classic
stringlengths 19
1.22k
| Description
stringlengths 5
2.28k
|
---|---|
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க\nநெறிநின்றார் நீடு வாழ்வார் | ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர். |
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்\nமனக்கவலை மாற்றல் அரிது | தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது. |
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்\nபிறவாழி நீந்தல் அரிது | அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது. |
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்\nதாளை வணங்காத் தலை | கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம். |
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்\nஇறைவ னடிசேரா தார் | இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது. |
மல்லர்க் கடந்தான் நிறம்போல் திரண்டெழுந்து\nசெல்வக் கடம்பமார்ந்தான் வேல்மின்னி நல்லாய்\nஇயங்கெயில் எய்தவன தார்பூப்ப ஈதோ\nமயங்கி வலனேருங் கார் | "(தலைவியே!) மல்லர்களை அழித்த திருமாலின் கரிய நிறம் போன்று கருத்து எழுந்து சிறப்புப் பொருந்திய கடம்ப மரத்தில் அமர்ந்திருக்கக் கூடிய முருகப் பெருமானுடைய வேலாயுதத்தைப் போல் மின்னி விளங்குகின்ற மூன்று கோட்டைகளாய் நின்ற அரக்கர்களை அழித்த சிவபெருமானுடைய மாலைபோல் பூத்து இப்பொழுது மயங்கி வெற்றியைத் தரும் கார்காலம் வந்துவிட்டது. ஆதலின் நம் தலைவர் இன்றே வந்துவிடுவார். நீ வருந்த வேண்டாம்" என்று தலைமகளுக்குத் தோழி கூறினாள். |
அணிநிற மஞ்ஞை அகவ இரங்கி\nமணிநிற மாமலைமேல் தாழ்ந்து பணிமொழி\nகார்நீர்மை கொண்ட கலிவானம் காண்தொறும்\nபீர்நீர்மை கொண்டன தோள் | "மென்மையான சொற்களைப் பேசும் தோழியே! அழகிய மயில்கள் கூவியழைக்கும்படி இடித்து முழங்கிப் பெரிய மலைகளில் படிந்து மழைபெய்யும் போல் காணப்பட்ட கார்மேகத்தை நான் காணும்போது ஆற்றாமை மிகுந்து என் தோள்கள் பீர்க்கம்பூ நிறத்தில் பசலை பெற்று விளங்கின" என்று தலைவி தோழியிடம் கூறினாள். |
மின்னும் முழக்கும் இடியும்மற் றின்ன\nகொலைப்படை சாலப் பரப்பிய முல்லை\nமுகைவென்ற பல்லினாய் இல்லையோ மற்று\nநமர்சென்ற நாட்டுள்இக் கார் | "தலைவியே! மின்னலும், இடியும், இடியின் முழக்கமும் இவைபோன்ற இன்ன பிறவுமாகிய பிரிந்தாரைக் கொல்லும் படைக்கலங்கள் மிகுதியாகப் பரப்புவதற்கு இல்லாமல் போய்விட்டதோ? முல்லைப் பூவினை வென்ற பற்களை உடைய பெண்ணே! நம்முடைய தலைவன் சென்ற நாட்டில் இக்கார்காலம் இல்லையோ?" என்று குறிப்பாகக் கேட்கிறாள். |
உள்ளார்கொல் காதலர் ஒண்டொடி நம்திறம்\nவள்வார் முரசின் குரல்போல் இடித்துரறி\nநல்லார் மனங்கவரத் தோன்றிப் பணிமொழியைக்\nகொல்வாங்குக் கூர்ந்ததுஇக் கார் | "ஒளிமிக்க அழகிய வளையல் அணிந்த தலைவியே! இந்த மேகக் கூட்டமானது தோல்வாரினால் கட்டப்பட்ட முரசின் ஒலியைப் போன்று இடியினை வீழ்த்தி முழங்கித் தலைவரைப் பிரிந்த நங்கையரின் உள்ளம் வேறுபடுமாறு தோன்றித் தலைவரால் நமக்குக் கூறப்பட்ட இன்சொற்களைச் சிதைப்பது போன்று மிகுந்து காணப்படுகின்றது. நம் காதலர் நம்மியல்பை நினைத்துப் பார்க்க மாட்டாரோ? நிச்சயம் நினைப்பர். ஆதலின் இன்றே வருவார்" என்று கார்ப்பருவம் கண்டு வருந்திய தலைவியைத் தோழி தேற்றினாள். |
கோடுயர் தோற்றம் மலைமேல் இருங்கொண்மூக்\nகூடி நிரந்து தலைபிணங்கி ஓடி\nவளிகலந்து வந்துறைக்கும் வானம்காண் தோறும்\nதுளிகலந்து வீழ்தருங் கண் | என் இனிய தோழியே! உயர்ந்த சிகரங்களோடு கூடிய மலைகளின் மீது பெரிய மேகக் கூட்டங்கள் திரண்டு ஒன்று கூடி, ஒன்றோடொன்று மோதி, காற்றோடு கலந்து மழைபொழியத் துடிக்கும்படியான, வானத்தைக் காணும் பொழுதெல்லாம் என் கண்கள் கண்ணீர்த் துளிகளைப் துளிர்விக்கும். |
முல்லை நறுமலர் ஊதி இருந்தும்பி\nசெல்சார் வுடையார்க் கினியவாய் நல்லாய்மற்று\nயாரும்இல் நெஞ்சினேம் ஆகி யுறைவேமை\nஈரும் இருள்மாலை வந்து | மாலைக் காலமாகிய வாள் தோன்றி, கரியவண்டுகள் முல்லை மலர்களில் படிந்து ரீங்காரம் செய்து, தலைவரைச் சார்ந்திருக்கின்ற மகளிர்க்கு இன்பத்தைச் செய்கின்றது. ஆனால் பிரிவினால் தனித்துத் துணையில்லாது தவிக்கின்ற உள்ளத்தோடு வாழ்கின்ற எம்முயிரைப் பிளக்கின்றது. யான் எவ்வாறு பொறுத்துக்கொள்வேன். |
தேரோன் மலைமறைந்த செக்கர்கொள் புன்மாலை\nஆர்ஆனபின் ஆயன் உவந்தூதும் சீர்சால்\nசிறுகுழல ஓசை செறிதொடி வேல்கொண்டு\nஎறிவது போலும் எனக்கு | கைகளில் நிறைந்த வளையல்களைக் கொண்டுள்ள தோழியே, ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வந்த கதிரவன் மாலையில் மேற்குத் திசையில் மறைந்த காலத்து சிவந்ததாய்க் காணப்படும் மாலைப்பொழுதில் அருமையான பசுக்கூட்டங்களின் பின்னால் வரும் இடையன் மகிழ்ச்சியோடு ஊதுகின்ற சிறு குழலின் இனிய ஓசையானது எனக்கு வேல் கொண்டு தாக்குவதுபோல் மிகுந்த துன்பத்தைத் தருகின்றது. |
பிரிந்தவர் மேனிபோல் புல்லென்ற வள்ளி\nபொருந்தினர் மேனிபோல் பொற்பத் திருந்திழாய\nவானம் பொழியவும் வாரார்கொல் இன்னா\nகானம் கடந்துசென் றார் | வள்ளி - கொடி, பொற்ப - பொலிய, கானம் - காடு. "அழகிய அணிகலன்களை அணிந்துள்ள தலைவியே! காதலரைப் பிரிந்த காதலியரின் வடிவம் போலப் பொலிவின்றிக் காணப்பட்ட கொடிகள் மீண்டும் காதலரோடு கூடிவாழும் காதலியரின் வடிவம் போலப் பொலிவு பெறும்படி மழை பொழிதலைக் கண்டும் துன்பத்தைத் தருகின்ற காடுகளையெல்லாம் கடந்து பிரிந்து சென்ற நம் காதலர் வரமாட்டாரா? விரைவில் வருவார் வருந்தாதே" என்று தோழி தலைவியைத் தேற்றினாள். |
வருவர் வயங்கிழாய் வாள்ஒண்கண் நீர்கொண்டு\nஉருகி யுடன்றழிய வேண்டா தெரிதியேல்\nபைங்கொடி முல்லை அவிழ்அரும்பு ஈன்றன\nவம்ப மறையுறக் கேட்டு | "அழகிய அணிகலன்களை அணிந்துள்ள தலைவியே! ஆராய்ந்து பார்ப்பின் காலமல்லாத காலத்தில் புதிதாகத் தோன்றிய மேகங்கள் கூடி முழங்கக் கேட்ட முல்லைக் கொடிகள் அரும்புகளைத் தோற்றுவித்தன என்பது தெரியவரும். ஆகவே நம் தலைவர் கார்ப்பருவம் வரும்போது தவறாது வந்து சேர்வர். ஆதலின் கண்களில் நீர் பெருகத் துன்புற்று அழிய வேண்டா" என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறினாள். |
நூல்நின்ற பாக தேர் நொவ்விதாச் சென்றீக\nதேன்நவின்ற கானத்து எழில்நோக்கித் தான்நவின்ற\nகற்புத்தாழ் வீழ்த்துக் கவுண்மிசைக் கையூன்றி\nநிற்பாள் நிலையுணர்கம் யாம் | "கலை நூல்களை நன்றாகக் கற்றறிந்த தேர்ப்பாகனே! வண்டுகள் இசைபாடும் காட்டின் அழகினைப் பார்த்து, தான் நாள்தோறும் போற்றி வந்த கற்பு நெறியினைக் காப்பாற்றி, கன்னத்தின் மீது இடக்கையினை ஊன்றி, வழிமேல் விழி வைத்துக் காத்து நிற்பவளாகிய என் தலைவியின் நிலையை நாம் சென்று காண்போம். அதற்குத் தகுதியாக நமது தேர் விரைவாகச் செல்லட்டும்" என்று தலைமகன் தேர்ப்பாகனை நோக்கிக் கூறினான். |
பொன்னிணர் வேங்கை சவினிய பூம்பொழிலுள்\nநன்மலை நாடன் நலம்புனைய மென்முலையாய்\nபோயின சின்னாள் புனத்து மறையினால்\nஏயினார் இன்றி இனிது | "மென்மையான மார்பகங்களையுடைய தலைவியே! நல்ல மலை வளமிக்க நாட்டுத்தலைவன் தினைப்புனத்திற்குப் பக்கத்திலுள்ள வேங்கை மரங்கள் நிறைந்துள்ள அழகுடைய சோலையின்கண் நின்னோடு கலந்தபின் எவருடைய குறுக்கீடும் இல்லாமல் இன்பமாய்ச் சில நாட்கள் கழிந்தன. இனி என்ன ஆகுமோ, அறியேன்" என்று தலைவிக்குத் தோழி கூறினாள். |
மாலவரை வெற்ப வணங்கு குரல்ஏனல்\nகாவல் இயற்கை ஒழிந்தேம்எம் தூஅருவி\nபூக்கண் கழூஉம் புறவிற்றாய்ப் பொன்விளையும்\nபாக்கம் இதுஎம் இடம் | "பெரிய சிகரங்களையுடைய மலைநாட்டுத் தலைவனே! முற்றியதன் காரணமாக வளைந்த கதிர்களையுடைய தினைப்புனத்தைக் காவல் செய்கின்ற இயல்பான வாழ்க்கையை நாங்கள் கைவிட்டோம்; தூய்மையான அருவிகள் பூக்களைக் கழுவிக் கொண்டு செல்லும்படியான காட்டினால் சூழப்பெற்றதாய், பொருட்செல்வத்தால் மிகுந்த இவ்வூரே எனது இல்லம் அமைந்த இடமாகும்" என்று தோழி தலைவியின் இருப்பிடத்தை அறிவுறுத்தித் தலைவனிடம் கூறுகிறாள். |
கானக நாடன் கலவான்என் தோளென்று\nமானமர் கண்ணாய் மயங்கல்நீ நானம்\nகலந்திழியும் நன்மலைமேல் வாலருவி யாடப்\nபுலம்பும் அகன்றுநில் லா | "மான் போன்று மருளும் கண்களையுடைய தோழியே! காடுகள் சூழ்ந்த மலைநாட்டுத் தலைவன், இற்செறிப்பில் இருக்கும் என் தோள்களில் தழுவான் என்று நினைத்து நீ வருந்த வேண்டா! நம் தலைவனது நாட்டைச் சேர்ந்த நன்மலையிலிருந்து வீழ்கின்ற அருவியில் நாம் நீராடினால் தலைவனைச் சேராமையால் உண்டாகும் துன்பங்கள் எல்லாம் நில்லாது நீங்கும்" என்று இற்செறிப்புற்ற தலைவி தோழியிடம் கூறினாள். |
புனைபூந் தழையல்குல் பொன்னன்னாய் சாரல்\nதினைகாத் திரும்தேம்யாம் ஆக வினைவாய்த்து\nமாவினவு வார்போல வந்தவர் நம்மாட்டுத்\nதாம்வினவ லுற்றதொன் றுண்டு | "தொடுக்கப்பட்ட மலர்களுடன் கூடிய தழைகளால் அணியப்பட்ட அல்குலினையுடைய திருமகளைப் போன்ற எம் தலைவியே! இம்மலையின் பக்கத்தில் உள்ள நம் தினைப் புனத்தை நாம் காத்திருந்தோம். அப்பொழுது வேட்டையாடுவதை மேற்கொண்டு, தாம் தப்ப விட்ட விலங்கு ஒன்றைத் தேடி வருவதைப் போன்று வந்தவர் நம்மிடம் வினவத் தொடங்கியது, விலங்கன்று வேறு ஒன்று உண்டு" என்று தலைவியின் கருத்தை அறிவதற்காகத் தோழி இவ்வாறு கூறினாள். |
வேங்கை நறுமலர் வெற்பிடை யாங்கொய்து\nமாந்தளிர் மேனி வியர்ப்பமற்று ஆங்கு எனைத்தும்\nபாய்ந்தருவி ஆடினே மாகப் பணிமொழிக்குச்\nசேந்தனவாம் சேயரிக்கண் தாம் | "நாங்கள் மலையிடத்துள்ள வேங்கை மரத்தில் மலர்ந்துள்ள நறுமணமிக்க மலர்களைக் கொய்தலால் மாந்தளிர் போன்ற எம் உடல் வியர்த்தது. அதனால் அம்மலையிடத்தேயுள்ள எல்லா அருவிகளிலும் புகுந்து நீராடினோம். ஆகவே மென்மையான சொற்களையுடைய தலைவிக்குச் செவ்வரி படர்ந்த கண்கள் சிவப்பாயின" என்று தோழி செவிலித் தாய்க்குக் கூறுவாள் போன்று சிறைப்புறத்திலுள்ள தலைவன் கேட்பக் கூறுகின்றாள். |
கொடுவரி வேங்கை பிழைத்துக் கோட் பட்டு\nமடிசெவி வேழம் இரீஇ அடியோசை\nஅஞ்சி ஒதுங்கும் அதருள்ளி ஆரிருள்\nதுஞ்சா சுடர்த்தொடி கண் | "வளைந்த வரிகளையுடைய பெரும்புலியினால் தாக்கப்பட்டுத் தப்பியோடிய மடிந்த காதுகளையுடைய யானையானது பின்வாங்கித் தன் நடையால் எழும் ஓசையானது புலிக்குக் கேட்குமோ என்று அஞ்சி, மெல்ல நடக்கக்கூடிய வழியில் நீ திரும்பிப் போக வேண்டும் என எண்ணியதால், ஒளிமிக்க வளையல் அணிந்த தலைவியின் கண்கள் நேற்று இரவு முழுவதும் தூக்கம் கொள்ளவில்லை. எனவே நீ விரைவில் தலைவியை மணம் செய்து காப்பாயாக" என்று தோழி தலைவனிடத்தில் கூறினாள். |
மஞ்சிவர் சோலை வளமலை நன்னாட\nஎஞ்சாது நீவருதி யென்றெண்ணி அஞ்சித்\nதிருஒடுங்கும் மென்சாயல் தேங்கோதை மாதர்\nஉருஒடுங்கும் உள்ளுருகி நின்று | "மேகங்கள் படர்ந்து செல்லுகின்ற பூஞ்சோலைகளையுடைய வளம்மிக்க மலைகளையுடைய நல்நாட்டுத் தலைவனே! இலக்குமியும் தோற்கும்படியான நல் அழகினையுடைய தேன்பொருந்திய மலர் மாலையை அணிந்த தலைவியானவள், இரவின் கண் தவறாமல் இவ்வழியின்கண் வருகின்றாய் என்று எண்ணி உனக்கு என்ன தீங்கு நேருமோ என அஞ்சி மனத்துன்பம் மிக்கு தன் அழகிய மேனி வாட்டம் அடைய மெலிந்து நிற்கின்றாள்" என்று தோழி தலைவனுக்குக் கூறினாள். எனவே விரைவில் மணம் செய்ய வேண்டும் என்று தூண்டுகிறாள். |
எறிந்தெமர் தாம்உழுத ஈர்ங்குரல் ஏனல்\nமறந்தும் கிளியனமும் வாரா கறங்கருவி\nமாமலை நாட மடமொழி தன்கேண்மை\nநீமறவல் நெஞ்சத்துக் கொண்டு | "ஒலிக்கின்ற அருவிகளையுடைய பெரிய மலை நாட்டுத்தலைவனே! எம்மவர்களாகிய குறவர்கள் மரஞ்செடி கொடிகளை வெட்டி ஒழுங்குபடுத்திப் பயிரிட்ட குளிர்ந்த கதிர்களையுடைய தினைப்புனத்துக்கு இனி நாங்களும் கிளிக்கூட்டங்களும் மறந்தும் வரமாட்டோம். ஆதலின் அறியாமை பொருந்திய சொற்களைப் பேசும் தலைவியின் நட்பை மனதில் வைத்து மறவாதிருப்பாயாக" என்று செவிலித்தாயுடன் தலைவி வீட்டுக்குச் செல்லும் போது தோழி மறைந்திருக்கும் தலைவனிடம் இனி தாங்கள் வீட்டிலே இருக்க நேரிடுவதைக் கூறி, விரைவில் மணந்து கொள்ளும்படி குறிப்பாக எடுத்துக் காட்டினாள். |
நெடுமலை நன்னாட நீள்வேல் துணையாக\nகடுவிசை வாலருவி நீந்தி நடுஇருள்\nஇன்னா அதர்வர ஈர்ங்கோதை மாதராள்\nஎன்னாவாள் என்னும்என் நெஞ்சு | "நீண்டு உயர்ந்த மலைகளையுடைய நல் நாட்டுத் தலைவனே! நீண்ட வேலினையே துணையாகக் கொண்டு, விரைவாக ஓடும் வெண்மை நிறமுடைய அருவிகளைக் கடந்து, நள்ளிரவில் இடையூறுகள் பொருந்திய வழியில் வருவதை நினைத்தால், குளிர்ந்த பூமாலை அணிந்த நின் தலைவி என்ன நிலையை அடைவாளோ என்று என் நெஞ்சம் அஞ்சுகின்றது" என்று வழியினது நிலையைக் கூறி அவ்வழியில் இரவில் வாராதிருக்குமாறு தோழி தலைவனை வேண்டினாள். |
வெறிகமழ் வெற்பன்என் மெய்ந்நீர்மை கொண்டது\nஅறியான்மற்று அன்னோ அணங்கு அணங்கிற்று என்று\nமறிஈர்த்து உதிரம்தூய் வேலன் தரீஇ\nவெறியோடு அலம்வரும் யாய் | "தோழி, நம் அன்னையான செவிலித்தாய் மணங்கமழ்கின்ற மலைநாட்டுத் தலைவன் என்மேனியின் இயல்பான தன்மையைக் களவுப்புணர்ச்சியின் மூலம் கவர்ந்து கொண்டான் என்பதனை அறியாதவளாய், 'ஐயோ! தெய்வம் என்னை வருத்திற்று' என்று நினைத்து, வேலைக் கையில் ஏந்தி அருள் கொண்டு ஆடும் வேலனை வரவழைத்து, முருகனுக்குப் பூசையிடுதலாகிய வெறியாடுதலில் ஈடுபட்டு வருந்திக் கொண்டிருக்கிறாள்" என்று தலைவி தோழியிடம் கூறி அறத்தொடு நின்றாள். |
கொண்டுழிப் பண்டம் விலையொரீஇக் கொல்சேரி\nநுண்துளைத் துன்னூ விற்பாரின் ஒன்றானும்\nவேறல்லை பாண வியலூரன் வாய்மொழியைத்\nதேற எமக்குரைப்பாய் நீ | "பாணனே! அகன்ற மருத நிலத்து ஊர்த் தலைவன் சொல்லி விடுத்த மொழிகளைத் தெளிவாக எமக்கு எடுத்துரைப்பாய். பொருளைக் கொள்முதல் செய்தவிடத்துச் சொன்ன விலையை வேறுபடுத்தி மிகுத்துக் கொல்லர் தெருவின்கண் நுண்மையான துளையையுடைய ஊசியினை விற்கின்ற வணிகரை விட ஒருவகையிலும் நீ வேறுபடவில்லை" எனத் தலைவி பாணற்கு வாயில் மறுத்துக் கூறினாள். |
போதார்வண்டு ஊதும் புனல்வயல் ஊரற்குத்\nதூதாய்த் திரிதரும் பாண்மகனே நீதான்\nஅறிவுஅயர்ந்து எம்இல்லுள் என்செய்ய வந்தாய்\nநெறிஅதுகாண் எங்கையர் இற்கு | "மலர்களில் மொய்க்கும் வண்டுகள் ஒலிக்கும் நீர் வளம் மிக்க நன்செய் நிலங்களையுடைய மருத நிலத்து ஊர்த் தலைவனுக்குத் தூதனாய்த் திரியும் பாணனே! நீ அறிவு கெட்டுப்போய் எங்களுடைய மனைக்கு என்ன நன்மை செய்ய வந்தாய்? எம் தலைவனால் விரும்பப்பட்ட எம் தங்கையரான மங்கையரின் (பரத்தையர்) மனைக்குச் செல்லும் வழி அதோ இருக்கிறது. அதைக்கண்டு அங்குச் செல்வாயாக" என்று தலைவி பாணனது அறியாமையை எடுத்துக்காட்டி வாயில் மறுத்தாள். (வண்டுகள் போல் தலைவன் பலரிடம் செல்கிறான் என்று அர்த்தம்.) |
யாணர் அகல்வயல் ஊரன் அருளுதல்\nபாண பரிந்துரைக்க வேண்டுமோ மாண\nஅறிவது அறியும் அறிவினார் கேண்மை\nநெறியே உரையாதோ மற்று | "பாணனே! புதிய வருவாயையுடைய அகன்ற மருத நிலத்தூர்த் தலைவன் எம்மிடம் மிகுதியான அன்பு கொண்டவனாக இருப்பதை, அவனுக்காக எங்களுக்குச் சொல்லவும் வேண்டுமோ? அறிய வேண்டியதை அறிந்த அறிவுடையோர் கைக்கொள்ளும் நட்பானதை அவரது போக்கே உரைக்காதோ?" என்று கூறித் தலைவி பாணனுக்கு வாயில் மறுத்தாள். |
கோலச் சறுகுருகின் குத்துஅஞ்சி ஈர்வாளை\nநீலத்துப் புக்கொளிக்கும் ஊரற்கு மேல்எலாம்\nசார்தற்குச் சந்தனச்சாந்து ஆயினேம் இப்பருவம்\nகாரத்தின் வெய்யஎம் தோள் | "பாணனே! அழகிய சிறிய நாரையினது குத்துதலுக்கு அஞ்சிக் குளிர்ந்த வாளை மீன்கள் நீல மலர்க் கூட்டத்தில் புகுந்து மறைந்து கொள்ளும்படியான மருத நிலத்தூர்த் தலைவனுக்கு முன்பெல்லாம் கூடும்போது எம்முடைய தோள்கள் அவருக்குச் சந்தனக் குழம்பு போன்று குளிர்ச்சியாக இருந்தன. ஆனால் இப்போதோ புண்ணிற்கு இடும் மருத்துவக் காரத்தைப் போல வெப்பமாய் உள்ளன" என்று தலைவி பாணற்கு வாயில் மறுத்துக் கூறினாள். |
அழல்அவிழ் தாமரை ஆய்வய லூரன்\nவிழைதரு மார்பம் உறுநோய் விழையின்\nகுழலும் குடுமிஎன் பாலகன் கூறும்\nமழலைவாய் கட்டுரை யால் | "நெருப்பினைப் போல் மலர்கின்ற செந்தாமரை மலர்கள் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த மருத நிலத் தலைவனது காண்பவரால் விரும்பப்படும் மார்பானது, மென்மைத் தன்மையால் சுழன்று விழும்படியான சிகையினையுடைய என் மகன் கூறும் மழலைச் சிறு சொற்களைக் கேட்க விரும்பி என் தலைவன் என்னைக் கூடினால் துன்பத்தை அடையும்" என்று வாயில் வேண்டிச் சென்றார்க்குத் தலைமகள் வாயில் மறுத்துக் கூறினாள். |
பெய்வளைக் கையாய் பெருநகை ஆகின்ற\nசெய்வய லூரன் வதுவை விழவுஇயம்பக்\nகைபுனை தேரேறிச் செல்வானைச் சென்றிவன்\nஎய்தி இடருற்ற வாறு | "வளையல்கள் அணிந்த கைகளையுடைய தோழியே! திருத்தப் பெற்ற மருத நிலத்து நன்செய் வயல்கள் சூழ்ந்த ஊர்க்குத் தலைவன், பரத்தையர் புதுமண விழாக் கொண்டாடும் பொருட்டுத் தேரின் மீது அமர்ந்து பரத்தையர் பால் செல்லும் போது, என் புதல்வன் எதிரே போய்ப் நின்றதால், தலைவன் பரத்தையரைப் புதுமணம் செய்ய முடியாது துன்பம் அடைந்த நிலையானது எனக்கு மிகுந்த நகைப்பினையுண்டாக்குகின்றது" என்று புதல்வனை முனிந்து தலைமகள் மறுத்தாளைப் போலத் தோழிக்கு வாயில் நேர்ந்தாள். |
தணவயல் ஊரன் புலக்கும் தகையமோ\nநுண்ணுறல் போல நுணங்கிய ஐங்கூந்தல்\nவெண்மரல் போல நிறந்திரிந்து வேறாய\nவண்ணம் உடையேம்மற்று யாம் | "நுண்மையான ஆற்றின் நொய் மணல் போலக் கருமையாயிருந்த எம்முடைய ஐவகைப்பட்ட கூந்தலானது வெண்மையான மரலைப் போல நிறம் மாறுபடலால் மாறுபட்ட தன்மையைப் பெற்றிருக்கிறோம். எனவே குளிர்ந்த நன்செய் நிலங்கள் சூழ்ந்த மருத நிலத்தூர்த் தலைவனோடு கூடும் தகுதியினைப் பெற்றுள்ளோமா?" என்று வாயில் வேண்டி வந்தார்க்குத் தலைமகள் வாயில் மறுத்துக் கூறினாள். |
ஒல்லென்று ஒலிக்கும் ஒலிபுனல் ஊரற்கு\nவல்லென்று என்நெஞ்சம் வாட்கண்ணாய் நில்லென்னாது\nஏக்கற்றாங்கு என்மகன் தான்நிற்ப என்னானும்\nநோக்கான்தேர் ஊர்ந்து கண்டு | "ஒல் என்று ஓசையிடும் அருவியினை உடைய ஊரில் என் வலிமையான நெஞ்சினையும் வாள் போன்ற கண்ணையுமுடைய தோழியே! முன்பு என் மகன் தெருவிலே தேர் மீது ஏறிச்சென்ற தன் தந்தையான தலைவனைக் கண்டு, விரும்பிப் பார்த்துக் கொண்டு நின்றான். அந்த நிலையைப் பார்த்தும், தலைவன் பாகனைத் 'தேரோட்டுபவனே சிறிது நில்' என்று சொல்லாமல், என் மகனைச் சிறிதும் பாராமல் தேரினைச் செலுத்தச் செய்து, பரத்தையர் இல்லத்துக்குப் போனான். அதனால் என் மனமானது என் தலைவனிடம் இரக்கம் காட்டாததாயிற்று" என்று தலைமகள் தோழிக்கு வாயில் மறுத்துக் கூறினாள். |
ஒல்லென் ஒலிபுனல் ஊரன் வியன்மார்பம்\nபுல்லேன்யான் என்பேன் புனையிழையாய் புல்லேன்\nஎனக்கோர் குறிப்பும் உடையனோ ஊரன்\nதனக்குஏவல் செய்தொழுகு வேன் | "அழகிய அணிகலன்களை அணிந்துள்ள தோழியே! 'ஒல்' என்று ஒலிக்கும்படியான ஒலி புனல் சூழ்ந்த மருத நிலத்தூர்த் தலைவனது அகன்ற மார்பினைத் 'தழுவ மாட்டேன்' என்று அவனைக் காணுவதற்கு முன் நினைத்திருப்பேன். ஆயினும் என் தலைமகனுக்கு ஊழியம் புரிந்து நடக்கக் கூடிய தன்மையுடையவள் ஆதலால் அவனைக் கண்டபின்னும் 'தழுவமாட்டேன்' என்று கூறி மறுக்கவா முடியும்?" என்று தோழியிடம் தலைமகள் கூறினாள். |
குளிரும் பருவத்தே யாயினும் தென்றல்\nவளியெறியின் மெய்யிற்கு இனிதாம் ஒளியிழாய்\nஊடி யிருப்பினும் ஊரன் நறுமேனி\nகூடல் இனிதாம் எனக்கு | "ஒளி வீசும் அணிகலன்களை அணிந்துள்ள தோழியே! குளிர்காற்று வீசும் மாரிக் காலமானாலும் தென்றல் காற்று வீசினால் நமது உடம்பிற்கு இன்பம் உண்டாகும். அதுபோல என் தலைவனைக் காணாதபொழுது அவன் செய்த தவற்றினை நினைத்து ஊடியிருப்பேனாயினும் அவனைக் கண்டபோது அவன் தவறுகள் எல்லாம் எனக்குப் புலப்படா. ஆதலின் அவனுடைய மணமிகுந்த மேனியைக் கூடுதலானது எனக்கு இன்பமாயுள்ளது" என்று தோழியிடம் தலைமகள் கூறினாள். |
உதிரம் துவரிய வேங்கை உகிர்போல்\nஎதிரி முருக்கரும்ப வீர்ந்தண்கார் நீங்க எதிருநர்க்கு\nஇன்பம் பயந்த இளவேனில் காண்தொறும்\nதுன்பம் கலந்தழியும் நெஞ்சு | "உதிரத்தை உறிஞ்சிய புலியினது குருதி தோய்ந்த நகங்களைப் போலத் தமக்குரிய பருவத்தோடு பொருந்தி முருக்கமரங்கள் செந்நிற அரும்புகளைத் தோற்றுவிக்க, மிகவும் குளிர்ந்த மேகங்கள் வானத்தினின்று விலகிட, தலைவனும், தலைவியுமாய் எதிர்ப்பட்டுக் கூடினார்க்குப் பேரின்பம் செய்த இளவேனிற் காலத்தை என் கண்கள் காணும் பொழுதெல்லாம் என் நெஞ்சம் துன்பத்தினால் அழிகின்றது" எனத் தலைவி தோழியிடம் கூறினாள். |
விலங்கல் விளங்கிழாய் செல்லாரோ வல்லர்\nஅழற்பட்டு அசைந்த பிடியை எழிற்களிறு\nகற்சுனைச் சேற்றிடைச் சின்னீரைக் கையாற்கொண்டு\nஉச்சி ஒழுக்கஞ் சுரம் | பிடி- பெண் யானை, களிறு-ஆண் யானை. "அழகிய அணிகலன்களை அணிந்த தலைவியே! காட்டுத்தீயில் அகப்பட்டு வருந்தும் பெண்யானை மீது அன்புகொண்ட அழகிய ஆண்யானை, மலைச் சுனையில் இருந்த சேற்றோடு கூடிய சிறிதளவினவான நீரைத் தன் துதிக்கையால் முகந்து தன் பெண்யானையினது தலை உச்சியில் பெய்தற்கு இடமான பாலை நில வழியில் நம் தலைவர் செல்லமாட்டார். ஆகலின் அவர் பயணத்தை விலக்க வேண்டாம்" எனத் தலைவனின் பிரிவை அறிந்து ஆற்றாத தலைவியைத் தோழி தேற்றினாள். |
பாவையும் பந்தும் பவளவாய்ப் பைங்கிளியும்\nஆயமும் ஒன்றும் இவைநினையாள் பால்போலும்\nஆய்ந்த மொழியினாள் செல்லுங்கொல் காதலன்பின்\nகாய்ந்து கதிர்தெறூஉங் காடு | "பால் போன்று இனிய ஆராய்ந்தமைந்த மொழிகளையுடைய என் மகள், சூரிய கிரகணங்களால் வெப்பம் மிகுந்துள்ள பாலை நிலக்காட்டு வழியில், விளையாடற்குரிய பொம்மைகள், பந்துகள், பவளம் போன்ற வாயினைக் கொண்ட பைங்கிளிகள், தோழிகள் கூட்டம் ஆகிய இவற்றில் ஒன்றையேனும் எண்ணிப் பாராமல், தன் காதலன் பின் செல்லும் தன்மையுடையவளாய் இருப்பாளோ?" என்று நற்றாய், தன் மகளைக் குறித்துத் துன்புற்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள். |
கோட்டமை வல்லில் கொலைபிரியா வன்கண்ணர்\nஆட்டிவிட்டு ஆறலைக்கும் அத்தம் பலநீந்தி\nவேட்ட முனைவயின் சேறீரோ ஐய நீர்\nவாள்தடங்கண் மாதரை நீத்து | "தலைவனே! வாள் போன்ற ஒளிமிக்க அகன்ற கண்களையுடைய எம் தலைவியைப் பிரிந்து, வளைகின்ற மூங்கிலாகிய வலிமையான வில்லினால் கொலைத் தொழிலைச் செய்யும் மறவர்கள், வழியில் செல்கின்ற புதியவரிடம் கொள்ளையடித்து, வருந்தும்படியான கடப்பதற்கு அரிய வழிகள் பலவற்றையும் கடந்து, வேட்டையாடுவதற்குரிய கொடுமைமிக்க காட்டிற்குச் செல்வீரோ?" என்று தோழி தலைவனை வினவினாள். |
கொடுவில் எயினர்தம் கொல்படையால் வீழ்ந்த\nதடிநிணம் மாந்திய பேஎய் நடுகல்\nவிரிநிழல் கண்படுக்கும் வெங்கானம் என்பர்\nபொருள்புரிந்தார் போய சுரம் | "பொருள்வயின் பிரிந்த எம் தலைவர் சென்ற பாலை நிலத்துவழி, வளைந்த வில்லினையுடைய வேட்டுவர் தம்முடைய கொலைக் கருவிகளால் வீழ்த்திய தசையையும், கொழுப்பையும் தின்ற பேய்கள் போரிலே மடிந்தாரின் பெயர் வரையப்பட்ட நடுகல்லின் நிழலில் உறங்கும் படியான கொடிய காட்டிலே உள்ளது என்று சொல்வர்" என்று தலைவி தோழியிடம் தலைவன் பிரிந்து சென்ற பாலை நிலத்தின் கொடிய தன்மையை எடுத்துக் கூறினாள். |
கடிதுஓடும் வெண்தேரை நீராம்என்று எண்ணிப்\nபிடியோடு ஒருங்கோடித் தாள்பிணங்கி வீழும்\nவெடியோடும் வெங்கானம் சேர்வார்கொல் நல்லாய்\nதொடியோடி வீழத் துறந்து | "தோழியே! என் கைவளையல்கள் கழன்று விழும்படி என் காதலர் என்னை விட்டு நீங்கி, விரைந்து ஓடும் கானல் நீரைத் தண்ணீராக்கும் என்று எண்ணி, ஆண் யானைகள் பெண்யானைகளுடன் ஒன்று சேர்ந்து போய்க் கால்கள் ஓய்ந்து விழும்படியான வெடிப்புகள் நிறைந்த கொடிய காட்டு வழியில் செல்வாரோ?" என்று தோழியிடம் தலைவி தலைவன் பிரிவு குறித்துக் கூறினாள். |
தோழியர் சூழத் துறைமுன்றில் ஆடுங்கால்\nவீழ்பவள் போலத் தளருங்கால் தாழாது\nகல்லதர் அத்தத்தைக் காதலன் பின்போதல்\nவல்லவோ மாதர் நடை | "தோழியர்கள் நாற்புறமும் சூழும்படி முற்றத்தில் என் மகள் விளையாடும் பொழுதிலும் விழுந்து விடுபவளைப் போன்று தளர்கின்ற அவளுடைய மென்மையான கால்கள், கற்கள் நிரம்பிய வழியான அருஞ்சுரத்தில் தன் தலைவன் பின்னால் ஓய்ந்து போகாமல் செல்லுதலில் வல்லனவோ?" என்று உடன்போக்குச் சென்ற தன் மகள் குறித்து நற்றாய் வருந்திக் கூறினாள். |
சுனைவாய்ச் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்\nபிணைமான் இனிதுண்ண வேண்டிக் கலைமாத்தன்\nகள்ளத்தின் ஊச்சும் சுரமென்பர் காதலர்\nஉள்ளம் படர்ந்த நெறி | கலைமான் - ஆண்மான், பிணை - பெண். "நம் காதலர் தமது மனத்தினால் விரும்பிச் சென்ற வழியானது, ஆண்மான் அங்குள்ள சுனையிலுள்ள சிறிய அளவு தண்ணீரைக் கண்டு இது இருவரும் பருகப் போதாது என எண்ணி, தன்னுடைய பெண்மான் மட்டும் குடிக்க வேண்டுமென்று பெரிதும் விரும்பி, பொய்யாகக் குடிப்பது போல உறிஞ்சும் என்று பாலை நிலவழி பற்றிச் சொல்லுவர்" என்று தோழி தலைவியை ஆற்றுவித்தாள். |
மடவைகாண் நன்நெஞ்சே மாண்பொருள் மாட்டோடப்\nபுடைபெயர் போழ்தத்து மாற்றாள் படர்கூர்ந்து\nவிம்மி யுயிர்க்கும் விளங்கிழையாள் ஆற்றுமோ\nநம்மில் பிரிந்த இடத்து | "நல்ல மனமே! நம்மை விட்டுப் பிரிகின்ற சிறிய அளவு காலத்திலும், பொறுக்க மாட்டாதவளாய்த் துன்பம் மிகுந்து, ஏங்கி, நெடுமூச்செறிகின்ற தலைவி, சிறந்த பொருளைத் தேடுதலுக்காக நாம் அவள் அறியா வண்ணம் சென்றால் பொறுப்பாளோ? பொறாது உயிர் நீப்பாள். இதனை நீ அறியவில்லை. ஆதலால் நீ பெரிதும் அறிவற்றவன்" என்று தலைவன் பொருள் இன்றியமையாதது என்று சொன்ன நெஞ்சிற்கு எடுத்துக் கூறித் தன் செலவைத் தவிர்த்தான். |
இன்றுஅல்கல் ஈர்ம்புடையுள் ஈர்ங்கோதை தோள்துணையா\nநன்கு வதிந்தனை நன்னெஞ்சே நாளைநாம்\nகுன்றதர் அத்தம் இறந்து தமியமாய்\nஎன்கொலே சேக்கும் இடம் | "நல்ல மனமே இன்றைய இரவில் குளிர்ந்த மலர்ப் படுக்கையில் எம் தலைவியின் தோள்கள் பேரின்பத்திற்குத் துணையாகுமாறு நன்றாகத் தங்கியுள்ளாய்; நாளை நாம் சிறு குன்றுகளுக்கு இடையே செல்லும் வழியாகிய அருநெறி வழியே துணையின்றிப் போகும்போது அப்பாலை நிலத்தில் தங்குமிடம் யாதோ?" என்று பொருள் இன்றியமையாதது என்று கூறிய நெஞ்சிற்கு இவ்வாறு கூறித் தன் செலவினைத் தவிர்த்தான். |
தெண்கடற் சேர்ப்பன் பிரியப் புலம்பு அடைந்து\nஒள்தடங்கண் துஞ்சற்க ஒள்ளிழாய் நண்படைந்த\nசேவலும் தன்அருகில் சேக்குமால் என்கொலோ\nபூந்தலை அன்றில் புலம்பு | "ஒளியினையுடைய அணிகலன்களை அணிந்த தலைவியே! தெளிந்த கடல் துறையையுடைய தலைவன், இரவுக் குறியில் உன்னைக் காணாமல் பிரிந்து செல்ல, அதனால் நீ தனிமை அடைந்தாய். ஆதலின் நின் ஒளிமிக்க கண்கள் இந்த நாள் இரவும் உறங்காது. ஆனால் காதல் மிகக் கொண்டுள்ள ஆண் அன்றில் பறவை தனக்குப் பக்கத்தே தங்கியிருக்கவும், சிவந்த பூவினைப் போன்ற தலையையுடைய அன்றில் பறவை நேற்று இரவு விடியுமளவும் வருந்தியது என்ன காரணமோ?" என்று தோழி தலைமகளை வினவினாள். |
கொடுந்தாள் அலவ குறையாம் இரப்பேம்\nஒடுங்கா ஒலிகடல் சேர்ப்பன் நெடுந்தேர்\nகடந்த வழியைஎம் கண்ணாரக் காண\nநடந்து சிதையாதி நீ | "வளைந்த கால்களையுடைய நண்டே! ஒரு வேண்டுகோளை நாம் உன்னிடத்தில் கேட்டுக் கொள்கிறோம். குறையாத ஒலியையுடைய கடலைச் சார்ந்த எம் நெய்தல் நிலத் தலைவனது பெரிய தேரானது என்னைப் பிரிந்து சென்ற காலத்து ஊர்ந்து சென்ற தேர்ச் சக்கரங்கள் பதிந்த சுவடுகளை, எம்முடைய கண்கள் நன்றாகப் பார்க்கும்படி அதன் மேல் சென்று நீ அழிக்காமல் இருப்பாயாக" என்று தலைவி கடற்கரையில் கண்ட நண்டிடத்து மிகுந்த துன்பத்துடன் கூறினாள். |
பொரிப்புறப் பல்லிச் சினையீன்ற புன்னை\nவரிப்புற வார்மணல்மேல் ஏறித் தெரிப்புறத்\nதாழ்கடற் தண்சேர்ப்பன் தார்அகலம் நல்குமேல்\nஆழியால் காணாமோ யாம் | "தாழ்ந்து ஆழமாக உள்ள கடலோடு கூடிய குளிர்ந்த துறைமுகத்தையுடைய தலைவனது மாலைகள் அணிந்த மார்பினை நமக்குக் கொடுப்பது உறுதியெனின், பொரிந்த பல்லியின் முட்டையினைப் போன்ற அரும்புகளைத் தோற்றுவித்த புன்னை மரத்தினது பூந்துகள் வரியாகக் கிடக்கும் மேற்பாகத்தினையுடைய உயர்ந்த மணல் மேட்டின் மீது ஏறிச் சென்று அமர்ந்து இருந்து, கூடல் இழைப்பதன் வாயிலாய் நாம் அதனை அறிய மாட்டோமா?" என்று தலைவி தனக்குத்தானே கூறிக் கொண்டாள். |
கொண்கன் பிரிந்த குளிர்பூம் பொழில்நோக்கி\nஉண்கண் சிவப்ப அழுதேன் ஒளிமுகம்\nகண்டன்னை எவ்வம்யா தென்னக் கடல்வந்தென்\nவண்டல் சிதைத்ததென் றேன் | "இற்செறிந்த காரணத்தால் நின் தலைவன் பிரிந்து சென்ற குளிர்ந்த மலர்கள் நிறைந்த சோலையைப் பார்த்து, மையுண்ட கண்கள் சிவக்கும்படி கண்ணீர் விட்டு நின்றேன். அப்பொழுது செவிலித்தாய் ஒளிமிக்க என் முகத்தைப் பார்த்து 'உனக்குற்ற துன்பம் யாது?' எனக் கேட்டாள். அதற்கு நான் 'கடலின் அலையானது தரை மீது மோதி என் விளையாட்டுச் சிற்றிலை அழித்து விட்டது' என்று கூறினேன்" என்று தோழி, பகற்குறிக்கண் மறைந்திருக்கும் தலைவன் கேட்கும்படி தலைவியினுடைய இற்செறிப்பைக் குறிப்பாகக் கூறினாள். |
ஈர்ந்தண் பொழிலுள் இருங்கழித் தண்சேர்ப்பன்\nசேர்ந்தென் செறிவளைத்தோள் பற்றித் தெளித்தமை\nமாந்தளிர் மேனியாய் மன்ற விடுவனவோ\nபூந்தண் பொழிலுள் குருகு | "மாந்தளிர் போன்ற மேனியையுடைய மங்கையே! பெரிய உப்பங்கழிகளைக் கொண்ட குளிர்ந்த கடற்கரைத் தலைவன், மிகக் குளிர்ந்த சோலையுள் என்னைக் கலந்து, பின்பு என் வளையல்கள் அணிந்த தோள்களைப் பற்றி என் உள்ள வருத்தத்தைப் போக்குவதாகச் சொன்ன உறுதிமொழிகளைப் பொலிவோடு விளங்கும் குளிர்ந்த அச்சோலையுள் வாழும் பறவைகள் உண்மையாக மறந்துவிடுமோ?" எனத் தலைவி தோழியிடம் சொல்லித் தன் மண வேட்கையைக் குறிப்பாகத் தெரிவித்தாள். |
ஓதம் தொகுத்த ஒலிகடல் தண்முத்தம்\nபேதை மடவார்தம் வண்டல் விளக்கயரும்\nகானலம் சேர்ப்ப தகுவதோ என்தோழி\nதோள்நலம் தோற்பித்தல் நீ | "அலைகளால் சேர்க்கப்பட்ட ஒலிக்கும் கடலில் விளைந்த குளிர்ந்த முத்துக்களைப் பேதைப் பருவமுடைய சிறு பெண்கள் தம் விளையாட்டு மனைக்கு விளக்குகளாகக் கொண்டு விளையாடற்கு இடமான கடற்கரைச் சோலையையுடைய அழகிய கடற்கரைத் தலைவனே! நீ என் தோழியான தலைவியின் தோள்களின் நலத்தை திருமண வேட்கையால் மெலிவித்தல் சரியா?" என்று தோழி தலைவனை வினவினாள். |
பெருங்கடல் உள்கலங்க நுண்வலை வீசி\nஒருங்குடன் தன்னைமார் தந்த கொழுமீன்\nஉணங்கல்புள் ஒப்பும் ஒளியிழை மாதர்\nஅணங்காகும் ஆற்ற எமக்கு | "பெருங்கடலானது கலங்கும்படி, நுண்ணிய வலையை வீசி, ஒன்றாகத் தமையன்மார்கள் கொண்டு வந்த கொழுத்த மீன்களை, வெயிலில் காயவைத்து வற்றலாக்குங்கால், அவற்றைக் கவர்ந்து செல்லவரும் பறவைகளைக் கவரவிடாமல் பாதுகாக்கும், மின்னும் அணிகளை அணிந்த அப்பெண், மிகுதியும் எம்மை வருத்தும் தெய்வம் போல் ஆவாள்" என்று தலைவன் பாங்கனிடம் கூறினான். |
எக்கர் இடுமணல்மேல் ஓதம் தரவந்த\nநித்திலம் நின்றிமைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப\nமிக்க மிகுபுகழ் தாங்குபவோ தற்சேர்ந்தார்\nஒற்கம் கடைப்பிடியா தார் | "அலையானது கரைமேல் மோதி உருவாக்கிய மணலின் மீது, அந்த அலையால் கொணரப்பட்ட முத்துக்கள் நின்று நிலையாய் ஒளி வீசும் நீண்ட உப்பங்கழிகளையுடைய தலைவனே! தம்மைச் சேர்ந்தாரின் குறைகளை விலக்க முன்வராதவர் உலகத்தவரால் போற்றப்படுவரா? போற்றப்பட மாட்டார்" எனத் தலைவியின் மண விருப்பத்தை முடிக்கும்படி தோழி தலைவனிடத்தில் குறிப்பாய்க் கூறினாள். |
கொடுமுள் மடல்தாழைக் கூம்பவிழ்ந்த ஒண்பூ\nஇடையுள் இழுதொப்பத் தோன்றிப் புடையெலாம்\nதெய்வம் கமழும் தெளிகடல் தண்சேர்ப்பன்\nசெய்தான் தெளியாக் குறி | "வளைந்த முள்ளையுடைய மடல்களைக் கொண்ட தாழையினது குவிதல் நீங்கி மலர்ந்த ஒளிமிக்க மலரானது நடுவேயுள்ள சோற்றினால் வெண்ணெயினைப் போல் வெளிப்பட்டுப் பக்கங்களில் எல்லாம் தெய்வமணத்தைப் போல் மணம் கமழும் தெளிந்த கடலையுடைய குளிர்ந்த துறையையுடைய தலைவன், நம்மால் அறிந்து கொள்ள முடியாத குறியினைச் செய்து விட்டான்" என்று தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி கூறினாள். |
அணிகடல் தண்சேர்ப்பன் தேர்ப்பரிமாப் பூண்ட\nமணிஅரவம் என்றெழுந்து போந்தேன் கனிவிரும்பும்\nபுள்ளரவம் கேட்டுப் பெயர்ந்தேன் ஒளியிழாய்\nஉள்ளுருகு நெஞ்சினேன் ஆய் | "ஒளியோடு கூடிய அணிகலன்களை அணிந்த பெண்ணே! அழகிய கடலோடு கூடிய குளிர்ந்த நீர்த்துறையையுடைய தலைவனது தேரில் பூட்டப்பட்ட குதிரைகள் அணிந்திருக்கும் மணியோசை கேட்கின்றது என எண்ணி வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தேன். ஆனால் பழங்களை விரும்பி உண்ண வந்த பறவைகளின் ஒலியைக் கேட்டுத் தலைவனின் தேர் மணியோசை அன்று என்று வருந்தி அவ்வருத்தமுடைய நெஞ்சத்தோடு நான் திரும்பினேன்" என்று தோழி தலைவியிடம் கூறினாள். |
புகழ்மிகு சாந்தெறிந்து புல்லெரி யூட்டிப்\nபுகைகொடுக்கப் பெற்ற புலவோர் துகள்பொழியும்\nவானுயர் வெற்ப இரவின் வரல்வேண்டா\nயானை யுடைய கரம் | புகழ்மிகுந்த சந்தனங்களை வெட்டிப் புல்லும்படி எரியூட்டியமையானே புகையினைக் கொடுக்கப் பெற்ற அண்டர் துகள் பொழிகின்ற வானளவு முயர்ந்த வெற்பனே! இரவின்கண் வரல்வேண்டா, நீ வருகின்ற வழி யானை வருகின்ற சுரங்களாதலான். |
கணமுகை கையெனக் காந்தள் கவின\nமணமுகை யென்றெண்ணி மந்திகொண் டாடும்\nவிறன்மாலை நாட வரிஅரிதாங் கொல்லோ\nபுனமும் அடங்கின காப்பு | திரட்சியையுடைய மொட்டுக்களைக் கையென்று கருதும்படி காந்தள் அழகுபெற அரும்ப, அதன் மணத்தையுடைய முகைகளென்று கருதி மந்திகள் கொண்டாடுகின்ற மிகுதியையுடைய மலை நாடனே! நீ இங்கு வருதலரிதாங்கொல்லோ; புனங்களும் தினையரியப்பட்டுக் காவலொழிந்தன. |
ஓங்கல் இறுவரைமேல் காந்தள் கடிகவினப்\nபாம்பென ஓடி உரும்இடிப்பக் கண்டிரங்கும்\nபூங்குன்ற நாடன் புணர்ந்தஅந் நாள்போலா\nஈங்கு நெகிழ்ந்த வளை | மலையினது பக்கமலைமேற் காந்தள் புதிதாக அழகுபெறுதலால், அவற்றின் முகைகளைப் பாம்பென்று கருதிச் சென்று உருமு இடித்தலான், அவற்றைப் பிறர் கண்டிரங்குகின்ற பூங்குன்ற நாடன் புணர்ந்த அந்நாள் போலாவாய், இக்காலத்து நெகிழ்ந்து கழன்ற வெள் வளைகள். |
ஏனல் இடத்திட்ட ஈர்மணிகொண்டு எல்லிடைக்\nகானவர் மக்கள் கனலெனக் கைகாய்த்தும்\nவானுயர் வெற்பன் வருவான்கொல் என்தோழி\nமேனி பசப்புக் கெட | ஏனலிடத்திட்ட குளிர்ந்த மணிகளைக் கொண்டு இரவின்கட் குறவர்மக்கள் தங்குளிர் நீங்கக் காயும் வானின் கண்ணே யுயர்ந்த வெற்பன் ஈங்கு வருவான் கொல்லோ? என்னுடைய தோழி மேனியிற் பசப்புக்கெட. |
விரைகமழ் சாரல் விளைபுனம் காப்பார்\nவரையிடை வாரல்மின் ஐய உரைகடியர்\nவில்லினர் வேலர் விரைந்துசெல் அம்பினர்\nகல்லிடை வாழ்நர் எமர் | விரை கமழாநின்ற சாரலின்கண் விளைபுனங் காப்பர்கள், இம்மலையின்கண் வரவேண்டா ஐயனே! கடுங்சொல்லினர், வில்லினர், வேலர், விரைந்து செல்லுமம்பினர் மலையின்கண் வாழ்வாராகிய வெமர். |
யானை உழலும் மணிகிளர் நீள்வரைக்\nகானக வாழ்க்கைக் குறவர் மகளிரேம்\nஏனலுள் ஐய வரவுமற்று என்னைகொல்\nகாணினும் காய்வர் எமர் | யானைகள் உழன்று திரியும் அழகுமிக்க நீள்வரைக் கானகத்து வாழும் வாழ்க்கையினையுடைய குறவர் மகளிரேம் யாங்கள்; எனலின்கண் நீரே வருதல் என்ன பயனுளது? ஐய! நும்மைக் காணினும் நீர் வந்தீரென்று கேட்பினும் நும்மை வெகுள்வர் எமர். |
யாழும் குழலும் முழவும் இயைந்தன\nவீழும் அருவி விறன்மலை நன்னாட\nமாழைமான் நோக்கியும் ஆற்றாள் இரவரின்\nஊரறி கெளவை தரும் | யாழுங் குழலு முழவுந் தம்முள் பொருந்தியொலித்தாற்போல வீழாநின்ற அருவியையுடைய மிக்க மலைநாடனே! மதர்ப்பிணையுடைய மான் போன்ற நோக்கினையுடையாளும் ஆற்றமாட்டாள்; நீர் இரவின்கண் வருதிராயின், ஊரும் பிறரும் அறியும் அலரைத்தரும். |
வேங்கை மலர வெறிகமழ் தண்சிலம்பின்\nவாங்கமை மென்தோள் குறவர் மகளிரேம்\nசோர்ந்து குருதி ஒழுகமற்று இப்புறம்\nபோந்ததுஇல் ஐய களிறு | வேங்கை மலர்தலான் வெறிகமழா நின்ற தண்சிலம்பின் கண்ணே வளைந்த மூங்கில் போன்ற மெல்லிய தோளையுடைய குறவர் மகளிரேம் யாங்கள்; குருதி பாய்ந்தொழிக, இவ்விடத்தின்கண் போந்ததில்லை, ஐயனே! களிறு. |
பிணிநிறம் தீர்ந்து பெரும்பணைத்தோள் வீங்க\nமணிமலை நாடன் வருவான்கொல் தோழ\nகணிநிறை வேங்கை மலர்ந்துவண்டு ஆர்க்கும்\nஅணிநிற மாலைப் பொழுது | நோயான் வந்த நிறத்தீர்ந்து, பெரும் பணைத்தோள் பெருப்ப அழகிய மலைநாடன் வருவான் கொல்லோ? தோழி! கணியைப்போல நாட்சொல்லும் நிறை வேங்கை மலர்ந்து வண்டுகள் ஒலியாநின்ற நீலமணி போன்ற நிறத்தினையுடைய மாலைப்பொழுதின்கண. |
பலவின் பழம்பெற்ற பைங்கட் கடுவன்\nஎலஎன்று இணைபயிரும் ஏகல்சூழ் வெற்பன்\nபுலவுங் கொல் தோழி புணர்வறிந்து அன்னை\nசெலவுங் கடிந்தாள் புனத்து | பலாப்பழத்தினைப் பெற்ற பசுங்கண்ணினையுடைய குரங்கினுட் கடுவன், “ஏடி!” என்று தனக்கிணையாகிய மந்தியை யழைக்கும் பெற்றிய கற்கள் சூழ்ந்த வெற்பன் நம்மை யூடுங்கொல்லோ? தோழி! நங்காதலரோடு புணர்ந்த புணர்ச்சியையறிந்து புனத்துச் செல்லும் செலவினையுந் தவிர்த்தாள் அன்னையாதலால். |
கழுநீர் மலர்க்கண்ணாய் கெளவையோ நிற்கப்\nபொருள்நீரார் காதலர் பொய்த்தனர் நீத்தார்\nஅழிநீர் வாகி அரித்தெழுந்து தோன்றி\nவழிநீர் அறுத்த சுரம் | செங்கழுநீர் மலர்போன்ற கண்ணினையுடையாய்! அவர் பிரிந்ததால் நிகழும் அலர் நிற்க, பொருண்மேல் நீர்மையையுடையராய் நங்காதலர் முன் சொல்லிய சொல்லைப் பொய்த்து நம்மை நீங்குவார் போனார்; அங்குள்ளார் அழியும் நீர்மையவாகிப் பசையறு தனக்குத் தோன்றிப்போம்வழியின்கண் நீரறுத்த சுரங்களின்கண்ணே. |
முரிபரல வாகி முரணழிந்து தோன்றி\nஎரிபரந்த கானம் இயைபொருட்குப் போவீர்\nஅரிபரந்த வுண்கண்ணாள் ஆற்றாமை நும்மின்\nதெரிவார்யார் தேரும் இடத்து | முரிபரந்த பருக்கையினையுடையவாய் வலியழிந்து தோன்றி, எரிபரந்த கானத்தின்கண் இயற்றும் பொருட் பொருட்டுச் செல்வீர்! அரிபரந்த உண் கண்ணாள் ஆற்றாளென்னுந் திறத்தை நும்மைப்போல, பிறரறிகிற்பார் யார் ஆராயுமிடத்து? |
ஓங்கு குருந்தோடு அரும்பீன்று பாங்கர்\nமராஅ மலர்ந்தன தோன்றி விராஅய்க்\nகலந்தனர் சென்றார் வலந்தசொல் எல்லாம்\nபொலந்தொடீஇ பொய்த்த குயில் | ஓங்கிய குருந்தோடே கூட அரும்புகளையீன்று பாங்கராகிய மராஅமரமும் விளங்கி மலர்ந்தன; புணர்ந்து விரவிக் கலந்து சென்ற நங்காதலர் வலந்த சொல்லெல்லாம் பழுதாக்கின, குயில்கள் : பொலந்தொடீ! |
புன்னை பொரிமலரும் பூந்தண் பொழிலெல்லாம்\nசெங்கண் குயில்அக வும்போழ்து கண்டும்\nபொருள்நசை உள்ளம் துரப்பத் துறந்தார்\nவருநசை பார்க்கும்என் நெஞ்சு | புன்குகள் பொரிபோல மலரப் பூந்தண் பொழில்களெல்லாஞ் செங்கட் குயில்கள் கூவுகின்ற போழ்துகண்டும், முன்பு பொருணசையையுடைய ஊக்கந்துரப்ப நம்மை நீங்கினர் வருநசையைப் பாராநின்றது என் நெஞ்சு. |
சிறுபுன் புறவொடு சிற்றெழால் சீறும்\nநெறியரு நீள்சுரத்து அல்குவர்கொல் தோழி\nமுறிஎழில் மேனி பசப்ப அருள்ஒழிந்து\nஆர்பொருள் வேட்கை அவர் | சிறிய புல்லிய புறவினொடு சிறிய புல்லூறு வெகுளும் வழியரிய நீள்சுரத்தின்கட்டங்குவர் கொல்லோ? தோழி! தளிரினது அழகு போன்றிருந்த என்மேனி பசப்ப, நம்மேலுள்ள அருளினை ஒழிந்து நிறைந்த பொருளினை வேட்ட வேட்கையை யுடையவர. |
கருங்கால் மராஅம் நுணாவோடு அலர\nஇருஞ்சிறை வண்டினம் பாலை முரல\nஅரும்பிய முள்ளெயிற்று அஞ்சொல் மடவாய்\nவிரும்புநாம் செல்லும் இடம் | கருங்காலினையுடைய மராமரங்கள் நுணாவொடு மலர, இருஞ்சிறை வண்டினங்கள் பாலையென்னும் பண்ணினை முரல, அரும்பிய முள்ளெயிற்றினையும், அழகிய சொல்லினையுமுடைய மடவாய்! நாம் செல்லும் வழியை விரும்புவாய். |
கல்லதர் வாயில் கருந்துடி கள்பம்பும்\nவில்லுழுது வாழ்நர் குறும்புள்ளும் போவர்கொல்\nஎல்வனை மென்தோள் நெகிழப் பொருள்நசைஇ\nநல்கா துறந்த நமர் | கல்லையுடைய வழிமருங்கிலுள்ள குறும்புகளின் வாயிறோறும் அச்சத்தைச் செய்யந் துடிகள் நின்று இயம்பும் வில்லுழுது வாழ்வார் குறும்பின்கண்ணுஞ் செல்வர் கொல்லோ? இலங்கும் வளை மென்றோள் மெலியும்படி பொருட்காதலால் நம்மை நல்காது நீங்கிய நமர். |
கதிர்சுடக் கண்ணுடைந்து முத்தம் சொரியும்\nவெதிர்பிணங்கும் சோலை வியன்கானம் செல்வார்க்கு\nஎதிர்வன போல்இலவே எவ்வளையோ கொன்னே\nஉதிர்வன போல உள | வெயில் சுடுதலாற் கண்பிளந்து முத்தங்களைச் சொரியாநின்ற வேய்பிணங்குஞ் சோலையையுடைய அகன்ற கானத்துஞ் செல்லக் கருதினார்க் குடன்படுவன போன்றிருந்தனவில்லை; என்னிலங்கு வளையோ கொன்னே நிலத்தின்கட் சிந்துவன போன்றன. |
கலையொடு மான்இரங்கும் கல்லதர் அத்தம்\nநிலைஅஞ்சி நீள்சுரத்து அல்குவர்கொல் தோழி\nமுலையொடு சோர்கின்ற பொன்வண்ணம் அன்னோ\nவளையொடு சோரும்என் தோள் | கலையொடு மான்கள் துன்புற் றிரங்காநிற்கும் மலைவழிகளையுடைய கடறுகளின் இப்பெற்றிப் பட்டுள்ள நிலையஞ்சிச் சுரத்தின்கட் டங்குவர் கொல்லோ? தோழி! முலையோடு சோர்கின்றன போன்ற வண்ணங்கள்; அந்தோ! வளையுடனே தளர்ந்து சோர்கின்ற என்றோள்கள். |
ஏற்றிய வில்லின் எயினர் கடுஞ்சுரம்\nபாற்றினம் சேரப் படுநிழல் கண்டஞ்சிக்\nகூற்றின வல்வில் விடலையோடு என்மகள்\nஆற்றுங்கொல் ஐய நடந்து | நாணேற்றிய வில்வினையுடைய வேடர் வாழும் கடுஞ்சுரத்தின்கட் பாற்றினஞ் சேரப்படுகின்ற நிழலைக் கண்டஞ்சி, என்மகள் கூற்றன்ன வல்வில்லையுடைய விடலையுடனே சென்றாற்ற வல்லள்கொல்லோ மெல்லிதாக நடந்து. |
அஞ்சனக் காயா மலரக் குருகிலை\nஒண்டொடி நல்லார் முறுவல் கவின்கொளத்\nதண்கழற் கோடல் துடுப்புஈனக் காதலர்\nவந்தார் திகழ்நின் தோள் | அஞ்சனம் போலக் காயாக்கள் மலர, குருகிலைகள் ஒண்டொடியுடைய நல்லார் முறுவல்போல அழகு கொள்ள, குளிர்ந்த கோடல்கள் துடுப்புப்போலப் பூங்குலையை யீனாநிற்ப, நங்காதலர் வந்தார்; நின்னுடைய தோள்கள் விளங்குவனவாக. |
மென்முலைமேல் ஊர்ந்த பசலைமற்று என்னாங்கொல்\nநன்னுதல் மாதராய் ஈதோ நமர்வருவர்\nபல்நிற முல்லை அரும்பப் பருவஞ்செய்து\nஇன்னிறம் கொண்டதுஇக் கார் | நின்னுடைய மெல்லிய முலைமேலேறிய பசலை நிறம் என்னாங் கொல்லோ? நன்னுதலையுடைய மாதராய்! நமர் ஈதோ வருவர்: பற்போன்றிருந்த நிறத்தையுடைய முல்லைகள் தாம் முகையரும்பப் பருவத்தைச் செய்து கண்டார்க்கினிய நிறத்தைக் கொண்டது இக்கார். |
சென்றார் வருவர் செறிதொடீஇ காரிதோ\nவெஞ்சின வேந்தர் முரசின் இடித்துரறித்\nதண்கடல் நீத்தம் பருகித் தலைசிறந்து\nஇன்றையில் நாளை மிகும் | நம்மைப் பிரிந்து போயினார் வருவர்; செறிதொடீஇ! இக்காலம் கார் காலமாயிருந்தது; வெஞ்சின வேந்தர் முரசுபோ விடித்து முழங்கித் தண்கடல் வெள்ளத்தைப் பருகி மேன்மேற் சிறந்து இன்றையின் நாளை மிகுங்காண். |
செஞ்சுணங்கின் மென்முலையாய் சேர்பசலை தீர்இதோ\nவஞ்சினம் சொல்லி வலித்தார் வருகுறியால்\nவெஞ்சினம் பொங்கி இடித்துஉரறிக் கார்வானம்\nதண்பெயல் கான்ற புறவு | செஞ்சுணங்கினையுடைய மெல்லிய முலையாய்! நின்னைச் சேர்ந்த பசலை நீங்குவதாக; சூளுறவாகிய சொற்களைச் சொல்லி நம்மை வற்புறுத்தினார் தாம் வருதற்குச் சொல்லிய குறியால். வெஞ்சினத்தாற் பொங்கியது போல இடித்து முழங்கிக் கறுத்த முகில்கள் தண்பெயலைப் புறவின்கண்ணே யுகுத்தனவாதலால், காரிது. |
கருவியல் கார்மழை கால்கலந்து ஏத்த\nஉருகு மடமான் பிணையோடு உகளும்\nஉருவ முலையாய் நம் காதலர் இன்னே\nவருவர் வலிக்கும் போது | கருவியன்ற கரியமழை காற்றோடு கலந்துயர்தலால், முன் வெம்மையால் உருகும் மடமான்கள் தம் பிணையோடு உகளாநின்றன; நிறத்தையுடைய முலையாய்! நங்காதலர் இப்பொழுதே வருவார்; இக்காலம் நம்மைத் தோற்றுவியாநின்றது. |
இருங்கடல் மாந்திய ஏர்கொள் எழிலி\nசுருங்கொடி முல்லை கவின முழங்கிப்\nபெரும்பெயல் தாழப் பெயர்குறி செய்தார்\nபொருந்த நமக்குரைத்த போழ்து | பெருங்கடலைப் பருகிய அழகுகொண்ட முகில், கருங்கொடி முல்லைகள் அழகுபெறும்படி முழங்கிப் பெரும் பெயல் தாழாநிற்க, பெயர்ந்து வருவேமென்று காதலர் குறிசெய்தாராகலால், நமக்குப் பொருந்த அவருரைத்த கால மிது. |
ஆயர் இனம்பெயர்த்து ஆம்பல் அடைதாய்\nபாய முழங்கிப் படுகடலுள் நீர்முகந்து\nமாயிரு ஞாலம் இருள்கூர் மருண்மாலை\nசெயவர் செய்த குறி | ஆயர்கள் இனத்தை ஊரின்கண்ணே பெயர்வித்து ஆம்பற்குழலை மருவ, ஒலிக்குங் கடலுள் நீரை முகந்து பரக்க முழங்குதலான், மாயிரு ஞாலமெல்லாம் இருள்மிக்கு மயங்கும் மாலைப்பொழுது நம்மைப் பிரிந்து சேயராயினார் வருவதற்குச் சொல்லிய குறி. |
அதிர்குரல் ஏறோடு அலைகடல் மாந்தி\nமுதிர்மணி நாகம் அனுங்க முழங்கிக்\nகதிர்மறை மாலை கனைபெயல் தாழப்\nபிதிரும் முலைமேல் கணங்கு | அலைகடலைப் பருகி அதிராநின்ற குரலினையுடைய உருமேற்றோடு முதிர்ந்த மணிநாகங்கள் வருந்தும் வகை முழங்கி, வெயில்மறைந்த மாலைப் பொழுது மிக்க பெயல் தாழ்தலான், இவள் முலைமேற் சுணங்குகள் பிதிர்ந்தாற்போல இனிப்பாக்கும். |
கோடல்அம் கூர்முகை கோளரா நேர்கருதக்\nகாடெலாம் கார்செய்து முல்லை அரும்புஈன\nஆறெலாம் நுண்ணறல் வார் அணியிழாய்\nபோதராய் காண்பாம் புறவு | காந்தளின் மிக்க அரும்புகள் கோளராவிற்கு மாறாகக் கருதிக் காடெல்லாங் கார்ப்பருவத்தைச் செய்து முல்லையரும்புகளை யீன, வழிகளெல்லாம் நுண்ணிய அறல் மணல் மேலொழுகுதலால், அணியிழையை யுடையாய்! புறவினைக் காண்பாம் போதராய். |
அருளி அதிரக் குருகிலை பூப்பத்\nதெரிஆ இனம்நிறை தீம்பால் பிலிற்ற\nவரிவனைத் தோளி வருவார் நமர்கொல்\nபெரிய மலர்ந்ததுஇக் கார் | மலையருவிகள் வந்து முழங்க, குருகிலைகள் பூப்ப, தெரிந்த ஆனினங்கள் இனிய பாலைப்பொழிய, வரிவளைத் தோளினையுடையாய்! நமர் வருவார் கொல்லோ? பெரியவாயுள்ள அழகுகளை மலர்ந்தது இக்கார் ஆதலான். |
பழனம் படிந்த படுகோட்டு எருமை\nகழனி வினைஞர்க்கு எதிர்ந்த பறைகேட்டு\nஉரனிழிந்து ஓடும் ஒலிபுனல் ஊரன்\nகிழமை யுடையன்என் தோட்டு | பழனத்தின்கட் படிந்த படுகோட்டினையுடைய எருமை கழனியின்கட் டொழில் செய்வார்க்கு எறிந்த பறையொலியைக் கேட்டு வெருவி, அறிவழிந்தோடும் ஒலிபுனலையுடைய வூரன் என்றோட் குரிமை யுடையன் என்னும் இத்துணையே யமையும்; அவன் எனக்கு நல்குதல் வேண்டுவதில்லை. |
கணைக்கால் நெடுமருது கான்ற நறுந்தாது\nஇணைக்கால் நீலத்து இதழ்மேல் சொரியும்\nபணைத்தாள் கதிர்ச்செந்நெல் பாய்வயல் ஊரன்\nஇணைத்தான் எமக்குமோர் நோய் | திரண்ட காலையுடைய மருதுகள் உகுத்த நறுந் தாதுகள் ஒத்த தாளினையுடைய நீலங்களின் இதழ் மேலே சொரியும் பெருந்தாட் கதிரையுடைய செந்நெற் பரந்த வயலூரன் பரத்தையர்க் கின்பத்தை இணைத்தலே யன்றி, எமக்குமோர் பசலை நோயினை யிணைத்தான். |
கடையாயார் நட்பேபோல் காஞ்சிநல் ஊர\nஉடைய இளநலம் உண்டாய் கடைய\nகதிர்முலை ஆகத்துக் கண்ணன்னார் சேரி\nஎதிர்நலம் ஏற்றுநின் றாய் | கீழாயினார் நட்பே போலக், காஞ்சிமரங்களையுடைய நல்லூரனே! என்றோழியுடைய இளநலமெல்லாம் முன்பு நுகர்ந்தாய்; பின்னை அக் கதிர்முலை யாகத்துக் கண்ணனையார் சேரிக்கட்சென்று மற்றவர் இளமை எதிர் நலத்தை எதிரேற்று நின்றாய். |
செந்நெல் விளைவய லூரன் சிலபகல்\nதன்னலம் என்அலார்க்கு ஈயான் எழுபாண\nபாரித்த அல்குல் பணைத்தோளார் சேரியுள்\nவாரிக்குப் புக்குநின் றாய் | செந்நெல் விளைகின்ற வயலினையுடைய ஊரன் முன்பு சில நாள் தன்னலத்தை யா னல்லாதார்க் கீயான்; இப்பொழுது பாரித்த அல்குற் பணைத்தோளையுடைய பரத்தையர் சேரியின்கண் மற்றவர் தலைமகற்கே நல்கும் வாரிக்குப் புக்கு நின்று ஆராய்வாயாக: ஆகையால், பாண! இங்குநின்றும் ஏழுவாயாக. |
வேனிற் பருவத்து எதிர்மலரேல் தூதும்\nகூனிவண்டு அன்ன குளிர்வயல் நல்லூரன்\nமாணிழை நல்லார் இளநலம் உண்டவர்\nமேனி ஒழிய விடும் | வேனிற்காலத் தெதிர்ந்த மலர்களை ஏற்றுக் கொண்டூதும் கூனிவண்டு போலுங் குளிர்வயல் நல்லூரன்; ஆகலான், மாட்சிமைப்பட்ட இழையையுடைய நல்லாரின் நலத்தை நுகர்ந்து மற்றவர் உடம்பினை ஒழிய விடும். |
செந்தா மரைலருஞ் செய்வயல் நல்லூர\nநொந்தான்மற்று உன்னைச் செயப்படுவது என்னுண்டாம்\nதந்தாயும் நீயே தரவந்த நன்னலம்\nகொண்டாயும் நீஆயக் கால் | செந்தாமரைகள் மலராநின்ற செய்யப்பட்ட வயல்களையுடைய நல்லூர! நீ செய்த பிழைகட்கு நொந்தால் நின்னைச் செய்யப்படுவ தென்னுள்ளதாம்? என்றோழி நலத்தைத் தந்தாயு நீயே; தரவந்த நன்னலத்தைக் கொண்டாயும் நீயேயாயினால் |
பல்காலும் வந்து பயின்றுரையல் பாண கேள்\nநெல்சேர் வயவல லூரன் புணர்ந்தநாள்\nஎல்வளைய மென்தோளேம் எங்கையர் தம்போல\nநல்லஅருள் நாட்டம்இ லேம் | பல பொழுதும் வந்து பயின்று சொல்லற்க; பாணனே! கேட்பாயாக; நெற் செறிந்த வளவயலூரன் எம்மைப் புணர்ந்த முன்னாளின்கண்ணும் எல்வளையம் மென்றோளேம்; எங்கையர் தம்மைப்போல நல்ல மடந்தையருள் வைத்து அவனாலெண்ணப்பட்டிலேம். |
நல்வயல் ஊரன் நலமுரைத்தும் நீபாண\nசொல்லிற் பயின்றுரைக்க வேண்டா ஒழிதிநீ\nஎல்லுநன் முல்லைத்தார் சேர்ந்த இருங்கூந்தல்\nசொல்லுமவர் வண்ணம் சோர்வு | நல்ல வயலூரனுடைய நன்மை யெல்லாம் நாங்களே அறிந்து உரைக்க வல்லேம்; பாணனே! நீ சொல்லாற் பயின்றுரைக்க வேண்டா; இனி ஒழிவாயாக; நிறமிக்க நன் முல்லைமாலை சேர்ந்த இருங்கூந்தலையுடைய பரத்தையே சொல்லா நின்றாள்; தன் மாட்டவர் காதலித்த வண்ணத்தையும், எம்மாட்டுள்ள அவரது இகழ்ச்சியையும். |
கருங்கயத்து ஆங்கண கழுமிய நீலம்\nபெரும்புற வாளைப் பெடைகதூஉம் ஊரன்\nவிரும்புநாள் போலான் வயின்நலம் உண்டான்\nகரும்பின்கோது ஆயினேம் யாம் | பெருங்கயத்த இடத்தின்கட் செறிந்த நீலங்களைப் பெரும்புறத்தினையுடைய வாளைப்பெடைகள் கதுவுகின்ற ஊரன் எம்மை விரும்பின நாட்போலான்; எம்முடைய வியனலத்தை முன்னே யுண்டான்; ஆதலான் இப்பொழுது கரும்பின் கோதுபோலவாயினேம். |
ஆம்பல் அணித்தழை ஆரம் துயல்வரும்\nதீம்புனல் ஊரன் மகளிவள் ஆய்ந்தநறும்\nதேமலர் நீலம் பிணையல் செறிமலர்த்\nதாமரை தன்ஐயர் பூ | ஆம்பலாற் செய்யப்பட்ட அணித் தழையும் ஆரமும் அல்குலின்கண்ணும், முலையின்கண்ணும் அசைந்து வருகின்ற தீம்புனலூரன் மகள் இவள் இவ்வூரின்கண் ஆய்ந்த நறுமலர் நீலம் பெண்பால் கட்டிச் சூடும் பூமாலை செறிந்த மலர்த் தாமரை மாலை அவள் ஐயன்மார்க்குச் சூடும் பூவாதலால், நீயும் தாமரை மாலையைச் சூடி வருவாயாக. |
நெய்தல் படப்பை நிறைகழித் தண்சேர்ப்பன்\nகைதைசூழ் கானலுள் கண்டநாள் போலானான்\nசெய்த குறியும்பொய் யாயின ஆயிழையாய்\nஐயகொல் ஆன்றார் தொடர்பு | நெய்தற்படப்பை நிறைகழித் தண் சேர்ப்பன் தாழை சூழ்ந்த கானலின்கண் நம்மைக்கண்ட முதனாள் போலானான்; அவனாற் செய்யப்பட்ட குறிகளும் பிழைத்தன; ஆயிழையாய்! அமைந்த நட்புச் செறிந்தன்றாகாதே யிருப்பது. |
முத்தம் அரும்பும் முடத்தாள் முதுபுன்னை\nதத்தும் திரைதயங்கும் தண்ணங் கடற்சேர்ப்ப\nசித்திரப் பூங்கொடி அன்னாட்கு அருள்ஈயாய்\nவித்தகப் பைம்பூணின் மார்பு | முத்தம்போல வரும்பாநின்ற முடத்தாண் முதுபுன்னையின்கண் வந்து தத்தாநின்ற திரைகள் துளங்காநின்ற தண்ணங் கடற் சேர்ப்பனே! எழுதிய சித்திரப்பூங்கொடி யன்னாட்கு நின்னருளினாலே நல்காய்; வித்தகப் பைம்பூணையுடைய நின் மார்பினை. |
எறிசுறா நீள்கடல் ஓதம் உலாவ\nநெறியிறாக் கொட்கும் நிமிர்கழிச் சேர்ப்பன்\nஅறிவுஅறா இன்சொல் அணியிழையாய் நின்னில்\nசெறிவுஅறா செய்த குறி | எறிசுறாவையுடைய நீள்கடலின்கண்ணுள்ள வோதம் வந்துலாவ வரிவரியாயிருந்துள்ள மேனியையுடைய இறாக்கள் சுழன்று திரிதருஞ் சேர்ப்பன் நின்னறிவின்கண் நீங்காதிருந்த இன்சொல் அணியிழையை யுடையாய்! நின்மனையின் புறத்து அச்சேர்ப்பன் செய்த குறிகள் பலகாலு முளவாகா நின்றன. |
இளமீன் இருங்கழி ஓதம் உலாவ\nமணிநீர் பரக்கும் துறைவ தகுமோ\nகுணநீர்மை குன்றாக் கொடியன்னாள் பக்கம்\nநினைநீர்மை இல்லா ஒழிவு | இனமீன்களையுடைய இருங்கழியின்கண்ணே வந்து ஓதங்களுலாவ நீலமணிபோன்ற நீர்பரக்குந் துறைவனே! தகுவதொன்றோ குணத்தன்மை குன்றாக் கொடியன்னாள் திறத்து நினையு நீர்மையின்றி யொழிதல் நினக்கு? |
கடல்கொழித்து ஈட்ட கதிர்மணி முத்தம்\nபடமணி அல்குல் பரதர் மகளிர்\nதொடலைசேர்த்து ஆடும் துறைவ என்தோழி\nஉடலுள் உறுநோய் உரைத்து | கடல் கொழித்துச் சிந்திய கதிர்மணி முத்தத்தைப் படம்போன்ற அழகிய அல்குற் பரதர் மகளிர் மாலையாகச் சேர்த்து விளையாடும் துறைவனே! என் தோழி மறுகாநிற்கும் தன்னுறு நோயை எனக் குரைத்து. |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.