற்காக விலை மனுக்களை சமர்ப்பித்த ஏனைய விண்ணப்பதரரிகளின் பெயர்கள், முகவரிகள் யாவை; மேற்படி கேள்விப் பத்திரத்திற்கு அமைவாக வழங்குநர்களால் முட்டை வழங்கப்பட வேண்டிய கால வரையறை யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? இன்றேல், ஏன்? கௌரவ தயாசிறி ஜயசேகர, கூட்டுறவு,உள்நாட்டுவர்த்தக அமைச்சரைக்கேட்பதற்கு, இலங்கையில் லக் சதொச நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்கள் யாவை என்பதை அவர் குறிப்பிடுவாரா? லக் சதொச நிறுவனத்திற்கு கோழி இறைச்சி வழங்கிய வழங்குனர் அல்லது வழங்குனர்களின் பெயர்கள், முகவரிகள், வர்த்தகப் பெயர்கள் யாவை; மேற்படி வழங்குனர்களை தெரிவு செய்கின்றபோது ஏற்றுக்கொள்ளப்பட்ட கேள்விப் பத்திர நடைமுறை பின்பற்றப்பட்டு்ள்ளதா; ஆமெனின், மேற்படி கேள்விப் பத்திரத்திற்காக விலை மனுக்களை சமர்ப்பித்த ஏனைய விண்ணப்பதரரிகளின் பெயர்கள், முகவரிகள் யாவை; மேற்படி கேள்விப் பத்திரத்திற்கு அமைவாக வழங்குனர்களால் கோழி இறைச்சி வழங்கப்பட வேண்டிய கால எல்லை யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? இன்றேல், ஏன்? கௌரவ அகில விராஜ் கரரியவசம், கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு, கல்வி அமைச்சின் கீழ் வழங்கப்பட்ட நியமனங்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு பதவிப் பெயர் அடிப்படையில் மாவட்ட மட்டத்தில் தனித்தனியே யாதென்பதை அவர் குறிப்பிடுவாரா? இறுதியாக மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் சம்பளத் திருத்தத்திற்கு ஏற்ப ஆசிரியர் சேவையின் ஒவ்வொரு தரத்தி்ற்கும் உரித்தாகும் அடிப்படை மாதாந்தச் சம்பளம் தனித்தனியே யாவை; அரசாங்க ஆசிரியர்களுக்கு கிடைக்கும் மாதாந்த சம்பளத்திற்கு மேலதிகமாக உரித்தாகும் சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள் ஆசிரியர் சேவையின் ஒவ்வொரு தரத்திற்கு ஏற்ப தனித்தனியே யாவை அவர் இச்சபையில் அறிவிப்பாரா? இன்றேல், ஏன்? கௌரவ அகில விராஜ் கரரியவசம், கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு, டெங்கு நோய் தொற்று, வாகன விபத்துகள், தற்கொலை, உணவு நஞ்சாகுதல், உடல் அல்லது உள ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகுதல் ஆகிய காரணங்களால் வருடாந்தம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட அல்லது மரணமடைந்த பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கையும், அவர்கள் கல்வி பயின்ற பாடசாலைகளும் தனித்தனியே யாவை; கடந்த வருடத்தில் பல்வேறு தவறுகளுக்காக குற்றஞ்சுமத்தப்பட்டு சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை, பிள்ளையின் வயதெல்லை மற்றும் பாடசாலைக்கு ஏற்ப தனித்தனியே யாவை என்பதையும் அவர் குறிப்பிடுவாரா? இன்றேல், ஏன்? ஏழாவது பாராளுமன்றம். முதலாவது கூட்டத்தொடர். பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரம். 2012 யூலை 06, வெள்ளிக்கிழமை, பி. ப. 1.30 மணிக்கு. வாய்மூல விடைக்கான வினாக்கள். கௌரவ ரவி கருணாநாயக்க, பிரதம அமைச்சரும், பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு, கடந்த இருபது வருடங்களாக மஹபொல புலமைப்பரிசில் வழங்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் எண்ணிக்கையை வருடாந்த அடிப்படையிலும்; மேற்குறிப்பிடப்பட்ட காலப்பகுதியினுள் ஒவ்வொரு வருடமும் இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு பிரவேசித்த மொத்த மாணவர்களது எண்ணிக்கை மற்றும் மேற்குறிப்பிட்ட எண்ணிக்கை ஆகியவற்றின் ஒப்பீட்டையும்; கடந்த 6 வருடங்களாக புலமைப்பரிசில் பெறுபவர்களுக்கு உதவித் தொகையாகச் செலுத்தப்பட்ட தொகையை வருடாந்த அடிப்படையிலும்; கடந்த 10 வருடங்களாக மஹபொல நிதியத்திற்கு கிடைக்கும் வருமானத்தை வருடாந்த அடிப்படையிலும் அவர் இச்சபையில் சமர்ப்பிப்பாரா? இன்றேல், ஏன்? கௌரவ புத்திக பதிரண, பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு, மாத்தறை மாவட்டத்தில் பிற்றபெத்தர பிரதேச சபை ஆளுகைப் பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை தெற்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கதுருவான தேயிலை தொழிற்சாலை ஆறு வருடங்களாக பயன்படுத்தப்படாது கைவிடப்பட்டுள்ளது என்பதையும்; தேசிய வளமொன்றாக உள்ள அத்தொழிற்சாலை பயன்படுத்தப்படாது கைவிடப்பட்டுள்ளதனால் தேசிய பொருளாதாரத்துக்கு பெரும் நட்டம் ஏற்படுகின்றது என்பதையும்; அவர் அறிவாரா? மேற்படி தேயிலைத் தொழிற்சாலையை நிர்மாணிப்பதற்காக செலவான மொத்தத் தொகை எவ்வளவு என்பதையும்; அது பயன்படுத்தப்படாது கைவிடப்பட்டுள்ளமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்; தேயிலைத் தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளை துரிதமாக ஆரம்பித்து பிரதேசத்திலுள்ள தேயிலைப் பயிர்ச் செய்கையாளர்களின் தேயிலைக் கொழுந்துகளை கொள்வனவு செய்வதற்கான முறைமையியல் ஒன்று வகுக்கப்படுமா என்பதையும்; உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமாயின், அதற்கு எடுக்கும் காலம் எவ்வளவு என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? இன்றேல், ஏன்? கெளரவ அஜித் குமார, பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு, சனாதிபதி அவர்களின் கீழ் தற்போது சேவையாற்றுகின்ற ஆலோசகர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்; இவர்களின் பெயர்கள், கல்வித் தகைமைகள் மற்றும் பொறுப்புகள் யாவையென்பதையும்; இவர்களுக்கு செலுத்தப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் யாவையென்பதையும்; கடந்த மாதத்திற்காக செலுத்தப்பட்ட அனைத்து கொடுப்பனவுகளினதும் கூட்டுத்தொகை எவ்வளவென்பதையும் அவர் குறிப்பிடுவாரா? உத்தியோகபூர்வ வாகனங்கள் வழங்கப்பட்டுள்ள ஆலோசகர்களின் பெயர்கள், வழங்கப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் விபரங்கள் யாவையென்பதையும்; இவர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படும் எனின், ஒவ்வொரு ஆலோசகருக்கும் வழங்கப்படுகின்ற எரிபொருள் கொடுப்பனவு தனித்தனியாக யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? இவர்களுக்கு தொலைபேசி வசதிகள் வழங்கப்படுமெனின், தற்போது தொலைபேசி வசதிகள் வழங்கப்பட்டுள்ள ஆலோசகர்களின் பெயர்கள் யாவையென்பதையும்; தொலைபேசிக் கொடுப்பனவுத் தொகையொன்று வழங்கப்படுமெனின் ஒவ்வொரு ஆலோசகருக்கும் வழங்கப்பட்டுள்ள கொடுப்பனவுத் தொகை தனித்தனியாக எவ்வளவென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? இன்றேல், ஏன்? கெளரவ தயாசிறி ஜயசேகர, உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு, புத்தளம் மாவட்டத்தின் பாலக்குடா சந்தியிலிருந்து தலவில புனித அன்னம்மாள் தேவாலயம் வரை செல்கின்ற வீதியை செப்பனிடுவதற்காக 2011 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்டு்ள்ள பணத் தொகை எவ்வளவென்பதையும்; இக்கருத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்காக மதிப்பீடு செய்யப்பட்டு்ள்ள வீதியின் நீளம் மற்றும் அகலம் எவ்வளவென்பதையும் அவர் குறிப்பிடுவாரா? மேற்படி வீதியை செப்பனிடுவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுக் கொடுக்கும் போது முறையான கேள்விப் பத்திர நடைமுறை பின்பற்றப்பட்டு்ள்ளதா என்பதையும்; மேற்படி வீதியை செப்பனிட்ட நிறுவனத்தின் பெயர், அதன் உரிமையாளரின் பெயர், முகவரி மற்றும் பணிப்பாளர் சபையின் தகவல்கள் யாவையென்பதையும்; வீதியின் நிர்மாணப் பணிகளுக்காக மேற்படி கம்பனிக்குச் செலுத்த வேண்டிய சகல கொடுப்பனவுகளும் தற்போது செலுத்தி முடிக்கப்பட்டு்ள்ளதா என்பதையும்; இன்றேல், மேற்கொண்டும் செலுத்த வேண்டியுள்ள பணத் தொகை எவ்வளவென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? செப்பனிடப்பட்டதன் பின்னர் இந்த வீதியில் பனை அல்லது வேறு வகைத் தாவரங்கள் முளைத்துள்ளனவா; உரிய தரநியமத்தின்படி அமைக்கப்பட்டதன் பின்னர் வீதியின் மீது தாவரங்கள் முளைக்கக்கூடிய சாத்தியத்தன்மை உள்ளதா மேற்படி வீதியில் தாவர வகைகள் முளைப்பதற்கான காரணங்கள் யாவை அவர் குறிப்பிடுவாரா? இன்றேல், ஏன்? கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு, 2005 ஆம் ஆண்டு முதல் 2010 வரையிலான காலப் பகுதியில் உயர்தரத்தில் சித்தியடைந்த, தனிப்பட்ட மற்றும் பாடசாலை விண்ணப்பதரரிகளின் எண்ணிக்கை; பாடசாலை விண்ணப்பதரரிகளாக தோற்றிய சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல மாணவர்களின் எண்ணிக்கை; தனிப்பட்ட விண்ணப்பதரரிகளாக தோற்றிய சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல மாணவர்களின் எண்ணிக்கை; மாணவர்களின் எண்ணிக்கை பாடத்துறைக்கிணங்க; மாணவர்களின் எண்ணிக்கை மாவட்ட அடிப்படையில் ஆண்டுவரரியாக வெவ்வேறாக எவ்வளவென்பதை அவர் குறிப்பிடுவாரா? 2005 ஆம் ஆண்டு முதல் 2010 வரையிலான காலப் பகுதியில் அரசாங்கப் பாடசாலைகளில் இருந்த உயர்தர ஆசிரியர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பாடத்துறைக்கிணங்க; தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண பாடசாலைகளுக்கிணங்க; மொழி மூலத்திற்கிணங்க; மாவட்டத்திற்கமைய ஆண்டுவரரியாக வெவ்வேறாக எவ்வளவென்பதை அவர் குறிப்பிடுவாரா? இன்றேல், ஏன்? கெளரவ சஜித் பிரேமதாஸ, நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொதுவசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு, மத்திய வகுப்பினருக்கு சலுகை விலையில் பெற்றுக்கொடுப்பதற்காக மாடி வீடுகளை நிர்மாணித்தல் ஆரம்பிக்கப்பட்ட வருடம் யாதென்பதையும்; இற்றைவரை நிர்மாணப் பணிகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ள மேற்படி மாடி வீடுகளின் எண்ணிகை யாதென்பதையும்; மேற்படி மாடி வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? இன்றேல், ஏன்? கெளரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, பெற்றோலியக் கைத்தொழில்கள் அமைச்சரைக் கேட்பதற்கு, இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கடனிற்கு நிதியீட்டுவதற்காக வெளிநாட்டு மூலத்திடமிருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட உள்ளதா என்பதையும்; இது சம்பந்தமாக முதலீட்டு வங்கியுடனும் மேலே சொல்லப்பட்ட பேச்சு வார்த்தையில் சம்பந்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்ட அதன் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு முகவர்களுடனும் நடைபெறும் பேச்சுவார்த்தையின் நோக்கெல்லையின் விபரங்களையும் அவர் கூறுவாரா? அந்த முகவர்கள், பிரமிட் திட்டங்களின் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் எனவும்; இலங்கையில் அல்லது வேறு இடங்களில் வங்கிகளிடம் அல்லது வியாபார நிறுவனங்களிடம் ஒப்பந்தங்களை அல்லது கடன் கடப்பாடுகளை மீறியதாகவும்; மத்திய வங்கியின் உயர் அதிகரரிகளிடம் நெருங்கிய தனிப்பட்ட உறவையும் வர்த்தக வலைப்பின்னலையும் கொண்டவர்கள் எனவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது சொல்லப்பட்டவர்களை என்பதையும் அவர் குறிப்பிடுவாரா? உங்களுடைய வாடிக்கையாளரை அறிந்து வைத்திருங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பணம், பணம் தூய்தாக்கல் அல்லது பயங்கரவாத நிதியீட்டல் என்பவற்றால் கறைபடாதது என்பதை உறுதிப்படுத்துவதற்கும்; இடரைக் குறைப்பதற்கும் தகுந்த செயன்முறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதையும் அவர் கூறுவாரா? இன்றேல், ஏன்? கெளரவ ரவி கருணாநாயக்க, மின்வலு, எரிசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு, நாட்டினுள் பல்வேறுபட்ட பிரதேசங்களில் அடிக்கடி ஏற்பட்ட மின்சாரத் துண்டிப்பு மின்சார சபை அறியாமலே இடம்பெற்றதா; இன்றேல்,அதற்கான காரணங்கள் யாவை அவர் குறிப்பிடுவாரா? களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் மின்சார சபைக்கு உரித்தான மின் பிறப்பாக்கி (115MW) இயந்திரங்களுக்கு வழங்கப்பட்ட ஒரு லீற்றர் டீசலுக்காக 2011 ஜுன் மாதத்தினுள் செலுத்தப்பட்ட விலை யாது; களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் AES மின் பிறப்பாக்கி இயந்திரங்களுக்கு வழங்கப்பட்ட ஒரு லீற்றர் டீசலுக்காக செலுத்தப்பட்ட விலை யாது; களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் எரிபொருள் தாங்கித் தொகுதியின் கொள்ளளவு யாது; 2011 ஜுலை 4, 5, 6 மற்றும் 7 ஆகிய திகதிகளில் மேற்படி கொள்ளளவானது அத்தாங்கிகளில் காணப்பட்டதா என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி இயந்திரங்களை இயக்குவதற்காக ஒரு நாளைக்குத் தேவைப்படும் டீசல் லீற்றர்களின் எண்ணிக்கை யாது ; 2011 ஜுலை மாதம் ஏழாம் திகதி, களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி இயந்திரங்கள் அனைத்தும் செயலிழப்பதற்கு, எரிபொருள் காணப்படாமை காரணமாக அமைந்ததா அவர் குறிப்பிடுவாரா? இன்றேல், ஏன்? கெளரவ புத்திக பத்திரண, நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சரைக் கேட்பதற்கு, அம்பாறை மாவட்டத்தில் கல்ஒய திட்டத்தின் ஆரம்பிப்புடன் அமைக்கப்பட்ட அம்பாறை நீர்ப்பாசன திணைக்களத்துக்குச் சொந்தமான “வெளிக்கள விடுதி” அழிவடைகின்றதென்பதை அவர் அறிவாரா? மேற்படி வெளிக்கள விடுதியை துரிதமாக புனரமைத்து அத்திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுடைய தங்குமிட வசதிகளை பூர்த்திச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா; அதற்கான பணம் ஒதுக்கப்பட்டுள்ளதா; ஆமெனில் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாதென்பதையும் அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா? இன்றேல், ஏன்? கெளரவ தயாசிறி ஜயசேகர, கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு, 2011 ஆம் ஆண்டுக்காக லக் சதொச நிறுவனத்துக்கு அரிசி வழங்கிய வழங்குநர் அல்லது வழங்குநர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் வர்த்தகப் பெயர்கள் யாவை; மேற்படி வழங்குநர்களை தெரிவு செய்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கேள்விப்பத்திர நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதா; ஆமெனில், குறித்த கேள்விப் பத்திரத்துக்காக விலை மனுக்களைச் சமர்ப்பித்த ஏனைய விண்ணப்பதரரிகளின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை; மேற்படி கேள்விப் பத்திரத்துக்கமைய வழங்குநர்களினால் அரிசி வழங்க வேண்டிய கால எல்லை யாது என்பதை அவர் குறிப்பிடுவாரா? இன்றேல், ஏன்? கெளரவ சஜித் பிரேமதாஸ, நிர்மாண,பொறியியல் சேவைகள்,வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு, மஹிந்த சிந்தனை இலங்கையை வெற்றிபெறச் செய்வோம் கொள்கைகளில் ஜனசெவன நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமத்திலும் வருடமொன்றில் தலா 25 வீடுகளை நிர்மாணிப்பதாக வாக்குறுதியளிக்கப்பட்டு்ள்ளதென்பதை அவர் அறிவாரா? மேற்படி வாக்குறுதியின் பிரகாரம் தற்போது நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு பயனாளிகள் குடியமர்த்தப்பட்டு்ள்ள வீடுகளின் எண்ணிக்கை எத்தனை; மேற்படி வீடுகள் அமைந்துள்ள கிராமங்களின் பெயர்கள் யாதென்பதையும்; வீடொன்றை நிர்மாணிப்பதற்காக செலவிடப்பட்ட தொகை யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? இன்றேல், ஏன்? கெளரவ புத்திக பத்திரண, விளையாட்டுத் துறை அமைச்சரைக் கேட்பதற்கு, 2011 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடர் சம்பந்தமாக இலங்கை கிரிக்கட் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள செலவீனங்கள் பற்றிய அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிப்பாரா? இலங்கை பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டித் தொடரின் ஒளிபரப்பு உரிமை வழங்கப்பட்ட கம்பனியின் பெயர் யாதென்பதையும்; மேற்படி நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று உத்தியோகத்தராக செயற்படுகின்ற நபர் யாரென்பதையும் அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா? 2011 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடருக்காக இலங்கைக்குக் கிடைத்த பெரும் பணத்தொகையிலிருந்து அம்பாந்தொட்டை விளையாட்டு மைதானத்தை அமைப்பதற்கும் ஏனைய மைதானங்களுக்காகவும் செலவிடப்பட்டத் தொகை தனித் தனியாக எவ்வளவென்பதை அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா? இன்றேல், ஏன்? கெளரவ ரவி கருணாநாயக்க, வெளிநாட்டுவேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை அமைச்சரைக் கேட்பதற்கு, அரசாங்கத்தினால் 2004 ஆம் ஆண்டு முதல் இற்றை வரை வேலைவாய்ப்புகளுக்காக இத்தாலி, மலேசியா ஆகிய நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கையை வருட வரரியாகவும்; இத்தாலி, மலேசியா ஆகிய நாடுகளுக்கு நபர்களை அனுப்புவதன் மூலப்பிரமாணங்களையும்; அந்நாடுகளில் வேலை ஒன்றை வழங்குவதற்கு ஒவ்வொரு நபரிடமும் இருந்து அறவிடப்பட்டுள்ள தொகையையும்; அரசாங்கத்தினால் மேற்படி நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நபர் ஒருவரினது வேலை ஒப்பந்தத்திற்கான கால அளவையும்; அந்நாடுகளில் தொழில்புரியும் நபர் ஒருவரின் சராசரி வேதனத்தையும் அவர் கூறுவாரா? இன்றேல், ஏன்? கெளரவ தயாசிறி ஜயசேகர, கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு, வரரியபொல நகரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வடமேற்கு பொருளாதார மத்திய நிலையத்துக்கு அடிக்கல் நடப்பட்ட திகதி யாது; இதன் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்ட திகதி யாது; இதற்காக மதிப்பீடு செய்யப்பட்ட பணத்தொகை யாது; இதன் நிர்மாணப்பணிகள் பூர்த்தியாகின்றபோது செலவழிக்கப்பட்டுள்ள பணத்தொகை யாது என்பதை அவர் குறிப்பிடுவாரா? மேற்படி பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாது; தற்போது மேற்படி நிலையத்தில் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லையெனில், அதற்கான காரணங்கள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? வரரியபொலவில் பொருளாதார மத்திய நிலையமொன்றினை அமைப்பதற்கு ஏதுவாயமைந்த காரணங்கள் யாவை; மேற்படி மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ள காணியின் உரிமையாளர் யார்; இதற்காக மாதாந்தம் அல்லது வருடாந்தம் குத்தகை அல்லது வாடகை செலுத்தப்படுகின்றதா என்பதை அவர் குறிப்பிடுவாரா? இன்றேல், ஏன்? கெளரவ சஜித் பிரேமதாஸ, நிர்மாண,பொறியியல் சேவைகள்,வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு, மஹிந்த சிந்தனை இலங்கையை வெற்றிபெறச் செய்வோம் கொள்கைகளில் ஜனசெவன நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், முதல் ஐந்து ஆண்டுகளில் வட்டியை மட்டும் செலுத்துவதற்கான வசதியைக் கொண்ட வீடமைப்புக் கடன் திட்டமொன்றை உருவாக்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்டு்ள்ளதென்பதை அவர் அறிவாரா? மேற்படி வாக்குறுதியின் பிரகாரம் உரிய வீடமைப்புக் கடன் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட வருடம் யாதென்பதையும்; இது வரை மேற்படி வீடமைப்புக் கடன் வழங்கப்பட்டு்ள்ள குடும்பங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்; வீடமைப்புக் கடன் வழங்கப்படும்போது பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்ட அடிப்படை யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? இன்றேல், ஏன்? அனுதாபப் பிரேரணை காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ஏ.எம்.டி. ராஜன், பொது அலுவல்கள் ஆரம்பத்தின் போது பிரேரணை முன்னறிவித்தல். பாராளுமன்றச் சபை முதல்வர், பாராளுமன்ற அமர்வு, 7ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினாலும் 2011.04.07 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையினாலும் தடைபெறாமல் இன்றைய தினம் சபை அமர்வு நேரம் பி.ப. 1.30 மணி முதல் பி.ப. 6.30 மணிவரை இருக்குமாக. பி.ப. 3.30 மணிக்கு 7(5) ஆம் இலக்க நிலையியற் கட்டளை தொழிற்படுமாக. பிரேரணை முன்னறிவித்தல்களும் தினப்பணிகளும் கெளரவ ரவி கருணாநாயக்க, பாராளுமன்றத்தில் தேசிய கீதம் இசைத்தல், நாட்டில் தேசிய மனப்பாங்கை ஏற்படுத்துமுகமாக பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாக முன்னரும் ஒத்திவைக்க முன்னரும் பாராளுமன்றத்தில் தேசிய கீதம் இசைக்க வேண்டு மென்றும் இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, பலமான இலங்கை அடையாளத்தை ஏற்படுத்துதல், அரச ஆவணங்களில் ஒருவரது சாதியையும் சமயத்தையும் வெளிப்படுத்த வேண்டுமென்ற தேவைப்பாடு பலமான தேசிய அடையாளத்தை ஏற்படுத்துவற்கு தடையாகவும் இடர்ப்பா டகவுமுள்ளதால் இத்தேவைப்பாட்டிலிருந்து விலக்களிக்கப்பட வேண்டுமென்று இப் பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, வர்த்தக நோக்கங்களுக்காக சமயத் தலைவர்களின் உருவங்களை பயன்படுத்துவதை தடைசெய்தல், சகல சமயங்களும் சமமாக மதிக்கப்படல் வேண்டுமென்பதுடன் புத்தபெருமான், யேசுநாதர், சிவபெருமான், முஹம்மட் நபி (ஸல்) அவர்கள் ஆகியேரரின் உருவங்களை வர்த்தக விளம்பரங்களிலோ வேறுவிதமான சமயசார்பற்ற படிவங்களிலோ பயன்படுத்தலை தடைசெய்தலும் வேண்டுமென்று இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, நீதிமன்றங்களை அவமதித்தல் நடைமுறைகளை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சட்டங்களை ஆக்குதல், சகலருக்கும் சமமான நியாயத்தை உறுதிப்படுத்துவதற்காக சனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு பலமான சுதந்திர ஊடகவியலை ஏற்படுத்துவதற்கும் நீதிமன்றங்களை அவமதித்தல் நடைமுறை களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சட்டங்களை ஆக்க வேண்டுமென்று இப்பாராளு மன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, பொதுமக்களின் நலனுக்கான சட்டநடவடிக்கை களுக்காக சட்டங்களை அறிமுகப்படுத்தல், வறிய மக்களின் அடிப்படை உரிமைகள் மீறுதல், அரசாங்க கொள்கைகளில் உள்ளடக்கம் மற்றும் நடாத்துதல், மாநகர சபைகள் அதிகரரிகளினால் பொதுக் கடமைகள் நிறைவேற்றுதல், சமய உரிமைகள் அல்லது அடிப்படை உரிமைகள் மீறுதல் மற்றும் பொதுமக்களை கடனாளிகளாக்குகின்ற அல்லது அவர்களுக்கு மேலதிக பொறுப்புகள் ஏற்படுத்துகின்ற ஊழல்கள் ஆகியவை தொடர்பில் பொதுமக்களின் நலனுக்கான சட்டநடவடிக்கைகளுக்காக சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டுமென்று இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, அரசியல் கட்சிகளினால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு நிதி கணக்காய்வு அறிக்கைகள் சமர்ப்பித்தல், எல்லா அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளினாலும் பெறப்பட்ட வருமானமும் செலவிடப்பட்ட செலவினமும் பற்றிய கணக்காய்வு செய்யப்படுதல் வேண்டுமெனவும் வருடம் தோறும் தேர்தல் ஆணைக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்படுதலும் வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, அரச அலுவலர்களுக்கு தண்டனை வழங்குதல், அரச உயர் அலுவலர்கள் தமது சுதந்திர நிலைமையை அரசியல் மயமாக்கி மற்றும் அவர்கள் முறைகேடாக நடந்தால் அதனால் அவர்கள் குற்றவாளிகளாக கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுப் பத்திரங்களை கையளித்து தண்டனை விதிக்கப்பட வேண்டுமென்று இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, ஓய்வு பெறும் வயதெல்லையை நீடித்தல், அரச அலுவலர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 65 வருடம்வரை நீடிக்கப்பட வேண்டுமென்றும் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டால் விசேட திறமையுள்ள அரச அலுவலர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 70 வருடம்வரை நீடிக்கப்பட வேண்டுமென்றும் இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, கல்வியைப் பாதுகாப்பதற்காக தரப் பாதுகாப்பு பேரவையொன்றை நிறுவுதல், பொறுப்பற்ற முறையில் பல்கலைக்கழக பெயர்களை பாவித்து இலங்கையினுள் பல கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்படுவதனால் கல்வியை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாப்பதற்காக “தரப் பாதுகாப்பு பேரவையொன்றை” சட்டத்தின் மூலம் உடனடியாக நிறுவ வேண்டுமென்று இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, விசேட வழக்குத் தொடுநர் எனப்படும் பதவியொன்றை உருவாக்குதல், அரச சேவை அரசியல் தலையீடுகளிலிருந்து விலக்குவதற்காக சுதந்திர ஆணைக்குழுக்கள், அரசாங்க கணக்குக் குழு, அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு ஆகியவற்றினால் நிறுவனங்களில் செயற்றிறமை பாதிக்கின்ற மோசடிகள், ஊழல்கள், செயற்திறமையில்லாமை ஆகியவற்றை கண்டுபிடித்த உடனே பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்காக அவற்றுக்கெதிராக வழக்குத் தொடுக்கப்படுவதற்கு ‘‘விசேட வழக்குத் தொடுநர்” எனப்படும் பதவியொன்று உருவாக்கப்பட வேண்டுமென்று இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, பணவீக்கத்திற்குப் பொருத்தமான வகையில் 1% கொடுப்பனவு ஒன்று ஊழியர்களுக்கு செலுத்துதல், அரச நிறுவனங்களினால் நிர்வகிக்கப்படும் ஊழியர் சேமலாப நிதிய மற்றும் ஊழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதிய பணங்களை செலுத்துவதில் ஒவ்வொரு வருடத்திற்கான பணவீக்க அளவுக்கு மேலதிகமாக 1% கொடுப்பனவு ஒன்று ஊழியர்களுக்கு செலுத்துவதை உறுதிப்படுத்த வேண்டுமென்று இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, சிரேஷ்ட பிரசைகளுக்கு இலவச பயண வசதிகள் ஏற்பாடு செய்தல், சகல சிரேஷ்ட பிரசைகளுக்கும் பொதுப்போக்குவரத்துச் சேவைகளில் இலவச பயண வசதிகளை ஏற்பாடு செய்துதர வேண்டுமென்று இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, தகராறுகள் தீர்க்கும் நிலையமொன்றை உருவாக்குதல், பல இன, மத மக்கள் வாழும் இலங்கையில் சமாதானத்திற்கு பங்கம் ஏற்படும் சவால்களை எதிர்நோக்குகின்றமையினால் அவைகளை இலங்கையிலும், பிராந்தியத்திலும் மற்றும் முழு உலகத்திலும் தீர்ப்பதற்காக பெளத்த, கிரிஸ்தவ, இந்து மற்றும் இஸ்லாம் ஆகிய மதங்களின் ஒழுக்க நெறிகளைக் கொண்ட, தகராறுகள் தீர்க்கும் நிலையமொன்றை உருவாக்க வேண்டுமென்று இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, ஓய்வு ஆகிய பணிக்கொடையை தாமதமின்றி பெற்றுக்கொடுத்தல், இதுவரை ஓய்வூதியப் பணிக்கொடையைப் பெற்றிராத ஓய்வு பெற்றவர்களுக்கு அப்பணிக்கொடையை தாமதமின்றி பெற்றுக்கொடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, தேசிய கொள்கையாக்க சபை ஒன்றினை நியமித்தல், முறைசார் தேசிய கொள்கை மற்றும் திட்டவாக்கம் தொடர்பில் அரசியல்வாதிகள், மற்றும் விடயம்சார் அதிகரரிகளைக் கொண்டதும் அரசாங்கம் மாறும்போது மாறாததுமான விசேட அதிகாரங்களைக் கொண்ட தேசிய கொள்கையாக்க சபையொன்று நியமிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, வெளிநாட்டில் வேலை செய்பவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் தொடர்பில் சட்ட அதிகாரங்களைக் கொண்டதோர் அலகை ஏற்படுத்தல்,— வெளிநாடுகளில் வேலைசெய்வோர்கள் முகம் கொடுக்க வேண்டி ஏற்படுகின்ற தாக்குதல்கள், ஆட்கடத்தல், கற்பழிப்பு, பெண்களை இழிதொழிலில் ஈடுபடுத்தல், ஆட்கொலைகள் மற்றும் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு தொடர்பில் செல்லும்போது இடம்பெறுகின்ற மோசடிகள், வெளிநாடுகளில் அகதிகளாக்கப்பட்டுள் ளவர்களை திரும்ப அழைத்துக்கொள்ளல் மற்றும் அவர்களின் பாதுகாப்பு தொடர்பில் செயற்படக்கூடிய சட்ட அதிகாரங்களைக் கொண்டதோர் அலகு ஏற்படுத்தப்பட வேண்டு மென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, புதிய கண்டுபிடிப்பாளர்களை உலகிற்கு அறிமுகப்படுத்து முகமாக தேசிய திட்டமொன்றினை உருவாக்குதல்,— புதிய கண்டுபிடிப்பாளர்களையும் பலதரப்பட்ட திறமைகளைக்கொண்ட பிரசைகளையும் உலகத்திற்கு அறிமுகப்படுத்து வதற்காகவும் அவர்களது திறமைகள் உருவாக்கங்களை மேம்படுத்துவதற்காகவும் தேசிய திட்டமொன்றினை வகுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, உள்ளூர் மூலவளங்களை பயன்படுத்தும் கைத்தொழிலாளர்களுக்கு வரிச்சலுகைகள் வழங்கல், உலகச் சந்தைக்காக 75% உள் நாட்டு மூலவளங்களைப் பயன்படுத்தி உற்பத்திகளை மேற்கொள்ளும் உள்நாட்டு கைத்தொழிலாளர்களுக்கு 2 வருடகால வரிச்சலுகை வழங்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, தோட்ட சமுதாயத்திற்கு பிரசாவுரிமை வழங்குதல், இலங்கைப் பிரசாவுரிமையற்ற சகல தோட்டப்புற மக்களிற்கும் அவர்களது விருப்பத்தின் பேரில் பிரசாவுரிமை வழங்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, தீவிலேயுள்ள ஆரம்பப் பாடசாலை மாணவர்களிற்கு ஒரு கோப்பைப் பால் வழங்குதல். தீவிலேயுள்ள சகல ஆரம்பப் பாடசாலை மாணவர்களிற்கும் காலையில் இலவசமாக ஒரு கோப்பை பால் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியங்களை ஒரு வாரகாலத்தினுள் விண்ணப்பதரரிகளுக்கு பெற்றுக் கொடுத்தல், ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியங்களை மீளப்பெற விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு வார காலத்தினுள் அவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கு உரிய திட்டமொன்றினை வகுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, பாடசாலை மாணவர்களுக்கு இலவசப் பயணச் சீட்டு வழங்குதல், பாடசாலை மாணவர்கள் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை பேரூந்துகளில் பிரயாணம் செய்வதற்காக இலவச பயணச்சீட்டுக்களை வழங்குகின்ற முறையொன்றினை அறிமுகப்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, விளையாட்டுப் பாடசாலைகளை அமைத்தலும் தேசிய விளையாட்டுக் கொள்கையினை வகுத்தலும், நீண்ட கால இலக்குடைய தேசிய விளையாட்டுக் கொள்கையினை வகுப்பதற்கான நடிவடிக்கைகளை எடுப்பதற்கான முதல் கட்டமாக சகல மாவட்டங்களையும் உள்ளடக்கூடிய வகையில் விளையாட்டரங்கு, விளையாட்டு மைதானம், விளையாட்டு உபகரணங்கள், விளையாட்டு போதனாசிரியர் களைக் கொண்ட உயர் மட்ட விளையாட்டுப் பாடசாலைகளை அமைக்க வேண்டுமென்று இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, தேசிய மொழிகளிற்கான கல்விப் பீடமொன்றினை நிர்மாணித்தல், ஆசிரியர்களிற்கு சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளை கற்பிப்பதற்காக தேசிய மொழிகளிற்கான கல்விப்பீடமொன்றினை நிர்மாணிக்க வேண்டு மென்று இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, அரசாங்க தகவல்களை சுதந்திரமாக பெற்றுக் கொள்வதற்காக சட்டங்களை இயற்றுதல், அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையை பேணுவதற்கும் பொதுமக்கள் அனைத்து அரசாங்க தகவல்களையும் சுதந்திரமாக பெற்றுக் கொள்வதற்கான உரிமைக்காகவும் பாராளுமன்றத்தில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, இலங்கையர்களுக்கு மிகவும் சிறந்த சுகாதார வாய்ப்புக்களை வழங்குதல், மக்களில் அதிகமானோர் இருதய சத்திரசிகிச்சை செய்ய வேண்டிய தேவை உடையவர்களாய் இருப்பதால் இலங்கையர்களுக்கு மிகவும் சிறந்த சுகாதார வாய்ப்புக்களை வழங்க வேண்டியிருப்பதாலும் அதற்காக தனியார் துறை ஊழியர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியம் அல்லது ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தினூடாக இலவசமாக வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என்றும் அரசாங்க ஊழியர்கள் அல்லது தொழிலற்றோருக்கு அதற்கான முழு செலவையும் அரசாங்கத்தினால் சனாதிபதி நிதியத்தினூடாக வழங்குதல் வேண்டுமென்றும் இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, உலக சுற்றாடலை பாதுகாத்தல், இலங்கை உலக சுற்றாடலை பாதுகாக்கும் பொருட்டு கூடிய கவனம் செலுத்த வேண்டுமென்பதோடு புவி வெப்பமாதலை தவிர்ப்பதற்காக குறிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, பாராளுமன்ற நடவடிக்கைகளை ஒளிபரப்புதல், தொலைக்காட்சி அல்லது இணையம் மூலமாக பாராளுமன்ற நடவடிக்கைகள் நேரடியாக அல்லது தணிக்கை செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, வெளிநாடுகளில் வசிக்கின்ற இலங்கையர்களுக்கு வாக்களிப்பதற்கான அனுமதியை வழங்குதல், வெளிநாடுகளில் வசிக்கின்ற இலங்கையர் களுக்கு எதிர்கால தேர்தல்களில் வாக்களிப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, இலத்திரனியல் வாக்களிப்பு முறைமையினை அறிமுகப்படுத்துதல், தற்போதுள்ள பழைமையான வாக்களிப்பு முறைமைக்குப் பதிலாக இலத்திரனியல் வாக்களிப்பு முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ அஜித் குமார, காலி கோட்டை மற்றும் அதனை அண்டியுள்ள வரலாற்று ரீதியான மற்றும் தொல்பொருள் மரபுரிமைகளைப் பாதுகாத்தல், மேம்படுத்தல் மற்றும் உரிய பயனைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுத்தல்,— சுற்றுலா கைத்தொழில் துறையின் மிக முக்கியமான மையமாகவும், வரலாற்று மற்றும் தொல்பொருள் ரீதியில் பெறுமதியைக்கொண்டதும், உலக மரபுரிமையாகக் கருதப்படுகின்றதுமான காலி கோட்டை மதில், காலி கோட்டையின் உள்பகுதியிலும் காலி கோட்டையை அண்டியும் அமைந்துள்ள வரலாற்று மற்றும் தொல்பொருள் ரீதியான மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் அவற்றுடன் தொடர்புடைய அரச நிறுவனங்களினதும் மக்களினதும் பங்கேற்புடன் முறையான திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி இந்த வரலாற்று ரீதியான மரபுரிமைகளின் உரிய பயனை நமது நாடு பெற்றுக்கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, தேருநர் இடாப்பை அடிக்கடி இற்றைப்படுத்துதல், தேருநர் இடாப்பு வருடத்தில் மாதமொன்றுக்கு முப்பது நாட்களுக்கு மட்டும் இற்றைப்படுத்தும் பட்டியலொன்றாக அல்லாமல் அது அடிக்கடி இற்றைப்படுத்தும் திறந்த பட்டியலொன்றாக இருத்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் ஈடுபட்டுள்ளோருக்கு ஓய்வூதிய முறையொன்றை அறிமுகப்படுத்துதல்,— வெளிநாடுகளுக்குச் சென்று மிகவும் சிரமத்திற்கு மத்தியில் உழைக்கும் செல்வத்தை, இலங்கையின் செல்வத்தை அதிகரிப்பதற்காக அனுப்புகின்ற, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளவர்களை மதிக்கும் வகையில் ஓய்வூதிய முறையொன்றை பெற்றுக்கொடுத்தல் வேண்டுமேன இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, 2009 மே மாதம் 19 ஆம் திகதிக்கு முன்னர் சேவையில் இருந்த ஆயுதப் படையினருக்காக ஓய்வூதிய முறையொன்றை அறிமுகப்படுத்தல், — பாராளுமன்ற உறுப்பினர்கள் 5 வருட சேவைக்காலத்தை பூர்த்திசெய்த பின்னர் ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு தகைமைபெறுகின்றதனால் ஆயுதப் படைகளில் 22 வருடங்கள் பூர்த்தி செய்யாத போதிலும் 2009 மே மாதம் 19 ஆம் திகதிக்குப் முன்னர் சேவையில் இருந்த ஆயுதப் படையினருக்கும் ஓய்வூதியம் பெற்றுக்கொடுக்கப்படல் வேண்டும் என இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, வலது குறைந்ததும் நடமாடமுடியாததுமான நபர்களுக்கு விசேட வடிவங்களை அறிமுகப்படுத்துதல், சட்டத்தில் குறிப்பிடப்படுகின்றவாறு வலது குறைந்தேரரின் வசதிகளை உறுதிப்படுத்தவும் அவர்களிடமுள்ள வினைத்திறனை அதிகரிப்பதற்காகவும் அவர்கள் தேவையற்ற விதத்தில் பிறர்மீது தங்கிருப்பதைக் குறைப்பதற்காகவும் அரசாங்கத்தின் அனைத்து புதிய கட்டிடங்கங்களிலும் விசேட வடிவமொன்றை அமைக்க வேண்டும் என இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்தல், பதிவுசெய்திருந்தும் வாக்களிப்பதற்கான வாய்ப்புக்கிடைக்காத வாக்காளர் அநேக எண்ணிக்கையானோர் இருப்பதனாலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டுமெனவும் தேருநர் இடாப்பில் பெயர் குறிப்பிடப்பட்டதன் பின்னர் வாக்களிக்காத நபர்களிடமிருந்து தண்டப் பணமொன்றை அறவிவிடுதல் வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, ஊழலற்ற உலகொன்றை உறுதிப்படுத்தல், ஊழலை முற்றாக ஒழிப்பதற்காக இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து உலகிலுள்ள பாராளுமன்ற அமைப்புக்களில் சேர வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, ஏமாற்றப்பட்ட பண வைப்பாளர்களுக்கு தமது நிதிகளை மீளச் செலுத்துதல், போலி நிதி நிறுவனங்களில் தமது பணத்தை வைப்பிலிட்டு அதனால் ஏமாற்றமடைந்த அநேகமானோர் இருப்பதனாலும் கடந்த 2009/2010 தேர்தல் பிரசாரங்களில் இந்த அரசாங்கம் பண வைப்பாளர்கள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அவற்றின் மிகுதிப் பணத்தை மீளச் செலுத்த வாக்குறுதி அளித்திருப்பதனாலும் மத்திய வங்கி இந்நிறுவனங்களின் பொறுப்பாளராக இருப்பதனால் மிகவும் வினைத்திறனுடன் செயற்படவேண்டுமென்பதோடு பண வைப்பாளர்களுக்கு அவர்களது மிகுதிப் பணத்தை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, சமாதான நீதவான் பதவிகளை வழங்குவதற்கான முறையான வழிமுறையொன்றைத் தயரரித்தல், சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றதும் சமுகத்திற்கு அளப்பரிய சேவையாற்றுவதுமான சமாதான நீதவான் பதவிகள், ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதிகளுக்குப் புறம்பாக வழங்கப்படுவதன் காரணமாக அப்பதவியின் கெளரவமும் அங்கீகாரமும் படிப்படியாக குறைவடைவதனால் குறித்த நியமனங்களுக்கென முறையான வழிமுறையொன்றைத் தயரரிக்க வேண்டுமென இப்பாராளுன்றம் கருதுகின்றது. கெளரவ புத்திக பதிரண, சுனாமி அனர்த்தத்தினால் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணல், சுனாமி அனர்த்தம் காரணமாக ஏதேனும் பிரச்சினைக்கு முகம் கொடுத்து இது வரை அப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காமல் இருப்பின், பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் மாவட்ட செயலாளர் பிரிவு அடிப்படையில் ஆராய்ந்து, அவர்கள் முகம்கொடுத்துள்ள அல்லது தற்போது முகம்கொடுக்கும் பிரச்சினைகளை குறைப்பதற்கான வினைத்திறன்மிக்க வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, வீட்டிலிருந்து தொழில் புரிவோருக்கான தேசிய கொள்கையொன்றை வகுத்தல், இலங்கையில் பலதரப்பட்ட தொழில் வாய்ப்புத் துறைகளில் பல தரப்பட்ட உற்பத்திப் பணிகளில் ஈடுபடும் சுமார் பத்து இலட்சம் பேர்களான வீட்டிலிருந்து தொழில் புரிவோர்களுக்காக அரசியல் அதிகாரம் வாய்ந்தோர்கள், அதனுடன் தொடர்புபட்ட சகல துறைகளினதும் தேர்ச்சிபெற்றவர்கள் புத்தி ஜீவிகள் உட்பட அரச, மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியைப் பெற்று முறையான தேசிய கொள்கையொன்றை வகுத்து அதனை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளமுடியாதுள்ள வயற்காணிகளை பயனுள்ள நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துதல்,— வயற் காணிகளை நிரப்புவதற்கான சட்டம் மீறப்படாத வகையில், ஒழுங்குமுறையான ஆய்வு ஒன்றின் மூலம் இனங்காணப்பட்டதன் பின்னர் எவ்வகையிலும் நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ள முடியாத வயற் காணிகளில் பயனுள்ள விவசாய உற்பத்திகளை மட்டும் பயிரிடுவதற்கும், நிர்மாணப் பணிகளுக்காக எவ்வித வாய்ப்புகளும் கிடைக்காத வகையிலுமான நிகழ்ச்சித் திட்டங்களை வகுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, அரச சேவையைச் சேர்ந்த ஓய்வூதியம் பெறுபவர்களின் சம்பள முரண்பாட்டினை நீக்குதல், 2006/6 சம்பள மீள்திருத்த சுற்றறிக்கையின் பிரகாரம் 2006.06.01 ஆம் திகதியிலிருந்து அமுலாகின்றவாறு அரச ஊழியர்களுக்கு சம்பள மாற்றம் வழங்கப்பட்டமையால் 2006.06.01 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வுபெற்ற மற்றும் அதன் பின்னர் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கிடையில் பரரிய சம்பள முரண்பாடு நிலவுவதால் அதனை நீக்குவதற்கான ஒரு தேசிய வேலைத்திட்டம் தயரரிக்கப்படுதல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, மாவட்ட மட்டத்தில் தகவல் மத்திய நிலையங்களை நிறுவுதல், புவியியல் அமைவு, வரலாற்றுப் பின்னணி, பயிரிடப்படும் பயிரினங்கள், வீதி முறைமை அரச அலுவலகங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், புகையிரத நிலையங்கள் மற்றும் பேரூந்து தரிப்பிடங்கள் ஆகிய அனைத்து தகவல்களும் கணனிமயப்படுத்தப்பட்ட மற்றும் ஆவணப்படுத்தப்பட்ட தகவல் மத்திய நிலையங்களை நிறுவுவதற்கும், அதன் முதலாவது கட்டத்தின் போது மகாகாண மட்டத்திலும் இரண்டாவது கட்டத்தின் போது மாவட்ட மட்டத்திலும் மூன்றாவது கட்டத்தின் போது பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேச மட்டத்திலும் இந்நிலையங்களை நிறுவவேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, இலங்கையில் அறநெறி பாடசாலைகளின் கல்வி மற்றும் நிர்வாகத்தை ஒழுங்கு முறைப்படுத்தல், இலங்கையில் சகல மதங்களினதும் அறநெறி பாடசாலைகளின் கல்வி மற்றும் நிர்வாகத்தை மேலும் ஒழுங்கு முறைப்படுத்துவதற்கும் பெளத்த அறநெறி பாசாலைகளில் காணப்படும் அறநெறி இறுதிப் பரீட்சை மற்றும் அறநெறி தர்மாசார்ய பரீட்சை மற்றும் சகல மதங்களினதும் அறநெறி பாடசாலைகளில் நடாத்தப்படும் இவற்றுக்கு இணையான பரீட்சைகளின் சான்றிதழ்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்குதலும், அறநெறிப் பாடசாலைக்கு தொடர்ச்சியான மனித வளங்களுடன் பெளதீக வளங்களையும் வழங்குவதன் மூலம் அறநெறிப் பாடசாலைகளுக்கு சமுகமளிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு துரித வேலைத்திட்டமொன்றை வகுத்தலும் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, நாய்கள், பூனைகள் போன்ற செல்லப் பிராணிகளை வளர்த்தல் தொடர்பான சட்டங்களை வகுத்தல், வீடுகளில் அல்லது விற்பனை செய்வதற்காக வளர்க்கப்படும் நாய்கள், பூனைகள் போன்ற செல்லப்பிராணிகளை உள்ளூராட்சி நிறுவனங்களில் பதிவு செய்யத் தேவையான சட்டங்கள் வகுக்கப்பட வேண்டுமென்பதோடு, குறித்த பிராணிகளின் குட்டிகளை, சட்டரீதியான அனுமதி பெற்ற நிலையங்களில் மாத்திரம் விற்பனை செய்தல் வேண்டுமெனவும் அவ்வாறல்லாத இடங்களில் வளர்க்கப்படும் பெண்ணினப் பிராணிகளை கட்டாயமாக மலடாக்கலுக்கு உட்படுத்துவதற்கும், தேவையான சட்டங்கள் வகுக்கப்படவேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, தொழில் சந்தைக்குத் தேவையான ஊழியர்களை பயிற்றுவித்தல், எதிர்காலத்தில் இலங்கையில் உருவாகும் புதிய தொழில் வாய்ப்புகளுக்குத் தேவையான ஊழியர்களைப் பயிற்றுவிக்கும் வழியொன்றைத் தொடங்கி வைக்கும் பணியை மிகவும் வினைத்திறனான வகையில், நாட்டினுள் காணப்படும் அனைத்து மூன்றாம் நிலைக்கல்வி நிறுவனங்களினூடாக ஆரம்பித்தல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, பொதுநிர்வாக கட்டமைப்பை மறுசீரமைத்தல், தற்சமயம் பொதுநிர்வாக அமைச்சினால் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளின் எல்லைகளை மீள நிர்ணயிப்பதற்கனான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதோடு அவ்வாறு எல்லை நிர்ணயம் செய்யப்படும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகளினூடாக புதிய பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேச எல்லைகளையும் புதிய மாவட்ட எல்லைகளையும் நிர்ணயிக்க வேண்டுமெனவும், இவ்வாறு நிர்ணயிக்கப்படும் பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசங்கள் உள்ளூராட்சி மன்ற ஆளுகைப் பிரதேசங்களாக மாற்றியமைக்க வேண்டுமெனவும், அத்தகைய ஆளுகைப் பிரதேசத்தினுள் கோட்டக் கல்வி அதிகாரப் பிரதேசம், பொலிஸ் அதிகாரப் பிரதேசம், கமநல சேவைகள் அதிகாரப் பிரதேசம், பிரதேச சுகாதார சேவை உத்தியோகத்தர் அதிகாரப் பிரசேதம் உள்ளிட்ட சகல அரச நிறுவனங்களினதும் அதிகாரப் பிரதேச எல்லைகள் உள்ளடங்கும் வகையில் ஒட்டுமொத்தமான பொதுத்துறைக் கட்டமைப்பும் திருத்தப்பட வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, நில்வளா கங்கை திட்டத்தின் எதிர்கால அபிவிருத்திப் பணிகளை மீள ஆரம்பித்தல், மாத்தறை மாவட்டத்தின் நில்வளா கங்கை திட்டத்தின் அபிவிருத்திப் பணிகள் இடைநடுவில் முடங்கியிருப்பதால் அப்பள்ளத்தாக்கின் ஊட்டப் பிரதேசத்தில் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளும் மக்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், நில்வளா கங்கை திட்டத்தின் எதிர்கால அபிவிருத்திப் பணிகளை விரைவில் மீள ஆரம்பிக்க வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் மக்களின் பிரதிநிதிகளின் பதவிக் காலத்துக்குப் பின்னரும், சமாதான நீதவான் பதவியினை வழங்குதல்,— மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களின் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படுகின்ற, சமாதான நீதவான் பதவியானது, அவர்களது பதவிக் காலத்துக்கு மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளதாலும், இப்பதவிக்காலத்தின் பின்னரும், அவர்களிடம் மேற்படி சேவையினைப் பெறுவதற்காக வரும் அநேகமானோர் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர் என்பதாலும், இம் மக்கள் பிரதிநிதிகளுக்கு தமது பதவிக் காலத்தின் பின்னரும், சமாதான நீதவான் பதவியினை வழங்குவதற்கான தகுந்ததொரு வேலைத் திட்டத்தினை வகுத்தல் வேண்டும் என இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரினதும் கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகள் குறித்து மீளாய்வு செய்தல்,— நாட்டில் தற்போது இயங்கி வருகின்ற மாகாண சபைகள் மற்றும் எதிர்காலத்தில் ஒழுங்கு முறையாக செயற்படவுள்ள வடமாகாண சபையின், கெளரவ அமைச்சர்கள், தவிசாளர்கள், உபதவிசாளர்கள், ஆளும் கட்சியின் முதற்கோலாசான், சபைத் தலைவர்கள், எதிர்க் கட்சித் தலைவர்கள், எதிர்க் கட்சியின் முதற்கோலாசான் மற்றும் கெளரவ உறுப்பினர்கள் ஆகியேரரின் கொடுப்பனவுகள், சிறப்புரிமைகள் மற்றும் வசதிகள் ஒழுங்கான முறையில் காணப்படாமையினால், இது தொடர்பாக ஆழமாக ஆராய்ந்து அதற்கான ஒழங்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, உள்ளுராட்சி நிறுவனங்களின் அனைத்து மக்கள் பிரதிநிதிகளினதும் கொடுப்பனவுகள் மற்றும் சிறப்புரிமைகளை மீளாய்வு செய்தல்,— நாட்டில் நடைமுறையிலுள்ள மற்றும் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அனைத்து மாநகர சபை, நகர சபை, மற்றும் பிரதேச சபைகளினதும் நகரபிதாக்கள், நகர சபைத் தலைவர்கள், மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள், பிரதி நகரபிதாக்கள், பிரதி நகர சபைத் தலைவர்கள், உப தலைவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் கெளரவ உறுப்பினர்கள் ஆகியேரரின் கொடுப்பனவுகள், சிறப்புரிமைகள் மற்றும் வசதிகள் ஒழுங்குமுறையாக இல்லாத காரணத்த்தால் இது தொட்பாக ஆழமாக ஆராய்ந்து இதற்கான ஒழுங்குமுறையுடன் கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, வடக்கு கிழக்கில் காணாமற் போன தமிழ் மக்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்குதல், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் யுத்தம் நடைபெற்ற கடந்த மூன்று தசாப்த காலமாக பல்வேறு காரணங்களால் காணாமற் போயுள்ளவர்கள் தற்போது உயிர் வாழ்கின்றார்களா, இல்லையா என்பதையிட்டு துரிதமாக விசாரணை செய்து, இவர்கள் உயிருடன் இல்லாதிருப்பின் இவர்களுக்கான மரணச் சான்றிதழ்களை வழங்குதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, தேசிய இளைஞர் கொள்கையொன்றை வகுத்தல், அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கெளரவ பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தெரிகுழுவொன்றை நியமித்து, இலங்கைக்கு உகந்த தேசிய இளைஞர் கொள்கையொன்றை வகுத்தல் ஆரம்பிக்கப்பட்ட வேண்டுமெனவும் அந்நோக்கத்திற்காக அதனுடன் தொடர்புடைய அனைத்துத் துறைகளும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேர்ச்சி பெற்றவர்கள் அறிஞர்கள் மற்றும் புத்திஜீவிகளினதும் அதேபோன்று அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களினதும் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, அரசாங்க பாடசாலைகளையும், பல்கலைக் கழகங்களையும் விடுமுறை நாட்களில் கற்கை அலகுகளுக்காகப் பெற்றுக்கொடுத்தல்,— அரசாங்க பாடசாலைகளின் விடுமுறை நாட்களிலும் பிற்பகல் நேரத்திலும், பல்கலைக்கழகங்களின் விடுமுறை நாட்களிலும், அந்த நிலையங்களை அடிப்படையாகக் கொண்டு, வர்த்தக சமுதாயத்தினரையும், அரச சார்பற்ற அமைப்புகளையும், வர்த்தகச் சபைகளையும், சமுதாய அடிப்படையிலான அமைப்புகளையும் இணைத்துக்கொள்கின்றதான விரிவானதொரு வேலைத்திட்டமாக, முதியோர் மற்றும் முறைசாரா கற்கை அலகுகள் சலுகைக் கட்டண அடிப்படையில் ஆரம்பிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, வெற்றிடமாகின்ற கிராம உத்தியோகத்தர் பதவிகளில் பதிற் கடமை புரியும் நியமனங்களுக்காக வினைத்திறன்மிக்க வேலைத்திட்டமொன்றைத் தயரரித்தல்,— கிராம உத்தியோகத்தர் பதவியில் வெற்றிடம் ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் அண்மையிலுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தர் மிகச் சிறியதொரு கொடுப்பனவின் அடிப்படையில் பதிற்கடமைக்காக நியமிக்கப்படுவதாலும், மேற்படி பதிற் கடமை நியமனத்தின் மூலம் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இரண்டினதும் வினைத்திறன் வீழ்ச்சயடைவதாலும், இந்த நிலைமையை தவிர்த்துக் கொள்ளும் பொருட்டு சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கிராம உத்தியோகத்தர் சேர்மம் ஒன்றை அமைக்க வேண்டுமென்பதோடு, வெற்றிடம் ஏற்படுகின்ற பிரிவுகளுக்கு மேற்படி சேர்மத்திலிருந்து கிராம உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கும், மேற்படி சேர்மத்திலுள்ள கிராம உத்தியோகத்தர்களை, பிரதேச செயலாளரினால் ஒப்படைக்கப்படுகின்ற வேறு பயனுள்ள துறைகளில் அல்லது கடமைகளில் ஈடுபடுத்துவதற்குமான வேலைத்திட்டமொன்று தயரரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, தற்போது செயற்படும் சிவில் பாதுகாப்புக் குழுக்குகளுக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை வழங்குதல், சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் அமைந்துள்ள மத வழிபாட்டுத் தலங்களின் தலைமை தேரர், மதகுரு, பாடசாலை அதிபர், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், கமத்தொழில் ஆராய்ச்சி உதவியாளர், சனசபைச் செயலாளர்கள், பிரதேசத்தின் பொலிஸ் நிலையத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு உத்தியோகத்தர், மற்றும் உரிய கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள தொண்டர் அமைப்புக்கள், அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் உரிய பிரிவில் வசிக்கும் பிரதிநிதிகளை உள்ளடக்கிய சிவில் பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்படுவதை மிகவும் எளிதாக்கும் பொருட்டு தற்போதைய சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்கு உத்தியோகபூர்வ அங்கீகாரமொன்றை வழங்கக்கூடியவாறான பாராளுமன்றச் சட்டமொன்று நிறைவேற்றப்படுதல் வேண்டுமெனவும் அதனூடாக கிராம உத்தியோகத்தர் பிரிவில் நடைபெறுகின்ற குற்றச் செயல்கள், துர்நடத்தைகள் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட பிரிவுகளுடன் சிறந்த தொடர்பைக் கட்டியெழுப்புவதற்கு இயலுமானவாறு குறித்த சட்டங்கள் ஆக்கப்படுதல் வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, நாட்டில் தற்பொது அமுலில் உள்ள காலங்கடந்த சட்டங்களை இற்றைப்படுத்துதல், தற்போதும் இலங்கையில் ஏகாதிபத்திய வழிகளின் காலத்தில் அறிமுகஞ் செய்யப்பட்ட சட்டங்கள் அமுலாகிவருவதால் காலங்கடந்த தண்டனைகள், தண்டப்பணம் என்பவற்றை இற்றைப்படுத்துவதற்கான தேசிய வேலைத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுத்தப்படல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பத்திரண, தேர்தல்ள் அனைத்தையும் ஒரே நாளில் நடத்துதல், இலங்கையில் 1988 இல் இருந்து 2010 வரையான 22 வருட காலப்பகுதிக்குள் ஆண்டுகளைத் தவிர்ந்த ஏனைய ஒவ்வோர் ஆண்டிலும் ஏதேனும் ஒரு தேர்தல் நடத்தப்பட்டுள்ளதோடு அவ்விதமாக தேர்தல்களை நடத்துதலானது மக்களின் அபிப்பிராயத்தைக் கண்டறிவதற்கான பெறுமதி மிக்க அளவுகோலாக அமைந்த போதிலும், இதன் மூலமாக நாட்டின் பொருளாதாரம், நிருவாகம் போன்ற அனைத்துத் துறைகளிலும் தீவிரமான தாக்கம் ஏற்படுத்தப்படுவதால் உள்ளூராட்சித் தேர்தல்கள், பொதுத்தேர்தல்கள் மற்றும் சனாதிபதித் தேர்தலை ஒரே நாளில் நடத்துவதற்கேதுவாக மேற்படி நிறுவனங்களின் பதவிக் காலத்தை திருத்தியமைக்கவும் பொருத்தமான தேர்தல் வழிமுறையொன்றை உருவாக்கவும் தகுந்தவாறு அரசியலமைப்புத் திருத்தமொன்றை மேற்கொள்ள வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பத்திரண, பாராளுமன்ற சனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளுதல், நாட்டினுள் சனநாயகத்தை மேலும் வலுவூட்டும் நோக்கத்துடன் பாராளுமன்றத்திற்கும் மாகாண சபைகளுக்கிடையிலும், மாகாண சபைகளுக்கும் உள்ளுராட்சி நிறுவனங்களுக்கிடையிலும் சிறந்த இணைப்பினை பேணிவருதல் அத்தியாவசியமாயுள்ளதோடு, இதற்கு உள்ளுராட்சி சபைகளின் தலைவர்கள் மாகாண சபைகளில் பிரதிநிதித்துவம் வகிப்பதை உறுதிசெய்வதற்கும் மாகாண சபை தலைவர்கள் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகிப்பதை உறுதி செய்வதற்குமான செயல்முறையொன்றை தயரரிப்பதற்குத் தேவையான அரசியலமைப்புத் திருத்தமொன்று மேற்கொள்ளப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல், தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் வாழ்ந்து வரும் பிரதேசங்களில் சிங்கள மொழிப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களையும் சிங்கள மொழி பேசுகின்ற மக்கள் வாழும் பிரதேசங்களில் தமிழ் மொழிப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களையும், அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் நடைமுறைப்படுத்தல் வேண்டுமென்பதுடன், அரச மற்றும் தனியார் இலத்திரனியல் ஊடகங்கள் மட்டுமன்றி அச்சு ஊடக நிறுவனங்களின் ஒத்துழைப்பினையும் பெற்றுக்கொண்டு இப்பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை ஆரம்பிப்பதற்கான ஒரு தேசிய நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, வாழ்க்கைத் துணையின் தகாத செயல்களினால் நிர்க்கதிக்குள்ளாகும் தரப்பினருக்கு நிவாரணமளித்தல், திருமணமான கணவன் மனைவி தம்பதிகள் ஒரே வீட்டில் வாழ்கின்ற சந்தர்ப்பங்களில் கணவன் அல்லது மனைவி மதுபாவனை சூதாட்டம் அல்லது வேறு துர்நடத்தைகளில் ஈடுபட்டு, காணி, வீடு அல்லது வீட்டுப் பாவனைப் பொருட்களை தனது தற்றுணிபின் பிரகாரம் விற்பதன் காரணமாக அல்லது வேறு நபர்களுக்கு ஒப்படைப்பதன் காரணமாக மற்றைய தரப்பினருடன் பிள்ளைகளும் கடும் நிர்க்கதி நிலைக்குள்ளாகின்ற சந்தர்ப்பங்களில் அந்நிலைமையை தடுப்பதற்குத் தேவையான சட்டங்கள் ஆக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பத்திரண, ஒழுக்க நெறிகள் பற்றிய குழுவை தாபித்தல், இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களின் நம்பகத்தன்மையையும் அவர்களிடத்தில் உயரிய ஒழுக்க நெறிகளையும் பேணவேண்டிய தேவைப்பாட்டைப் பற்றி ஆராய்வதற்காக ஒழுக்க நெறிகள் பற்றிய குழு ஒன்று தாபிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பத்திரண, புதிய இலத்திரனியல் அடையாள அட்டையை வழங்குதல், நிர்வாகத்தை எளிதாக்குதல், குற்றங்களை கட்டுப்படுத்துதல் மற்றும் ஏனைய மோசடியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் குறைப்பதற்காக, குறித்த நபரின் இரத்தப் பிரிவு, வங்கிகக் கணக்குகள், கடன் அட்டை, கல்வித் தகைமை, சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் வெளிநாட்டுப் பிரயாண கடவுச்சீட்டு இலக்கம் ஆகிய முக்கியமானதும் தேவையானதுமான தகவல்களை உள்ளடக்கிய புதிய இலத்திரனியல் இலக்கத்துடனான, தேசிய அடையாள அட்டையொன்று வழங்கப்படுதல் வேண்டும் எனவும், பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் அனைவரது தகவல்களையும், கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் மட்டத்தில் கணனிமயப்படுத்தலை துரிதப்படுத்தல் வேண்டும் எனவும் இத் தகவல்கள் அவ்வப்போது இற்றைப்படுத்தப்படல் வேண்டும் எனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பத்திரண, ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இருபது வருட சேவைக் காலத்தின் பின்னர், ஓய்வு பெறுவதற்கு வாய்ப்பளித்தல்,— பொலிஸ் திணைக்களத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான இருபது வருட சேவைக் காலத்தின் பின்னர், சுயவிருப்பில் ஓய்வு பெறுவதற்கான இயலுமானது, ஆண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பிலும் ஏற்புடையதாதல் வேண்டுமென்றும் அதற்கான செயல்முறை ஒன்று உருவாக்கப்படல் வேண்டுமென்றும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பத்திரண, ஒழுங்குவிதிகளை நீக்குவதற்கான குழுவை தாபித்தல், ஒழுங்குவிதிகள் உருவாக்கப்படுவதும் நீக்கப்படுவதும் அன்றாடம் இடம்பெறும் நடைமுறையாதலால், காலம் கடந்த ஒழுங்குவிதிகளை நீக்குவது பற்றி ஆராய்வதன் பொருட்டு ஒழுங்கு விதிகளை நீக்குவதற்கான குழு ஒன்று தாபிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, சிவில் பாதுகாப்புப் படையைச் சார்ந்த உத்தியோகத்தர்களை, சேவையில் நிரந்தரமாக்கல், சிவில் பாதுகாப்புப் படையைச் சார்ந்த உத்தியோகத்தர்களுக்கும் அரசாங்கத்தின் ஏனைய பாதுகாப்புப் பிரிவுகளில் மற்றும் திணைக்களங்களில் சேவையில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு உள்ளதைப் போன்று சம்பளம், கொடுப்பனவு, நிரந்தர சேவை மற்றும் ஓய்வூதியத்துடனான உத்தியோக அந்தஸ்து வழங்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பத்திரண, உறுதியளித்தல் பற்றிய குழுவை தாபித்தல், பாராளுமன்றத்தில் கேட்கப்படும் வினாக்களுக்கு விடைகளாக அரசாங்கம் வழங்கும உறுதி மொழிகளும் அரசாங்கத்தின் கடப்பாடுகளும் மீறப்படுகின்ற பல சந்தர்ப்பங்களைக் காணக்கூடியதாயுள்ளதால் அரசாங்கம் தனது பொறுப்புக்களை நிறைவேற்றுவதையும் அவை தொடர்பில் பொறுப்புக் கூறுவதையும் உறுதி செய்யும் பொருட்டு உறுதியளித்தல் பற்றிய குழுக்களை தாபிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர், பனை மர விளைச்சலுக்கு ஊக்கமளித்தல், கற்பகதரு எனஅழைக்கப்படும் பொதுமக்களுக்கு மிக்க பயனைப் பெற்றுத்தரும் பனை மர விளைச்சலுக்கு ஊக்கமளித்து பனைப் பொருள் அபிவிருத்திக்காய் அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென இச்சபை தீர்மானிக்கின்றது. கெளரவ புத்திக பத்திரண, புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்தல், இலங்கை புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளில் உள்ள அனுமதியற்ற கட்டுமானங்களையும் அனுமதியற்ற குடியிருப்பாளர்களையும் துரிதமாக அப்புறப்படுத்தி சட்டரீதியான கட்டுமானங்கள் தொடர்பான உடன்படிக்கைகளை மீளாய்வுக்குட்படுத்துவதன் மூலம் திணைக்களத்திற்கு கிடைக்கும் வருமானங்களை அதிகரிக்கச் செய்ய வேண்டுமென்பதுடன், திணைக்களத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தாத காணிகளை நீண்ட கால குத்தகை அடிப்படையில் தனியார் துறைக்கு வழங்கி, அந்நிதியை புகையிரத வலைப்பின்னலின் நவீனமயமாக்கலுக்கு பயன்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ புத்திக பத்திரண, பிச்சைக்காரர்களின் வாழ்வைப் பாதுகாப்பதற்கான முறையியலொன்றைத் தயரரித்தல், தற்போது பிச்சைக்காரர்களின் வாழ்வுக்கு பரரியளவில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் அவர்களது வாழ்வைப் பேணிக்காக்கும் பொருட்டு, அவர்களுக்கு பயிரிடுவதற்கான காணிகளை வழங்கி அதிலிருந்து கிடைக்கின்ற வருமானத்தில் அவர்களது வாழ்வின் பாதுகாப்பினையும் போசனையையும் உறுதிப்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ புத்திக பத்திரண, கட்டாக்காலியாக திரிகின்ற நாய்களின் மூலம் மனித உயிர்களுக்கு ஏற்படுகின்ற சேதத்தை தடுப்பதற்காக முறையியலொன்றைத் தயரரித்தல்,— கட்டாக்காலியாக திரிகின்ற நாய்களின் மூலம் மனித உயிர்களுக்கு ஏற்படுகின்ற சேதத்தை தடுக்கும் நோக்கத்தோடு, அரசாங்கம் நிலப் பரப்பொன்றை ஒதுக்கி கட்டாக்காலியாக திரிகின்ற நாய்களை அவ்விடத்திற்குக் கொண்டுசென்று அவற்றைப் பராமரிப்பதற்குப் பொருத்தமான வேலைத்திட்டமொன்று தயரரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ புத்திக பத்திரண, சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் கடுமையான தண்டனைகளை விதித்தல், நாடு முழுவதிலும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் நாளுக்கு நாள் சடுதியாக அதிகரித்துவரும் நிலைமை ஏற்பட்டுள்ளதால், அது தொடர்பாக தற்போதுள்ள சட்ட விதிகள் போதியதாக இல்லாதிருப்பின், புதிய சட்ட விதிகளை புதிதாக நிறைவேற்றி மிகவும் துரிதமாக இது தொடர்பான வழக்குகளை தீர்ப்பதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப் பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ புத்திக பத்திரண, சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக கரையோர நுழைவுப் பாதைகளை அமைத்தல், நாட்டின் கரையோர வலயத்தில் துரிதமாக இடம்பெறுகின்ற நிர்மாணங்கள் காரணமாக உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் கடற்றொழிலாளர்கள் கடற்கரைக்கு பிரவேசிப்பதில் அசெளகரியம் ஏற்படுதலானது, சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கும் கடற்றொழிலை மேற்கொள்வதற்கும் தடைகளை ஏற்படுத்துவதனால், இந்நிலமையை தடுப்பதற்கும் இத்துறைகளை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டும் கடற்கரை நுழைவுப் பாதை முறைமையொன்று அமைக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ புத்திக பத்திரண, கல்வி நிருவாக சேவை உத்தியோகத்தர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்குதல், அதிபர் சேவை, ஆசிரியர் சேவை, கல்வி நிருவாக சேவை ஆகிய சேவைகளில் பரரிய சம்பள முரண்பாடுகள் நிலவுவதால் இந்நிலைமையை போக்கி இவர்களின் சுய கெளரவத்திற்கு உகந்ததொரு சம்பளத்தைக் கிடைக்கச் செய்யும் வகையில், சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்குரிய முறையியலொன்று தயரரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ புத்திக பத்திரண, பெளத்த பிக்குக் கல்வியை மேம்படுத்துதல், பெளத்த பிக்குமார்களின் மத அறிவை மேம்படுத்தும் நோக்கத்தோடு அவர்களின் பேச்சாற்றல், செவிமடுக்கும் ஆற்றல், கனணி, உளவியல் மற்றும் ஆலோசனை பற்றிய அறிவு என்பவற்றை மேம்படுத்துவதற்காக, தற்போதுள்ள பிக்குக் கல்வி நிறுவனங்களுக்குப் புறம்பாக இப்பணிக்ளுக்கே ஒதுக்கப்பட்டதான பிக்குக் கல்வி நிறுவனங்களை உருவாக்குவதற்கான முறையியலொன்று தயரரிக்கப்படுதல் வேண்டுமென இப்பராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ புத்திக பத்திரண, இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள நொத்தரரிசு சேவையை இற்றைப்படுத்துதல், இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள நொத்தரரிசு சேவை காலங்கடந்த சட்டங்களைக் கொண்டுள்ளதால் அது தொடர்பாக மீள பரிசீலனை செய்து தற்காலத்திற்குப் பொருத்தமானவாறு சட்டங்கள் ஆக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ புத்திக பத்திரண, உலர் வலய சேனைப் பயிர்செய்கையாளர்களின் பொருளாதாரத்தை வலுவூட்டுதல், உலர் வலயங்களில் சேனைப் பயிர்செய்கையாளர் களால் பயிரிடப்படுகின்ற நெல், குரக்கன், பயறு, எள்ளு ஆகிய பயிர்களின் விளைச்சலை அதிகரிப்பதற்கும் உற்பத்திப் பொருட்களை பதனிடுவதற்கும் ஏதுவான வகையில் புதிய தொழிட்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் தரச்சிறப்புவாய்ந்த வகையில் உற்பத்திகளை பதனிடுவதற்கும், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் உற்பத்திகளை சந்தைப்படுத்தும் நடவடிக்கையை வலுவூட்டுவதற்கும் வரையறுக்கப்பட்ட கூட்டுறவு கம்பனிகள் தாபிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ புத்திக பதிரண, ஆசிரியர் ஆலோசனை சேவையை உருவாக்குதல், இலங்கையில் கல்வித் தரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கத்தோடு இற்றைக்கு சுமார் இருபது (20) வருடங்களுக்கு முன்னர் தொட்டு ஆரம்பமாகி நடைமுறையிலிருக்கும் ஆசிரியர் ஆலேசானை சேவையை தனியானதொரு சேவை அலகாக தாபிக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ருவண் ரணதுங்க, உப பிரிவாக்கல் தடை செய்யப்பட்டுள்ள அரசாங்க அளிப்பு பத்திர காணிகளின் உப பிரிவாக்கல் அதிகாரத்தை பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைத்தல்,— ஜய பூமி, சுவர்ண பூமி,ரத்ன பூமி ஆகிய அரசாங்கக் காணி அளிப்புப் பத்திரங்களைக் கொண்டுள்ளவர்களின் காணிகளில் உப பிரிவாக்கல் தடை செய்யப்பட்டுள்ளதெனினும், ஆரம்பக் காணி பெற்றவர்களின் இரண்டாம் பரம்பரையின் உரிமையை உறுதி செய்வதற்கும் அவர்களின் வீடு, தோட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கும் உப பிரிவாக்கலுக்கான தேவை தோன்றும் போது மாகாண ஆணையாளர், காணி ஆணையாளர் மற்றும் ஜனாதிபதி செயலகத்துடனான தற்போது நடைமுறையில் உள்ள நீண்ட செயன்முறையை குறுகியதாக்கி உப பிரிவாக்க அதிகாரத்தை பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைப்பதற்கு தேவையான சட்டங்கள் ஆக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ புத்திக பத்திரண, கோதுமை மாவிற்குப் பதிலாக அரிசி மாவை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்துவதற்காக புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்துதல்,— கோதுமை மாவிற்காக வெளிநாடுகளுக்கு வெளிப் பாய்ச்சப்படும் பெருமளவு செலாவணியை நிறுத்தும் நோக்கத்துடன், மாற்றீடாக பயன்படுத்தக்கூடிய அரிசி மாவினால் தயரரிக்கப்படும் உணவை பிரபல்யப்படுத்துவதற்கும், நார்த்தன்மை கொண்ட தானிய வகையான அரிசியை மிகவும் மென்மையானதாக கோதுமை மாவைப் போன்று அரைப்பதற்கும், கோதுமை மா அரைப்பதற்கு பயன்படுத்தப்படுவதைப் போன்ற இயந்திர உபகரணங்களையும் புதிய தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் கருதுகின்றது. கெளரவ புத்திக பத்திரண, யுத்தத்தால் அங்கவீனமுற்றவர்களுக்கு நிவாரணம் வழங்குதல், ஏறக்குறைய 30 வருடகாலமாக நடைபெற்ற யுத்தம் காரணமாக அன்றாடம் நாட்கூலிக்கு வேலை செய்து வாழ்ந்த மக்கள் மற்றும் நிரந்தர தொழில் புரிந்த மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானோர் உடலுறுப்புக்களை இழந்து அங்கவீனர்களாக வாழ்க்கைச் சுமையினால் பெரும் பாதிப்புக்குள்ளாகி நிர்க்கதியான நிலையில் வாழ்வதால், அவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் கருதுகின்றது. கெளரவ புத்திக பத்திரண, உயர் பிரமுகர்களின் பாதுகாவலர்கள் அனைவருக்கும் பிரயாணச் செலவுக் கொடுப்பனவொன்றை வழங்குதல்,— ஜனாதிபதி பாதுகாப்புச் சேவை மற்றும் பிரதம அமைச்சர் பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களைப் போன்று ஏனைய உயர் பிரமுகர் பாதுகாப்பு சேவையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கும் சமமான பிரயாணச் செலவுக் கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென இப்பாராளுமன்றம் கருதுகின்றது. கெளரவ ருவன் ரணதுங்க, அரசாங்க வங்கிகளின் வட்டி செலுத்துதலுக்கும் வட்டி அறவிடலுக்கும் இடையே காணப்படுகின்ற வித்தியாசத்தைக் குறைத்தல்,— அரசாங்க வங்கிகளில் சாதாரண வைப்புகளுக்கு செலுத்தப்படுகின்ற வட்டி விகிதம் 4 % முதல் 4.5 % வரையிலும் நிலையான வைப்புகளுக்கு செலுத்தப்படுகின்ற வட்டி விகிதம் சுமார் 8 % ஆகவும், வங்கிகளால் வீடமைப்பு, வர்த்தகம் மற்றும் விவசாயக் கடன்களுக்கு அறவிடப்படுகின்ற வட்டி விகிதம் சுமார் 12% முதல் 13% வரையிலும் உள்ளதால், மக்களுக்கும் சிறிய அளவிலான வர்த்தகர்களுக்கும் கைகொடுப்பதற்கும் அவர்களை ஊக்குவிப்பதற்குமாக, இவ்வாறு அறவிடப்படுகின்ற வட்டிக்கும் செலுத்தப்படுகின்ற வட்டிக்கும் இடையிலான வித்தியாசத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ ருவன் ரணதுங்க, பட்டதரரி கிராம உத்தியோகத்தர்களை கெளரவிப்பதற்கான ஒரு கொடுப்பனவைச் செலுத்துதல், அரசாங்க சேவையை கிராமிய மட்டத்தில் மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்காக சேவையாற்றுகின்ற கிராம உத்தியோகத்தர்கள் க.பொ.த. (உ/த) பரீட்சையின் பின்னர் போட்டிப் பரீட்சையின் புள்ளிகளின் அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ள போதிலும், தற்போது சேவையாற்றி வருகின்ற கிராம அலுவலர்களில் சுமார் 30 % முதல் 40 % வரையிலானோர் பட்டத் தகைமைகளைப் பெற்றுள்ளனராதலாலும், இதற்கென எவ்வித விசேட கவனமும் இதுவரை செலுத்தப்படாதுள்ளதனாலும், பட்டத் தகைமையை கெளரவிக்கு முகமாக பட்டதரரி கிராம அலுவலர்களுக்கு சம்பள அதிகரிப்பு அல்லது கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ ருவன் ரணதுங்க, கல்விசார் நூல்கள் தவிர்ந்த தினசரி பத்திரிகைகளிலும் வாராந்த சஞ்சிகைகளிலும் புத்தர் பெருமானின் உருவப் படங்கள் பிரசுரிக்கப்படுவதை தடைசெய்தல்,- தினசரி பத்திரிகைகள் மற்றும் வார சஞசிகைகளில் புத்தர் பெருமானின் உருவப் படங்களும் சிலைகளின் படங்களும் எதுவித கட்டுப்பாடுமின்றி எல்லையற்ற வகையில் அச்சிடப்படுவதோடு அந்த அட்டைகள் பல்வேறுபட்ட பொருட்ளின் உறைகளாகவும் வேறு பொருத்தமற்ற அலுவல்களுக்காகவும் பயன்படுத்தப்படுவது புத்தர் பெருமானுக்குச் செய்கின்ற அவமரியாதையாகுமென்பதால் 2600 ஆம் புத்தர் ஜெயந்தி கொண்டாட்டத்தையும் கருத்திற்கொண்டு இதன் பின்னர் கல்விசார் ᾓல்கள் தவிர்ந்த தினசரி பத்திரிகைகளிலும் வாராந்த சஞ்சிகைகளிலும் புத்தர் பெருமானின் உருவப் படங்கள் பிரசுரிக்கப்படுவதை தடைசெய்வதற்குத் தேவையான சட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர், மும்மொழி பேசப்படும் இலங்கைக்காக சகோதர பாடசாலை நிகழ்ச்சித்திட்டம் ஒன்றைத் தாபித்தல், மும்மொழி பேசப்படும் இலங்கைக்கான பத்தாண்டு தேசிய மூலோபாயச் சட்டகம் ஒன்றை வகுத்தலானது, தேசிய ஒருங்கிணைப்புக்கும் சமூக ஒற்றுமைக்குமான ஒரு திருப்புமுனை நடவடிக்கையாக அமையுமெனவும் எனவே சிங்கள மொழிபேசும் மக்கள் பெரும்பான்மையாக உள்ள பிரதேசங்களில் குறுகிய கால வளமளித்தல் நிழ்ச்சித்திட்டங்களின் வாயிலாக தமிழ் மொழிமூலப் பாடசாலைகளுடன் “சகோதர பாடசாலை நிகழ்ச்சித்திட்டம்” ஒன்றில் மாணவர்களையும் ஆசிரியர்களையும் பறிமாறிக்கொள்வதற்காக ஒவ்வொரு பாடசாலைகளிடையே தொடர்பை ஏற்படுத்துவதற்கு கல்வி அமைச்சும் தேசிய மொழிகள், சமூக ஒருங்கிணைப்பு அமைச்சும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, காலி சர்வதேச விளையாட்டரங்கிற்கு மீள் பெயரிடுதல், இலவசக் கல்வியின் தந்தை காலஞ்சென்ற கெளரவ (கலாநிதி) சீ. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர அவர்களுக்கு மரியாதை செலுத்தும் முகமாக காலி சர்வதேச விளையாட்டரங்கிற்கு அவரின் பெயரை சூட்டவேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ அஜித் குமார, முன் பிள்ளைப் பருவக் கல்வி தொடர்பில் தேசிய திட்டமொன்றை உருவாக்குதல், எமது நாட்டில், பிள்ளைகளின் கல்வியில் முக்கிய இடம் வகிக்கும் முன் பிள்ளைப் பருவக் கல்வியை (முன்பள்ளிக் கல்வி) வழங்குவது தொடர்பில் தேசிய திட்டமொன்றை தயரரிக்கவேண்டியுள்ளதுடன், முன் பள்ளி நிர்வாகிகளுக்கு முறையான பயிற்சியும், ஆட்சேர்ப்பு முறைமையுடன் சம்பள முறையொன்றும் தயரரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ அஜித் குமார, காலி மாவட்டத்தின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பற்றிய ஆய்வு ᾓலொன்றைத் தயரரித்தல்,— காலி மாவட்டத்தின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த, தொல்பொருளியல் மற்றும் கலாசார ரீதியில் பெறுமதி வாய்ந்த இடங்கள் பற்றிய பரந்த ஆய்வினை மேற்கொண்டு, அது தொடர்பில் அறிவியல் பெறுமதிமிக்க ஆய்வு ᾓலொன்று தயரரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ ரவி கருணாநாயக்க, தேர்தல் நடைமுறைகள் மற்றும் தேர்தல்களை நடாத்துதல் பற்றிய பாராளுமன்றத் தெரி குழுவொன்றை நியமித்தல்,— தேர்தல் நடைமுறைகள் மற்றும் தேர்தல்களை நடாத்துதல் பற்றிய பாராளுமன்றத் தெரிகுழுவொன்று நிரந்தர அடிப்படையில் நியமிக்கப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கிறது. கெளரவ ரவி கருணாநாயக்க, ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் ஆகிய நிதியங்களிலிருந்து பணம் உடனடியாக செலுத்துதல்,— ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் ஆகியனவற்றுக்கு பங்களிப்புச் செய்கின்ற சகல அங்கத்தவர்களுக்கு செலுத்த வேண்டிய தொகைகள் செயல்படுநிலைத் தொழிலிருந்து ஓய்வு பெற்று ஒரு மாத காலத்தின் பின்னர் அவர்களுக்கான நிலுவைகள் செலுத்தப்படுவதற்கான ஏற்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கிறது. கெளரவ ரவி கருணாநாயக்க, அரச ஊடகங்களில் பக்கச் சார்பற்ற தன்மையை உறுதிப்படுத்தல், அரச ஊடகங்கள் இலங்கைப் பிரசைகளின் விசேட உரிமையாக இருப்பதாலும், அரச ஊடகங்கள் தொடர்ச்சியாக அரசியல்மயப்பட்டு இருப்பதாலும், இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள சகல அரசியல் கட்சிகளுக்கும் அரச ஊடகங்களில் சமமாக நடதப்பட்டு சம வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கிறது. கெளரவ ரவி கருணாநாயக்க, அரச சேவையில் மொழித் தேர்ச்சியின் தேவைப்பாடுகள், 2025 ஆம் ஆண்டளவில் சகல அரச சேவை ஊழியர்களும், தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் கருமங்களை ஆற்றக் கூடியவர்களாகவும் கடிதப் பரிமாற்றல் மூலம் பணியாற்றுவதற்கும் பேசுவதற்கும் இயலுமையுடையவர்களாக இருப்பதை அரசாங்கம் கட்டாயமாக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கிறது. கெளரவ ரவி கருணாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீட்டினை வழங்குதல், இப்பாராளுமன்றத்தின் 225 உறுப்பினர்களும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 1%ற்கு சமமாகின்ற பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டிற்கு வருடாந்த அடிப்படையில் உரித்துடையவர்களாகவேண்டுமென்றும் மேலும் இந்த ஒதுக்கீடானது 50% மூலதனச் செலவின்மீது பயன்படுத்தப்படல் வேண்டுமென்றும் எஞ்சியுள்ளவை தனது வாக்காளர்களின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் விரும்புகின்றதும் அரசாங்கத்தின் வழிகாட்டலை அடிப்படையாகக் கொண்டதுமான எவ்வடிப்படையிலும் செலவழிக்கப்படலாமென்றும் இப் பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ புத்திக பத்திரன, பல்கலைக்கழகங்களால் நடாத்தப்படுகின்ற கற்கை நெறிகளை தொழில்மையக் கற்கைநெறிகளாக ஆக்குதல்,— நாட்டின் அனைத்து அரசாங்க பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களால் நடாத்தப்படுகின்ற கலைக் கல்விகளுக்கான பட்டப்படிப்பு கற்கைநெறிகளை தொழில்மையக் கற்கைநெறிகளாக மாற்றி அதன் மூலமாக உருவாகின்ற பட்டதரரிகளுக்கு புதிய தொழில்வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன், அனைத்துப் பல்கலைக்கழகங்களுடன் அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களை இணைப்பதற்கான முறைசார்ந்த வேலைத் திட்டமொன்று தயரரிக்கப்படுதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ புத்திக பத்திரண, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்கின்ற வான்களுக்கான தரநியமங்களை விதித்தல், நாடு பூராவும் நடாத்தப்படுகின்ற பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துச் சேவைகள் உரிய தரத்தில் இல்லாமையினாலும், சில பாடசாலை வான்களின் ஊழியர்களது நடத்தை சிறந்ததாக இல்லாமையினாலும், உரிய தரநியமங்களுடன் கூடிய வான் சேவையொன்றை நடாத்துவதற்காகவும், மேற்படி சேவையைப் பெறுகின்ற பாடசாலை மாணவ மாணவிகளது பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் வான் சேவைகளுக்கான தரநியமங்களை அறிமுகப்படுத்துதல் வேண்டுமெனவும், வான் ஊழியர்களிடையே சிறந்த பழக்க வழக்கங்களைப் பேணிவருவதற்காக ஒழுக்க நெறிக் கோவையொன்றை அறிமுகப்படுத்துதல் வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர், தெங்குக் கமத்தொழில், தெங்கு சார் வளங்கள் ஆகியவற்றின் அபிவிருத்தியையும் மேம்பாட்டையும் ஒழுங்கமைத்தல்,— வர்த்தக ரீதியான உற்பத்திகளில் தென்னை முக்கிய இடத்தை வகிப்பதால், வளங்களையும், சுற்றாடலையும் நிலைத்து நிற்கச் செய்கின்ற அதேவேளை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு குறிப்பிடக்கூடியளவு பங்களிப்புச் செய்யக்கூடிய விதத்தில் வளர்ச்சியடையும் அபிவிருத்தியை ஒழுங்கமைத்து தென்னைக் கைத்தொழில் மற்றும் தென்னை சார் வளங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு அர்த்த புஷ்டியுள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர், கித்துள் கைத்தொழிலை மேம்படுத்து முகமாக கித்துள் பயிர்ச்செய்கையை அதிகரித்தல், கிராமிய பிரதேசங்களில் கித்துள் பரரியளவு பங்களிப்பை வழங்குவதால், கிராமியக் கைத்தொழிலுக்கும் கிராமிய மக்களுக்கும் ஊக்கமளித்து தாவர உணவிற்காக வளர்க்கப்படும் கித்துள் மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்னும் எமது குறிக்கோள் திட்டத்திற்கு அமைவாக புதிய கித்துள் பயிர்ச்செய்கைகளை அதிகரிப்பதற்கான தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர், மரமுந்திரிகைப் பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல், மரமுந்திரிகைப் பயிர்ச்செய்கை மற்றும் அதனோடு தொடர்புடைய உற்பத்திகளின் பதனிடல், சந்தைப்படுத்தல் மற்றும் பயிர்ச்செய்கை ஆகியவற்றுக்கான உதவிகளை நல்கி அதன்மூலம் தரமான பெறுமதி சேர்க்கப்பட்ட மரமுந்திரிகையை உற்பத்திகளின் முன்னணி ஏற்றுமதி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக இலங்கையை திகழச் செய்வதற்கு உதவக்கூடிய விதத்தில் மரமுந்திரிகைச் செய்கையை அபிவிருத்தி செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர், பாரம்பரிய கைத்தொழில்களை அபிவிருத்தி செய்தல், அம்பாறை மாவட்டத்தில் அருகி வரும் பாரம்பரிய கைத்தொழில்களான கைத்தறித் தொழில், மட்பாண்டம் தயரரித்தல், பனை ஓலை மற்றும் பன்கொண்டு பெட்டி, தண்டு மற்றும் பாய் போன்றவற்றை இழைத்தல், தும்புத் தொழில், பிரம்புத் தொழில் ஆகியவற்றை அபிவிருத்தி செய்து அப்பகுதி மக்களுக்கு தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தி அவர்களின் வருவாயைப் பெருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது. கெளரவ திலங்க சுமதிபால, ஆயுத விற்பனைக்கான முறைசார்ந்த கட்டுப்பாட்டு முறையொன்றைத் தாபித்தல், சர்வதேச ரீதியில் எவ்வித கட்டுப்பாடுமின்றி ஆயுத விற்பனை நடைமுறையிலுள்ளதன் விளைவாக இலங்கை போன்ற நாடுகளுக்கு ஆயுதங்கள் வந்து குவிதல் மற்றும் அவ்வாறான நாடுகளில் இடம்பெறும் முறைசாராத ஆயுதச் சுற்றோட்டமானது சமூகத்தின் சுதந்திரத்திற்கு பரரிய தடையாகவும் சனநாயக ரீதியில் அதிகாரத்திற்கு வந்த அரசாங்கத்திற்கு அச்சுறுத்தலாகவும் தாக்கம் ஏற்படுத்துவதாகும், அத்துடன் நாட்டில் போதைப்பொருள் மற்றும் விபச்சாரத் தொழில் போன்ற சட்டவிரோதச் செயல்கள் விரிவடைவதற்கு காரணமாகவும் அமைந்துள்ளது. மேற்படி நிலைமைகளைத் தடுத்து ஒழுக்கம் பேணுகின்ற, சட்டத்தை மதிக்கின்ற, விழுமியங்கள் நிறைந்த சமுதாயமொன்றைக் கட்டியெழுப்புதல் மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கின் எதிர்பார்ப்பாக உள்ளதாலும், ஆயுத விற்பனை உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதனூடாக சமூக போராட்டங்களைக் குறைத்து சமூக நலனோம்புகையை உறுதி செய்தல் இன்றைய உலகின் எதிர்பார்ப்பாகவுள்ளதாலும், மேற்குறிப்பிட்ட துர்நடத்தைகளை ஒழிப்பதற்காக சர்வதேச உடன்படிக்கைகள் மற்றும் சமவாயங்களுக்கு ஏற்புடையதாக தேசிய சட்ட முறைமையொன்று தாபிக்கப்படுதல் வேண்டுமென இப் பாராளுமன்றம் பிரேரிக்கின்றது. கெளரவ (அல்ஹாஜ்) ஏ.எச்.எம். அஸ்வர், பேரிச்சம் பழச் செய்கையை அறிமுகப் படுத்துவற்குரிய வாய்ப்புகள் பற்றி விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுதல்,— மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடியில் பரீட்சார்த்தமாகப் பயிர் செய்யப்பட்ட பீனிக்ஸ் டெக்லிபெரா (Phoenix dactylifera) என்ற பேரிச்சம் பழச் செய்கை வெற்றியளித்துள்ளதால், எமது சொந்த மண்ணில் வளர்ந்த நற்சுவைமிக்க இப் பழத்தை சுவைப்பதற்கான வாய்ப்புகள் எமது நாட்டு மக்களுக்கும் கிடைக்கக்கூடியவாறு இப் பேரிச்சம் பழச் செய்கையை எமது நாட்டிலும் அறிமுகப்படுத்துவதற்குரிய வாய்ப்புகள் பற்றி விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென இச்சபை கருதுகிறது. கெளரவ ரவி கருணாநாயக்க, வானோலி ஒலிபரப்பை ஒழுங்குபடுத்தல், வானொலி ஒலிபரப்பை ஒழுங்குபடுத்தும் ஒரு சுயாதீன அதிகார சபையை கூட்டிணைப்பதற்கான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென இப் பாராளுமன்றம் தீர்மானிக்கிறது. கெளரவ ரவி கருணாநாயக்க, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பை ஒழுங்குபடுத்தல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பை ஒழுங்குபடுத்தும் ஒரு சுயாதீன அதிகார சபையை கூட்டிணைப்பதற்கான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கிறது. கெளரவ ரவி கருணாநாயக்க, மாநகர சபைகளில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவை அறிமுகம் செய்தல், 2013 சனவரி 1 ஆம் திகதியளவில் சகல மாநகர சபைகளிலும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவைத் தாபிப்பதற்கான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென இப் பாராளுமன்றம் தீர்மானிக்கிறது. கெளரவ ரவி கருணாநாயக்க, உரிமைகள் பிரகடனச் சட்டமூலத்தைச் சட்டமாக்குதல், தென்னாபிரிக்காவில் மனித கண்ணியம், சமத்துவம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றின் ஜனநாயக விழுமியங்களை உறுதிப்படுத்தி, ஜனநாயகத்தின் ஆதாரமாகத் திகழ்கின்ற உரிமைகள் பிரகடனச் சட்டத்தை அடியொற்றி, சட்டமூலத்தில் விதித்துரைக்கப்பட்ட வரையறைகளுக்கு அமைவாக அரசினால் மதித்து, பாதுகாத்து, மேம்படுத்தி நிறைவேற்றப்பட்ட வேண்டிய நாட்டின் எல்லா மக்களினதும் உரிமைகளை உறுதிப்படுத்தும் சட்டமூலம் இலங்கையில் சட்டமாக்கப்பட வேண்டும் இந்தப் பாராளுமன்றம் தீர்மானிக்கிறது. கெளரவ ரவி கருணாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட படிகள் கொடுப்பனவு, அரச சேவைகள் ஆணைக்குழு மற்றும் சம்பளங்கள் பதவியணி ஆணைக்குழு ஆகியவற்றினால் அங்கீகரிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படாதவிடத்து அமைச்சர், பிரதி அமைச்சர் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் எவருக்கும் எந்த வகையான விசேட படிகளும் வழங்கப்படக் கூடாது என இப் பாராளுமன்றம் தீர்மானிக்கிறது. பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சரும், துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை, 2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின் கீழ் துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு தொடர்பில் நிதி, திட்டமிடல் அமைச்சரால் விதிக்கப்பட்டு 2012 மே மாதம் 09ஆம் திகதிய 1757/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2012.06.19 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக. அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சரும், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் தீர்மானம்,— 1994ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க, இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுச் சட்டத்தின் 2(7) ஆம் பிரிவின் பிரகாரம் அக் குழுவின் தவிசாளரினதும் அதன் அங்கத்தவர்களினதும் எரிபொருள் கொடுப்பனவுகள் 2012.05.01 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வருமாறு பின்வருமாறானதாக அமைதல் வேண்டுமென இப்பாராளுமன்றம் தீர்மானிக்கின்றது . இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் தவிசாளருக்கு மாதாந்தம் பெற்றோல் அல்லது டீசல் 225 லீற்றரையும் அதன் அங்கத்தவர்களுக்கு மாதாந்தம் பெற்றோல் அல்லது டீசல் 170 லீற்றரையும் வழங்க அல்லது அதற்குச் சமமான சந்தை விலைகளுக்கேற்ப கொடுப்பனவொன்றைச் செலுத்த வேண்டுமென்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் தவிசாளருக்கும் அதன் அங்கத்தவர்களுக்கும் செலுத்தப்பட வேண்டிய எரிபொருள் கொடுப்பனவுகள் தொடர்பில் இதற்கு முன்னர் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளினால் தீர்மானிக்கப்பட்ட எரிபொருள் கொடுப்பனவுகளுக்குப் பதிலாக இந்தப் பிரேரணையினால் தீர்மானிக்கப்படும் எரிபொருள் கொடுப்பனவுகள் பதிலீடு செய்யப்படல் வேண்டுமெனவும் இப்பாராளுமன்றம் மேலும் தீர்மானிக்கின்றது. அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் . குழு உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம். குழு காணி, காணி அபிவிருத்தி அமைச்சர், உரித்துப் பதிவுச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள், 1998 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க, உரித்துப் பதிவுச் சட்டத்தின் 60 ஆம் 62 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 67 ஆம் பிரிவின் கீழ் காணி, காணி அபிவிருத்தி அமைச்சரினால் ஆக்கப்பட்டு 2009 ஓகத்து மாதம் 24 ஆந் திகதிய 1616/23 ஆம் இலக்க, அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டதும் 2010.05.06 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக. அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சரும், மதுவரிக் கட்டளைச்சட்டத்தின் கீழ் கட்டளை, மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் 25 ஆம் பிரிவின் கீழ் நிதி, திட்டமிடல் அமைச்சரினால் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் அனுமதி பெற்ற ஹோட்டல்களுக்குள் மதுபானம் பரிமாறுவது தொடர்பில் விதிக்கப்பட்டு, 2011, சனவரி மாதம் 21 ஆம் திகதிய 1689/20 ஆம் இலக்க, அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதும் 2011.02.10ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட துமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக. மதுவரி அறிவித்தல் இலக்கம் 935. அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. கமநல சேவைகள், வனசீவராசிகள் அமைச்சர், தாவர விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச்சட்டத்தின் கீழ் கட்டளை, தாவர விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழ் கமநல சேவைகள், வனசீவராசிகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2011 திசெம்பர் மாதம் 06 ஆந் திகதிய 1735/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதும் 2011.12.13 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக. ஸ்ரீ லங்கா மகளிர் சம்மேளனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம். அரச ஊழியர் அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் . தற்காப்புக் கலைகளுக்கான நிறுவகம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம். எழுத்துமூல விடைக்கான வினாக்கள். கெளரவ தயாசிறி ஜயசேகர, கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்ரைக் கேட்பதற்கு, 2011 ஆம் ஆண்டுக்காக லக் சதொச நிறுவனத்துக்கு பருப்பு வழங்கிய வழங்குநர் அல்லது வழங்குநர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் வர்த்தகப் பெயர்கள் யாவை; மேற்படி வழங்குநர்களை தெரிவு செய்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கேள்விப்பத்திர நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதா; ஆமெனில், குறித்த கேள்விப் பத்திரத்துக்காக விலைமனுக்களைச் சமர்ப்பித்த ஏனைய விண்ணப்பதரரிகளின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவை; மேற்படி கேள்விப் பத்திரத்துக்கமைய வழங்குநர்களினால் பருப்பு வழங்கப்பட வேண்டிய கால எல்லை யாது என்பதை அவர் குறிப்பிடுவாரா? இன்றேல், ஏன்? கெளரவ தயாசிறி ஜயசேகர, கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்ரைக் கேட்பதற்கு, 2011 ஆம் ஆண்டில் லக் சதொச நிறுவனத்திற்கு சீனி வழங்கிய வழங்குனர் அல்லது வழங்குனர்களின் பெயர்கள், முகவரிகள், வர்த்தகப் பெயர்கள் யாவை; மேற்படி வழங்குனர்களை தெரிவு செய்கின்றபோது ஏற்றுக்கொள்ளப்பட்ட கேள்விப் பத்திர நடைமுறை பின்பற்றப்பட்டு்ள்ளதா; ஆமெனின், மேற்படி கேள்விப் பத்திரத்திற்காக விலை மனுக்களை சமர்ப்பித்த ஏனைய விண்ணப்பதரரிகளின் பெயர்கள், முகவரிகள் யாவை; மேற்படி கேள்விப் பத்திரத்திற்கு அமைவாக வழங்குனர்களால் சீனி வழங்கப்பட வேண்டிய கால வரையறை யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? இன்றேல், ஏன்? கெளரவ தயாசிறி ஜயசேகர, கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தக அமைச்ரைக் கேட்பதற்கு,— 2011 ஆம் ஆண்டில் லக் சதொச நிறுவனத்திற்கு முட்டை வழங்கிய வழங்குனர் அல்லது வழங்குநர்களின் பெயர்கள், முகவரிகள், வர்த்தகப் பெயர்கள் யாவை; மேற்படி வழங்குநர்களை தெரிவு செய்கின்றபோது ஏற்றுக்கொள்ளப்பட்ட கேள்விப் பத்திர நடைமுறை பின்பற்றப்பட்டு்ள்ளதா; ஆமெனின், மேற்படி கேள்விப் பத்திரத்திற்காக விலை மனுக்களை சமர்ப்பித்த ஏனைய விண்ணப்பதரரிகளின் பெயர்கள், முகவரிகள் யாவை; மேற்படி கேள்விப் பத்திரத்திற்கு அமைவாக வழங்குநர்களால் முட்டை வழங்கப்பட வேண்டிய கால வரையறை யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? இன்றேல், ஏன்? கௌரவ தயாசிறி ஜயசேகர, கூட்டுறவு,உள்நாட்டுவர்த்தக அமைச்சரைக் கேட்பதற்கு, இலங்கையில் லக் சதொச நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்கள் யாவை என்பதை அவர் குறிப்பிடுவாரா? 2011 ஆம் ஆண்டில் லக் சதொச நிறுவனத்திற்கு கோழி இறைச்சி வழங்கிய வழங்குனர் அல்லது வழங்குனர்களின் பெயர்கள், முகவரிகள், வர்த்தகப் பெயர்கள் யாவை; மேற்படி வழங்குனர்களை தெரிவு செய்கின்றபோது ஏற்றுக்கொள்ளப்பட்ட கேள்விப் பத்திர நடைமுறை பின்பற்றப்பட்டு்ள்ளதா; ஆமெனின், மேற்படி கேள்விப் பத்திரத்திற்காக விலை மனுக்களை சமர்ப்பித்த ஏனைய விண்ணப்பதரரிகளின் பெயர்கள், முகவரிகள் யாவை; மேற்படி கேள்விப் பத்திரத்திற்கு அமைவாக வழங்குனர்களால் கோழி இறைச்சி வழங்கப்பட வேண்டிய கால எல்லை யாதென்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? இன்றேல், ஏன்? கௌரவ அகில விராஜ் கரரியவசம், கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு, 1990 ஆம் ஆண்டு தொடக்கம் 2011 ஆம் ஆண்டு வரையான காலத்தில் கல்வி அமைச்சின் கீழ் வழங்கப்பட்ட நியமனங்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு பதவிப் பெயர் அடிப்படையில் மாவட்ட மட்டத்தில் தனித்தனியே யாதென்பதை அவர் குறிப்பிடுவாரா? இறுதியாக மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் சம்பளத் திருத்தத்திற்கு ஏற்ப ஆசிரியர் சேவையின் ஒவ்வொரு தரத்தி்ற்கும் உரித்தாகும் அடிப்படை மாதாந்தச் சம்பளம் தனித்தனியே யாவை; அரசாங்க ஆசிரியர்களுக்கு கிடைக்கும் மாதாந்த சம்பளத்திற்கு மேலதிகமாக உரித்தாகும் சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள் ஆசிரியர் சேவையின் ஒவ்வொரு தரத்திற்கு ஏற்ப தனித்தனியே யாவை அவர் இச்சபையில் அறிவிப்பாரா? இன்றேல், ஏன்? கௌரவ அகில விராஜ் கரரியவசம், கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு, 1990ஆம் ஆண்டு தொடக்கம் 2011 ஆம் ஆண்டு வரையான காலத்தில் டெங்கு நோய் தொற்று, வாகன விபத்துகள், தற்கொலை, உணவு நஞ்சாகுதல், உடல் அல்லது உள ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாகுதல் ஆகிய காரணங்களால் வருடாந்தம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட அல்லது மரணமடைந்த பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கையும், அவர்கள் கல்வி பயின்ற பாடசாலைகளும் தனித்தனியே யாவை; கடந்த வருடத்தில் பல்வேறு தவறுகளுக்காக குற்றஞ்சுமத்தப்பட்டு சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை, பிள்ளையின் வயதெல்லை மற்றும் பாடசாலைக்கு ஏற்ப தனித்தனியே யாவை என்பதையும் அவர் குறிப்பிடுவாரா? இன்றேல், ஏன்?